குளிர்காலக் கவிதைகள்

January 8th, 2010 | வகைகள்: வகைப்படுத்தாதவை | 8 மறுமொழிகள் » |

அலுவலத்துக்கு வெளியே எடுத்த படம்.
அலுவலத்துக்கு வரும் வளியில் தோன்றிய கவிதைகள்.
காலநிலை
நொடிக்கு மூன்று கார்கள் செல்லும்
இந்தச் சாலையோரத்தில்
இரண்டடி பனிக்குவியலில்
கால்தடங்கள்.
நடுங்கியபடியே அங்கே
நடந்து சென்றவர் யார்?
வேலி தாண்டி ஓடி வந்த மெக்சிக்கரா?
வீடற்ற கறுப்பரா?
வாய்ப்புகளை மறுத்து விட்ட வெள்ளைக்காரரா?
அந்த வெள்ளைத் தாளில் தெரிவது
ஏழ்மையின் காலெழுத்துதானா?
இல்லை இன்னும் ஓட்டுநர் உரிமம்
வாங்காத இந்திய மென்பொருளாளரின்
இயலாமையா?
சற்று நேரத்தில்
அதுவும் அழிந்து போகும்
என்கிறது வானொலி.
-o0o-
பனி வீழ்ச்சி!
என்ன பாரம் தாங்காமல்
வந்து வீழ்ந்து கிடக்கிறது
மேகம்?

முழுதும் படிக்க...


கனி’வான’மொழி!

December 24th, 2009 | வகைகள்: ஆன்மீகம், இசை, இயேசு, கவிதை, பாடல் | 5 மறுமொழிகள் » |

ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி ’மார்கழியின் மடியில்’ எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் Silent Nightன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே.
மார்கழியின் மடியிலே
மாடடையும் குடிலிலே
மானுடத்தின் மீட்பனாய்
அன்னை மரியின் அணைப்பினிலே
இதழில் புன்னகை பூத்திருக்க
நிலவின் கதிர்போல
கண்வளராய் அழகே.
மார்கழியின் மடியிலே
வானின் வெள்ளி
அழைக்குதந்த அழைத்து வந்த
ஞானியர் உன்னை வணங்கி நின்றார்
காலமே உறைந்ததை மறந்து நின்றார்
வேதமே மெய்ப்பொருளே
கண்வளராய் அழகே.
கால காலமாக
தடங்கள் தேடினோமே
கனவு மெய்ப்படவே
கண்ணே வந்தாயோ?
மார்கழியின் மடியிலே
வானவர்கள் பண்ணிசைக்க
அன்பில் மானுடம் நெகிழ்ந்திடவே
வான்மழையாய் வந்த [...]

முழுதும் படிக்க...


’முதல் படிகள்’ – இசை வெளியீடு

November 9th, 2009 | வகைகள்: இசை, பாடல் | 8 மறுமொழிகள் » |

குளிர்காலம் வந்துவிட்டாலே ’போர்’ அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. பொழுதை போக்க ஏதேனும் புதிதாய் வாங்கி சோதித்துக்கொண்டேயிருப்பது வழக்கமாகிவிட்டது. இருக்கவே இருக்கிறது ’டீல்’ வலைமனைகள். இந்த வருடம் இதுவரை வாங்கியதில் முக்கியமானவை ஒரு துவக்க நிலை தொலைநோக்கி, மற்றும் M-Audio இசை தொகுக்கும் மென்பொருள்.  அதைக் கொண்டு உருவாக்கிய ஒரு இசைத்துண்டு. First Steps என ஒரு சில்லி பெயரை வைத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

First steps.wma

First Steps by Cyril alex
தமிழ்மணம் கருவிப்பட்டை பதிவுக்கு கீழே உள்ளது.

முழுதும் படிக்க...


ஸ்ருதி ஹாசனின் பாசமிகு அங்கிள்களுக்கு…

September 30th, 2009 | வகைகள்: ஆளுமை, சினிமா | 23 மறுமொழிகள் » |

டிஸ்கி எண் 1: அமெரிக்காவிலும் சில த்ராபை சினிமா தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் தான் அநேகம் தமிழ் படங்கள் வெளியாகின்றன.
டிஸ்கி எண் 2: நான் கமல் படங்களை விரும்பி பார்ப்பேன். கமல் படங்கள் மற்ற தமிழ் படங்களை விட பொதுவாக மேலானவை என நம்புபவன்.
டிஸ்கி எண் 3: உன்னைப்போல் ஒருவன் பார்க்கும்போது கொஞ்சம் சளியும் இருமலும் காய்ச்சலும் இருந்தது.
எவ்வளவோ முயன்றும் உன்னைப்போல் ஒருவன் படத்துடன் ஒன்ற முடியவில்லை. படத்தின் முதல் சறுக்கலே அங்கேதான் என நினைக்கிறேன். [...]

முழுதும் படிக்க...


தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

September 4th, 2009 | வகைகள்: அமெரிக்கா, அறிவுப்பு, ஆளுமை, இலக்கியம், சந்திப்பு, தகவல் | ஒரு மறுமொழி » |

பாரதி தமிழ் சங்கம்
தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை
தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ் சங்கம் வரவேற்று கவுரவிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக.
நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை
இடம்: Fermont Library Hall
Fremont Library
Stevenson Blvd and Paseo Padre intersection
Fremont, CA
நேரம்: [...]

முழுதும் படிக்க...


’போலி’ பதிவர்களுக்கு எச்சரிக்கை + வேண்டுகோள்

August 29th, 2009 | வகைகள்: சட்டம், சமூகம், தகவல், நிகழ்வு, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 16 மறுமொழிகள் » |

தமிழ்மணம் துவங்கி 5 வருடங்கள் ஆகப்போகின்றது. தமிழ்மணக் குழுவுக்கும், துவங்கி உரு கொடுத்த காசிக்கும் வாழ்த்துக்கள். தமிழ் பதிவுலக பிரம்மாண்ட வளர்ச்சிக்கு தமிழ்மணம் ஒரு இன்றியமையாத காரணம்.
திரட்டிகள் வந்தபோது பதிவர்களுக்கிடையேயான ஊடாடல் அதிகமாகியது. இது பல வாய்ப்புகளையும் வசதிகளையும் தந்தபோதும் சில பூசல்களையும், சீர்கேடுகளையும் உருவாக்கியது. அப்படி உருவானதொன்றுதான் ’போலி’ பதிவைத் துவங்கி அவதூறுகளை பரப்பும் செயல். அப்படி துவங்கப்பட்ட போலி பதிவு ஒன்று மிகவும் பிரபலமாகி தமிழக ஊடகங்கள்வரைக்கும் பேசப்பட்டது. மிகவும் பிரபலமான அந்தப் [...]

முழுதும் படிக்க...


‘யார் இந்த வள்ளுவன்?’ – திருவள்ளுவர் மீது ஒரு அவதூறு

July 14th, 2009 | வகைகள்: நகைச்சுவை, நையாண்டி | 25 மறுமொழிகள் » |

[மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ தமிழ் எழுத்தாளர்கள் மாறி மாறி பொழிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பொழிதல்களில் தெரியும் இலக்கியத் தன்மையும் சுவாரஸ்யமும் எந்த காப்பியத்திலும் இல்லை. வசை, அவதூறு என்பதை ஒரு இலக்கிய வகையாகவே வருங்காலத்தில் கருதக் கூடும். அவ்வகைக்கு நோபல் பரிசொன்றை தந்தார்களென்றால் தமிழன் நோபல் வாங்குவது உறுதி. வள்ளுவர் காலத்தில் திருவள்ளுவரை ஒருத்தர் சமகால முறையில் 'விமர்சித்திருந்தால்' எப்படி இருந்திருக்கும் எனும் அதீத கற்பனைதான் இது. ]

சமகால இலக்கியத்தில் எனக்கிருக்கும் முக்கியத்துவத்தை எனக்கு தினமும் வந்து [...]

முழுதும் படிக்க...


பதிவர் சிந்தாநதிக்கு அஞ்சலி

July 8th, 2009 | வகைகள்: சற்றுமுன், நல்லவர், நிகழ்வு, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 4 மறுமொழிகள் » |

பதிவர் சிந்தாநதி மறைந்த செய்தி டிவிட்டரிலும் பின்னர் அவரது வலைத்தளத்திலும் பார்த்தபோது நம்பமுடியவில்லை. இன்று காலை மின்னஞ்சலில் அவரது சகோதரர் அந்த சோக செய்தியை உறுதிசெய்தார்.
சிந்தாநதியிடம் பலமுறை பேசியிருக்கிறேன். சற்றுமுன் தளத்தை வடிவமைத்ததில்(ரவிஷங்கருடன்), கட்டியெழுப்பியதில் அவருக்கும் பெரும்பங்குள்ளது. வலையில் பல புதிய முயற்சிகளை செய்தவர். வலைச்சரம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அவரது திரட்டிகளின் திரட்டியை (தமிழ் கணிமை)கொஞ்ச நாள் பயன்படுத்தி வந்தேன். ஜெயமோகன் தளத்தின் லோகோவை உருவாக்கியவர் சிந்தாநதிதான். அண்மையில் அவர் மீண்டும் பதிவுக்கு வந்த போதும் [...]

முழுதும் படிக்க...


ஸ்லம் டாக் இசை – மக்கள் என்ன சொல்றாங்க?

February 24th, 2009 | வகைகள்: இசை, இணையம் | 2 மறுமொழிகள் » |

ஸ்லம் டாக் இசை குறித்து சாதாரணர்களின் விமர்சனங்கள், பாராட்டுக்கள்.
இங்கே கிளிக்கி அமேசானில் சென்று படிக்கவும்.
===========================================

முழுதும் படிக்க...


நான் கடவுள்

February 18th, 2009 | வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 11 மறுமொழிகள் » |

“மோசமாக எழுதப்படும் விமர்சனங்கள் சரியாக எடுக்கப்படாத படங்களைவிட மோசமானவை”. சும்மா ஏதோ ஒரு பாராவில்(Paragraph) படிச்சத மாத்தி எழுதி பார்த்தா எப்படி இருக்கும்ணு ஒரு கற்பனை. நல்லாத்தான் இருக்குது. எந்த பெரிய அர்த்தமுமில்லைண்ணாலும் ஏதோ பெரிய தத்துவம் மாதிரி தெரியுதுல்ல?
ஒரு திரைப்படத்துக்கு எத்தனை விமர்சகர்கள்? எத்தனைபேர் அதை பார்க்கிறார்களோ அத்தனை விமர்சனங்கள். (படம் பார்க்காமலே விமர்சிப்பவர்களும் உண்டென்றாலும்). நான் கடவுள் விமர்சனங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கருத்து முன்நிற்கிறது. ஆன்மிகமும் இதுபோலவே! உலகில் எத்தனை நம்பிக்கையாளர்கள் உண்டோ அத்தனை [...]

முழுதும் படிக்க...