(விண்) நட்சத்திரம்

December 26th, 2006 வகைகள்: நட்சத்திரம், பொது, ஆன்மீகம், இயேசு, இலக்கியம், கவிதை | 3 மறுமொழிகள் » |

விண்ணில் தோன்றியது வால் நட்சத்திரம்மண்ணில் விண்ணவனே நட்சத்திரம் – மன்னன்உறங்க இடமில்லா சத்திரம்உலகில் இதுவன்றோ விசித்திரம்?மாட்டுதொழுவம் மாளிகையானதுஆடும் கோழியும் தோழர்களாயினர்கந்தல் ஆடைக்கு கண்ணியம் வந்ததுகொசுவின் பாடலே தேவகானமாம்.செவியுள்ளோர்க்கு விண் பாடல் கேட்டது‘விண்ணகத்தில் இறைவன் போற்றப் படுகமண்ணகத்தில் நல்மனத்தோர் அமைதிபெறுக’இதுவே இவர் பிறப்பின் தத்துவமானது.இடையர்களுக்குத்தான் கிடைத்தது முதல் செய்திஇறைவன் பிறந்துள்ளான் என்கிற புது செய்தி – இருள்விலகிடும் என்பதே அந்நற்செய்தி.ஏரோது அரசன் கொல்லத் தேடினான்ஏழைமக்கள் காணத்தேடினர்கிழக்கின் அரசர் மூவர் வந்தனர்கிடையில் குழந்தையை வணங்கிநின்றனர்.மாளிகை பலவும் உன் பேரில் இருக்குது [...]


திருக்குறள் குழுமம்

December 15th, 2006 வகைகள்: இலக்கியம், குறள், அறிவிப்பு | 19 மறுமொழிகள் » |

பதிவுகளில் குறள் விளக்கங்களை ‘மயிலை மன்னார்’ தருவதுபோல வேறு யாரும் தரவில்லை. திருக்குறளுக்கென்றே ஒரு பதிவைத் துவங்கி ஒவ்வொரு பதிவிலும் ஒரு அதிகாரமென எளிமையாய் இனிமையாய் விளக்கம் அளிக்கலாம் எனும் எண்ணத்தில் ஒரு பதிவை துவங்கியுள்ளேன்.இதை தனியாய் செய்வதைவிட குழுவாய் செய்வதே எளிதானதாகும் என்பதால் இந்த அறிவிப்பு.‘குறள் பக்கங்கள்’ எனும் இந்த புதிய குழுமப் பதிவில் பங்குபெற விரும்புபவர்கள் cvalex at yahoo .com அல்லது cyril.alex@gmail.com ற்கு தனிமடல் அனுப்பவும். விரைவில் எதிர்பாருங்கள் ‘குறள் பக்கங்கள்’. [...]


இ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே

November 10th, 2006 வகைகள்: பதிவர்வட்டம், போட்டி, இலக்கியம், கவிதை, அறிவிப்பு | 35 மறுமொழிகள் » |

நம்ம தமிழ் சங்கத்துல நடந்த கவிதைப்போட்டியில நம்ம கவிதைக்கு முதல் (சர்)ப்ரைஸ் குடுத்துருக்காங்க.நடுவராய் மு. மேத்தா அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது எனக்கு தலைகால் புரியாத சந்தோஷமாயிருக்குதுங்க. ரெம்ப எளிமையான ஒரு கருத்த வச்சு எளிமையா எழுதின கவிதை. பொதுவா கவிதைன்னா நமக்கு அவ்வளவு தன் நம்பிக்கை கிடையாது. இனிமேல் முயல நம்பிக்கை வந்திருக்கு. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால என் மீனவ உறவினர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஆகாயம் ஒரு திடமான இடமென பேசினனர். அவருக்கு என்ன சொல்லி புரியவைப்பது? சில [...]


சொர்க்கம் இலவசம்

November 3rd, 2006 வகைகள்: சிறுகதை, தேன்கூடு, நகைச்சுவை, போட்டி, இலக்கியம், கிறீத்துவம் | 66 மறுமொழிகள் » |

செயிண்ட் பீட்டர் சிணுங்கும் அலைபேசியை பார்த்தார். ‘சித்ரகுப்தன் காலிங்’ கோணலாய் சிரித்துக்கொண்டிருக்கும் சித்ரகுப்தன் படத்தோடு சேதி சொன்னது செல்போன். ‘காலையிலேயா?’ பீட்டர் முணுமுணுத்தார். நாயர்கடைக்கே கூகிள் மேப்பில் வழிதேடி, அதை செல்போனில் இறக்கி, உலகளாவிய சுட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (அதான் ஜிபிஎஸ்), போய் ஹோம் டெலிவரி ஆர்டர் செய்துவிட்டு வர்றமாதிரி காலம் மாறியிருக்கு. பூமியில மட்டுந்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்ன? சுவர்க்கமும் மின்னணு எந்திரமயமாகியிருந்தது. ஏக்கர் கணக்கில் மெயின்ஃப்ரேம்களை நிர்மாணித்திருந்தனர். பாவக்கணக்கு புண்ணியக் கணக்கு என [...]


தீபாவளி வாழ்த்துக்கள்

October 20th, 2006 வகைகள்: பொது, இலக்கியம், கவிதை | 23 மறுமொழிகள் » |

வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு வழங்கும்போது நட்பை வழங்குவோம்வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்றுஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம். தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாகமனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான் புண்ணியம் சேர்ப்பதில்பகிர்வோம்.பதார்த்தம் பகிர்வோம்,பண்டிகையைப் பகிர்வோம்.கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்கண்களை திறப்போம்.காற்றில் பொருட்டென்றில்லாமல் மிதக்கும் தூசிபோலஇயற்கையில் நாம் என உணர்வோம்அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,அன்பை மட்டுமே விதைப்போம்.பண்டிகைகள் Funடிகைகளாகஅந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில் குடும்பம் நண்ர்களை இணைப்போம்அரவணைப்போம்.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். [...]


விடுதலை

September 30th, 2006 வகைகள்: தேன்கூடு, இலக்கியம், கதை | 29 மறுமொழிகள் » |

அறிவிப்பு வந்ததிலிருந்து மகிழ்ச்சியைவிட குற்ற உணர்வே அதிகமாயிருந்தது. இந்த மாதப் போட்டியில் மூன்றாம் இடம் கிடைத்திருந்தது. சுமாராய்த்தான் என் முயற்சி இருந்தது. வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என சில சக போட்டியாளர்களின் முயற்சிகளைப் பார்த்ததுமே தெரிந்துகொண்டேன். மனைவியிடம் போட்டி பற்றி சொல்லிவிட்டேன், பிள்ளைகள் கூட எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ரெம்ப தயக்கத்தோடத்தான் ஜேம்சிடம் அந்த ஐடியாவச் சொன்னேன். அவனுக்கு தயக்கமேயில்ல. அப்புறமம வேணாம்டான்னேன். ‘இல்லடா ரெம்ப சிம்பிள், நீ ஒண்ணும் பண்ணவேண்டாம் நான் பாத்துக்கிறேன்.’ னு சொன்னான். [...]


இன்னும் இருக்கிறது ஆகாயம்

September 19th, 2006 வகைகள்: போட்டி, இலக்கியம், கவிதை | 12 மறுமொழிகள் » |

‘ஆகாயம் ஒரு மாயை’அறிவியல் சொல்லும் உண்மை.சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது – அங்கேதேவருமில்லை அசுரருமில்லைசந்திரன் உண்டு ஆனால்தெய்வமாயில்லை.பிதாவுமில்லை சுதனுமில்லைஆவி உண்டுபரிசுத்த ஆவியில்லை.மரணப் பரிசாய் கன்னியருமில்லைமதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.ஆகாயம் ஒரு மாயை.மடமை பூசிய மனங்களிலேயேஇன்னும் இருக்கிறது ஆகாயம். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


லிஃப்ட்

September 1st, 2006 வகைகள்: சமூகம், சிறுகதை, தேன்கூடு, இலக்கியம், கதை | 46 மறுமொழிகள் » |

சாலை ஆறாய் உருகியோடிக்கொண்டிருந்தது. உருவங்கள் செம்மையாகத் திரிக்கப்பட்டு வண்ணங்கள் வழிந்தோடும் ஒரு நவீன ஓவியமாய் கானல் வரைந்த கோலங்களை வியப்போடு ரசித்துக்கொண்டிருந்தார் பெரியவர். ‘அங்க பஸ் வர நேரமாகும். கொஞ்சம் தள்ளி முக்குல நின்னீங்கண்ணா யாராவது டூ வீலர்ல வரும்போது லிஃப்ட் கேக்கலாம்.’ மகன் சொல்லியிருந்தான். முதலில் வந்த மாட்டுவண்டியில் உரம் ஏற்றப்பட்டிருந்தது. “பெரியவரே.. பஸ் வர நேரமாகுமே. வண்டியில வர்றீங்களா?” மாட்டுவண்டிக்காரர் கேட்டார். எளிய மக்களின் உபசரிப்பும் கருணை மனமும் படித்தவர்கள் பலருக்கும் இருப்பதில்லை. அடுக்குமாடி [...]


நட்பு வாரம் – இளக்கியப் பதிவு

August 3rd, 2006 வகைகள்: தமிழ், நகைச்சுவை, இணையம், இலக்கியம், குறள் | 23 மறுமொழிகள் » |

நடப்பு வாரம் நட்பு வாரமாமே? இணைய நண்பர்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். நட்புக்கு நன்றி. ஐயம் நீக்கும் ஐயன் வள்ளுவன் ‘இணைய நட்பு’ பற்றி என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்க்கலாம். 781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. (தொடர்ந்து) நல்ல பின்னூட்டம் வழங்கும் நண்பர்களைப் பெறுவதைப்போல வேறெந்த கடினமான செயலும் இல்லை? தனிநபர் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்க வேறென்ன வழி? 782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. அறிவுசீவி [...]


கீதாஞ்சலி – பூ

March 3rd, 2006 வகைகள்: ஆன்மீகம், இலக்கியம், கவிதை | மருமொழிகள் இல்லை » |

கீதாஞ்சலியிலிருந்து இன்னொரு பாடல்..பூ.இந்தப் பூவை பறித்து எடுத்துக்கொள்ளும்,தாமதம் வேண்டாம்!துவண்டு மண்ணில் விழுந்துவிடும் என பயப்படுகின்றேன்.நான் உன் பூமாலையில் இடம்பெறாமல் போகலாம் ஆனால்,உம் கரங்களால் நான் வலியேர்க்கும் பெருமை பெறும் பொருட்டு என்னை ப் பறியும்நான் உணரும் முன் இந்த நாள் முடிந்துவிடுமோ,காணிக்கை தரும் நேரங்கள் ஓடிவிடுமோ என பயப்படுகிறேன்அதன் வண்ணங்கள் ஆழமானதாயில்லாதபோதும், குறைவாகவே மணம்வீசியபோதும் இந்த மலரைஉம் பணிபுரியும்படி, நேரம் இருக்கும்போதே, பறித்துவிடும். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.