டி மெலோ கதைகள் – 1 வாத்து சூப் முல்லா நசுருதீனின் உறவினர் ஒருவர் அவரைக் காண வந்தார். வந்தவர் ஒரு வாத்தை பரிசாகத் தந்தார். வாத்து சமைக்கப்பட்டது. அருமையான விருந்தானது. விரைவில் பல விருந்தினர்கள் முல்லாவின் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். எல்லோரும் தன்னை வாத்து கொண்டுவந்தவரின் உறவினர் என்றனர். எல்லோருக்கும் அந்த வாத்தின் பொருட்டு விருந்தளிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்தனர்.முல்லாவும் இயன்றவரை பொறுமையாய் எல்லோருக்கும் விருந்தளித்தாராம். ஒரு நாள் ஒருவன் வந்து “நான் உனக்கு வாத்து தந்தவனின் [...]
