ஓராயிரம் கண்கள் கொண்டு

November 11th, 2011 வகைகள்: வகைப்படுத்தாதவை, இலக்கியம், கட்டுரை | 6 மறுமொழிகள் » |

ஆழி சூழ் உலகு படித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. என்னைப் போல வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்தாலும் அது குறித்து என்ன எழுதுவது என்று பின்மண்டையில் ஒரு எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கும். அது அந்த செயல் தரும் அனுபவத்தை வேறுவிதமாக மாற்றிவிடும். ஆழி சூழ் உலகு படிக்கத் துவங்குகையில் எனக்கு அப்படி ஒரு எண்ண ஓட்டம் இருந்தது. கரையைக் கடந்து உள்ளே செல்லச் செல்ல ஆழி முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது. நாவலைப் [...]


‘கடலைக் காணாதவனின் அலை குறித்த குறிப்புக்கள்’ – ஊட்டி சந்திப்பு

August 31st, 2010 வகைகள்: இலக்கியம், அனுபவம் | 13 மறுமொழிகள் » |

மாபெரும் கடலொன்றிருந்தது. சிலருக்கு அந்தக் கடலில் நீந்தத் தெரிந்திருந்தது. சிலருக்கு அதில் மீன் பிடிக்கத் தெரிந்திருந்தது. சிலர் வலை கொண்டு, சிலர் தூண்டிலிட்டு. இன்னும் சிலர் அந்தக் கடலின் கரையில் நின்று இளைப்பாறிக்கொள்வர், சிலர் விளையாடி மகிழ்வர். ஆழமான, பரந்து விரிந்த, ஆபத்துக்களையும், கடின சவால்களையும், உயிரையே மாய்க்கும் சுழிகளையும் உள்ளோடைகளையும் பாறைகளையும் கொண்ட அந்த கடலில் குளித்து முத்தெடுத்து வந்தவர்கள் வெகுசிலரே. இன்னும் சிலர் அந்தக் கடலைக் குறித்து கேள்வி மட்டும் பட்டுள்ளனர். பலருக்கும் அந்தக் [...]


தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

September 4th, 2009 வகைகள்: சந்திப்பு, தகவல், ஆளுமை, இலக்கியம், அமெரிக்கா, அறிவுப்பு | ஒரு மறுமொழி » |

பாரதி தமிழ் சங்கம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ் சங்கம் வரவேற்று கவுரவிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக. நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை இடம்: Fermont Library Hall Fremont Library Stevenson Blvd [...]


பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9

June 21st, 2007 வகைகள்: சிறுகதை, இலக்கியம், கதை | 3 மறுமொழிகள் » |

9 எனக்கு ராசி நம்பர். அதான் 9வது பாகம் எங்கிட்ட வந்திருக்கு. சிந்தாநதி சிம்பிளா ஒரு ஆரம்பத்தப் போட்டு நடையக் கட்டிட்டாரு அதன் பிறகு கதையின் கேரக்டர்கள போட்டு பதிவர்கள் பொம்மலாட்டம் நடத்திட்டு வர்றாங்க. எங்க போய் முடியப் போகுதோ. கதையின் முந்தைய பாகங்கள் இதோ.. சிந்தாநதி’யின் ஞாபகம் -1வெட்டிப்பயல்’ன் ஞாபகம் -2CVR’ன் ஞாபகம் 3ஜி’யின் ஞாபகம் – 4இம்சை அரசியின் ஞாபகம் – 5வைகை ராமின் ஞாபகம் – 6தேவின் ஞாபகம் – 7ஜி. ராவின் [...]


மேதா பட்கர், ஜெயந்தி சங்கர் பேட்டியுடன்…

March 6th, 2007 வகைகள்: தமிழோவியம், இலக்கியம் | ஒரு மறுமொழி » |

தமிழோவியத்தில் இந்த வாரம்… தராசு : பந்த் பயன் தருமா? [மீனா] நெய்வேலி விஷயத்தில் மத்திய அரசு தங்களுக்குச் சாதகமான முடிவைஎடுக்காவிட்டால் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒப்புக்காவதுஒரு அறிக்கை வெளியிட்ட முதல்வர் காவிரி விவகாரத்தில் மறந்தும் கூட வாயைத் திறக்கவில்லை. பேட்டி : மேதா பட்கர் பேட்டி – வேண்டாம் அணு உலை வேண்டாம் [திருமலை கோளுந்து] நீங்கள் முகத்தை துடைக்கும் பொழுது கூட, இங்கு கிராமத்து பெண்கள்செய்வது போல் சேலையின் முந்தனையால் தான் [...]


கவி தந்த விதை -2: தந்தாலே காதல் காதல் இல்லை

February 16th, 2007 வகைகள்: இலக்கியம், க.த.வி, காதல், கவிதை | 17 மறுமொழிகள் » |

தருகின்ற பொருளாய் காதல் இல்லைதந்தாலே காதல் காதல் இல்லையாசகமா காதல்?நான் கேட்கவும்நீ கொடுக்கவும்.உன் வெட்கமும்என் கர்வமும்பலியாகும்யாகம் காதல்.எடுத்தேன்கொடுத்தேன்காதலல்ல.பூவுக்கு வண்டைப்போலவண்டுக்குப் பூவைப்போலஎடு தேன்கொடு தேன்காதல்.தவத்தில் விளையும்வரமே காதல்.தாடிவைத்தஇளைஞரெல்லாம்தவம் கலைத்தஞானிகள்.தேடலில் விளையும்தெளிவு காதல்.உன்னில் என்னையும்என்னில் உன்னையும்.உன் பேரைக்கேட்டால்நான் திரும்பிப் பார்ப்பதுஎன் பேரைக் கேட்டால்நீ பூமி பார்ப்பது.கவிதை தாங்கியகாகிதமல்ல காதல்காகிதம் காணாகவிதைகளே காதல்.வேண்டிப் பெறுவதா காதல்?வேள்வியில் பெறுவது காதல்.முத்தத் தீயில்முனகல் மந்திரங்கள்தானமல்ல காதல்.தாகம்.தீரத் தீரத்தீரா தாகம்.காதல்,நிகழ்வல்லஇருப்பு.நீ நானாகவும்நான் நீயாகவும்.நீ வென்றபோதும்நானே வெல்கிறேன்.நீ தோற்றபோதும்நானே தோற்கிறேன்.நீ தோற்பதில்லைநான் வெல்வதில்லைஇதுதான் காதல்.எனை ஏற்றுக்கொள்என்பதில்லை காதல்.உனை [...]


கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு

February 14th, 2007 வகைகள்: சினிமா, இலக்கியம், க.த.வி, காதல், கவிதை | 25 மறுமொழிகள் » |

(முன்பு சொன்னதுபோல கவிதைகள் எனக்குப் புதியவை. எழுத்தே எனக்குப் புதிது. எனவே என் முயற்சிகளில் குறைகளை சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்.)‘கவி தந்த விதை’ என ஒரு குறுகிய தொடரில், திரைப்பாடல்களில் வந்த சில வரிகளை மூலமாகக் கொண்டு சில கவிதைகளை புனையப் போகிறேன். திரைப்பாடல்களில் கவித்துவம் நிறைந்த வரிகள் ஏராளம். மனதைத் தொட்ட சில வரிகளை விரித்திருக்கிறேன் கவிதை நடையில். காதலர்களுக்கு நல்வாழ்த்துக்கள். கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்றுபின்பு கட்டிலில் [...]


ஒரு சிந்தசைசரும் மகாகவியும்

January 29th, 2007 வகைகள்: தமிழ், தமிழோவியம், தகவல், பாடல், இலக்கியம், அறிவிப்பு | 4 மறுமொழிகள் » |

பாரதி, இந்தப் பெயரே கவிதையாய் ஒலிக்கிறது. பாரதியின் வார்த்தை வார்ப்புகளை வாசிக்கும்போது இயல்பாய்த் தோன்றும் உணர்வுகளை தவிர்க்க இயலுவதில்லை.ஸ்ரீகாந்த் தேவராஜன் என்பவரின் இனிய இசையில் பாரதி பாடல்களை கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது.எஸ்.பி. பி, சுஜாதா, ஸ்ரீனிவாஸ், ஹரீஷ் ராகவேந்த்ரா போன்றவர்களின் இனய குரலில் மெல்லிய மெட்டுக்கள் மனதை வருடுகின்றன. மெல்லிசையில், மேற்கும் கிழக்கும் சந்திக்கும் பாடல்களாய் இவை அமைந்துள்ளன. சின்னஞ்சிறு கிளியே – எஸ். பி. பாலசுப்ரமணியம்காக்கைச் சிறகினிலே – சுஜாதாமோகத்தை கொன்றுவிடு – ராஜா கோவிந்தராஜா [...]


e-த்திச் சூடி

December 31st, 2006 வகைகள்: தமிழ், நட்சத்திரம், புதுமை, இலக்கியம் | 29 மறுமொழிகள் » |

e-த்திச் சூடி அமேசானில் ஆர்டர் செய்ஆர்க்கூட்டில் பழகுஇணைப்பை கைவிடேல்ஈபேயில் விற்றுவிடுஉரல்களை சேமிஊரெல்லாம் நண்பர்கொள்எண்ணியதை கூகிள் தரும்‘ஏ’ த்ளங்கள் பாப் அப் தரும்ஐயம் தீர்க்கும் விக்கிப்பீடியாஒரே மெயில் ஐடி கொள்ளேல்ஓசியிலேயே ப்ரவுசிங் செய்ஔவ் ஆர் யூவில் துவங்கு(How are you?)இஃதே e-நயம். சும்மா டைம் பாஸ் மச்சி (மச்சினி?) உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


நாவல் எழுதுறேங்க….

December 28th, 2006 வகைகள்: நட்சத்திரம், முட்டம், இலக்கியம், கதை, அறிவிப்பு | 7 மறுமொழிகள் » |

(அப்படா ஒருவழியா நட்சத்திரம்னு தலைப்பில்லாத பதிவு)ஒரு நாவல் எழுதணும்னுதான் பதிவு எழுதத் துவங்கினேன். பின்பு அதையே மாற்றி முட்டம் பற்றிய பதிவாக எழுதினேன். மீண்டும் நாவல் முயற்சியில் இறங்கியுள்ளேன். இறங்கினேன்னு சொல்லலாம். ஐந்து அத்தியாயங்களுக்குப் பிறகு கிடப்பில் கிடக்கிறது நாவல்.இதுவரைக்கும் எழுதுனதுலேர்ந்து சில அத்தியாயங்கள் உங்கள் பார்வைக்கு.நாவல் தற்காலத்துல நடக்குற கதை ஒரு அத்தியாயமும், நடந்து முடிந்த கதை இன்னொரு அத்தியாயமுமாய் போகுது. (எச்சரிக்கை: கொஞ்சம் நீளமான பதிவு. )அத்தியாயம் ஒன்று : விடியல் கடலும், வானமும் [...]