ஆழி சூழ் உலகு படித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. என்னைப் போல வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்தாலும் அது குறித்து என்ன எழுதுவது என்று பின்மண்டையில் ஒரு எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கும். அது அந்த செயல் தரும் அனுபவத்தை வேறுவிதமாக மாற்றிவிடும். ஆழி சூழ் உலகு படிக்கத் துவங்குகையில் எனக்கு அப்படி ஒரு எண்ண ஓட்டம் இருந்தது. கரையைக் கடந்து உள்ளே செல்லச் செல்ல ஆழி முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது. நாவலைப் [...]
