<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தேன்/cyrilalex.com</title>
	<atom:link href="http://cyrilalex.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://cyrilalex.com</link>
	<description>www.cyrilalex.com</description>
	<lastBuildDate>Sun, 17 Feb 2013 19:27:21 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
		<item>
		<title>கடலெனும் அனுபவம்</title>
		<link>http://cyrilalex.com/?p=631</link>
		<comments>http://cyrilalex.com/?p=631#comments</comments>
		<pubDate>Sun, 17 Feb 2013 12:48:18 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[திரை விமர்சனம்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=631</guid>
		<description><![CDATA[பல வருடங்களுக்கு முன்பு ‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ பத்திரிகையில் ஒரு கருத்துப்படம் வந்திருந்தது. இரு சிறுவர்கள் ஒரு ’மார்டன் ஆர்ட்’ படத்தின் முன்பு நின்றுகொண்டிருக்கிறார்கள். கீழே ’யாராவது நாமதான் இதை செஞ்சுட்டோம்ணு சொல்றதுக்கு முன்னால ஓடிரலாம் வா’ எனும் வரி. கடல் திரைப்படத்துக்கு வந்திருக்கும் பல விமர்சனங்களை படித்தபோது எனக்கு இதுவே நினைவுக்கு வந்தது. பல உன்னத கலை படைப்புகளும் குழந்தைகள் செய்தவற்றைப்போன்ற எளிமையுடனே இருக்கின்றன. ஒரு மாடர்ன் பெயிண்டிங்கைப்போலவே கடலும் நம் புரிதலைக் கோரி நிற்கும் ஒரு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பல வருடங்களுக்கு முன்பு ‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ பத்திரிகையில் ஒரு கருத்துப்படம் வந்திருந்தது. இரு சிறுவர்கள் ஒரு ’மார்டன் ஆர்ட்’ படத்தின் முன்பு நின்றுகொண்டிருக்கிறார்கள். கீழே ’யாராவது நாமதான் இதை செஞ்சுட்டோம்ணு சொல்றதுக்கு முன்னால ஓடிரலாம் வா’ எனும் வரி. கடல் திரைப்படத்துக்கு வந்திருக்கும் பல விமர்சனங்களை படித்தபோது எனக்கு இதுவே நினைவுக்கு வந்தது. பல உன்னத கலை படைப்புகளும் குழந்தைகள் செய்தவற்றைப்போன்ற எளிமையுடனே இருக்கின்றன. ஒரு மாடர்ன் பெயிண்டிங்கைப்போலவே கடலும் நம் புரிதலைக் கோரி நிற்கும் ஒரு கலைப்படைப்பு.</p>
<p><img class="alignleft" title="கடல்" src="http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/c/c9/Kadal_poster.jpg/220px-Kadal_poster.jpg" alt="" width="220" height="344" />கடல் பல உள்ளோட்டங்களையும் அடுக்குகளையும் கொண்ட திரைப்படம். அந்த உள்ளோட்டங்களை விட்டுவிட்டு வெறும் திரைப்படமாகப் பார்த்தால் எஞ்சுவது கொஞ்சமே. அதிலும்கூட துல்லிய மீனவ கிறீத்துவ பின்னணியும், மெல்லிய காதலும், அழகிய இசையும், ஒரு தீவிர பழிவாங்கும் கதையும், பல உச்சங்களைக் கொண்ட திரைக்கதையும் உள்ளது. ஆனால் அது மட்டுமே கொண்ட ஒரு படத்தை உருவாக்க ஜெயமோகனும், மணிரத்தினமும் எதற்கு? ஒரு சாதாரண பழிவாங்கும், மனம் திரும்பும் கதையை தங்கள் துறையில் உச்சங்களில் இருக்கும் இருவர் படமாக்குவார்களா?</p>
<p>கடல் ஒரு பெருங்கதை. இராமனின் கதையைக் கொஞ்சம் பெரிய ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால் இராமாயணம் பல நூறு கதைகள் கொண்ட ஒரு காப்பியமாக உருவாகியது. அதேபோன்றதொரு காப்பியத்தன்மைகொண்டதே கடல். ஒரு ஆன்மா இந்த உலகில் செய்யும் ஒரு பெரும்பயணத்தின் கதையைச் சொல்கிறது கடல். அது வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது, நன்மைக்கும் தீமைக்கும் குழந்தைமைக்கும் மத்தியில் நின்று தள்ளாடுகிறது. எழுகிறது விழுகிறது அலைகிறது மீழ்கிறது.</p>
<p>படம் நேரடியாக கதைக்குள் செல்கிறது. சிலுவை ஒன்றை நோக்கி நடந்து வரும் ஒரு மனிதன் முதல் காட்சி. அவன் பெயர் சாம் ஃபெர்னாண்டோ. ஒரு பெரும் பணக்காரனின் மகன். அவன் வந்திருப்பதோ துறவியாக, கிறீத்துவ சாமியாராக மாற. அவன் ஒரு தூய்மைவாதியாக, நீதிமானாகத் தோன்றுகிறான்(righteous man). செபிக்காமல் சாப்பிடுவதில்லை, மனம் நிறைந்து சிரிப்பதில்லை. இறுக்கமான நீதிமான். அதுவே இயேசுவை பின்பற்றும் வழி என நினைக்கிறான். (ஆனால் இயேசுவோ தூய்மைவாதிகளை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என வெறுக்கிறார்) அவன் அங்கே மனிதத்துக்கும் சாத்தானுக்கும் நடுவில் நின்று அல்லாடும் ஒருவனை சந்திக்கிறான். அவன் பாவம் செய்வதைக் கண்டு அவனை தண்டனைக்கு இட்டுச் செல்கிறான். பெர்க்மான்ஸ் எனும் மனிதன் முழுமையாக சாத்தானாகிறான். சாம்’ஐக் கொல்ல முயற்சிக்கிறான். ஆனால் உடல் இறப்பது என்பது விரைவானதொரு முடிவு. சாத்தான் அவனது ஆன்மாவுக்குக் குறிவைக்கிறான். ‘என்னைப்போல உன்னை பாவத்தில் தலைகுப்புற விழவைக்கிறேன்’ என சவால் விடுகிறான். மிக விரைவாக சொல்லப்படும் இந்தக் காட்சிகள் ஆழமானவை. நம் முழு கவனத்தையும் கோருபவை. இந்த முன்கதையில் பெர்க்மான்ஸ் விடும் சவாலின் தீவிரமும் சுவாரஸ்யமும் புரியாதவர்கள் அல்லது பிடிக்காதவர்களுக்கு கடல் படத்தை முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை.</p>
<p>இது சாதாரணமாக நம் ஹீரோக்கள் தொடையைத் தட்டி விடும் சவால்போலத் தோன்றினாலும் ஆழமானது. பெர்க்மான்ஸுக்கு பழிதீர்க்க சாம் கொல்லப்படுவது எளிதான தண்டனையாக இருந்திருக்கும். ஆனால் சாத்தான் அவனை நித்தியத்துக்கும் சபிக்க எண்ணுகிறான். இதில் உள்ள இறையியல்தன்மையை எடுத்துக்கொண்டே நாம் படத்தை முழுமையாகப் ரசிக்க முடியும். உடலைக்கொல்வது உடனடித் தண்டனை.. ஆன்மாவைக் கொல்வதோ நித்தியத்துக்கும் தண்டனை.</p>
<p>அடுத்து நாம் காண்பவை மிக உக்கிரமான காட்சிகள். பாலியல் தொழிலாளியான தன் தாய் இறந்துபோயிருப்பதை உணராமல் அவள் மீது படுத்துறங்கும் ஒரு குழந்தை. ஊருக்கு ஒதுங்கிய அந்தக் குடிலில் ஒரு ஆன்மா அனாதையாகி நிற்கிறது. வேசியின் ஆன்மாவுக்கு கோவிலில் இடமில்லை அவள் உடலுக்குக் கூட மரியாதையில்லை. அவளின் வளைந்து நீட்டிய ஊனமான கால் மண்வெட்டியால் உடைக்கப்பட்டு பழைய ஐஸ் பெட்டிக்குள் அடைக்கப்பட்டு ’தெம்மாடிக் குழியில்’ புதைக்கப்படுகிறது. தாமஸ் தனியனாக நிற்கிறான். தன் தந்தையென்று தாயால் அடையாளப்படுத்தப்பட்டவரான ஊர்ப்பெரியவரைத் தேடிச் செல்கிறான். இந்த தாமஸ் செட்டி உறவு மிக சிறப்பாக பல காட்சிகளில் சொல்லப்படுகிறது. தந்தையின் வீட்டிலிருந்து துரத்தப்படுகிறான் “சாத்தானின் மகன்”. கடற்கரையில் மீனைப் பொறுக்கி அடிவாங்குகிறான். செட்டி அவனுக்கு ஒரு மீனைத் தருகிறான். ஒருவன் ‘என்ன இருந்தாலும் மவனில்லையா’ என்கிறான் ‘எவனுக்க மவன்ல’ என்று கோபப்படுகிறார் செட்டி.. காட்சியின் பின்னணியிலேயே நிகழும் இந்த உரையாடல்களைப்போல படத்தில் தொடர்ந்து பல மெல்லிய பின்னணி உரையாடல்களும் காட்சிகளும் விரவியுள்ளன. அவை அனைத்தையும் உள்வாங்கும்போதே படம் முழுமையான அனுபவத்தை தரமுடியும்.</p>
<p>சிலவருடங்கள் கழிந்து ஊருக்கு ஒரு பாதிரியார் வருகிறார். சாமியாரே இல்லாத பாழடைந்த கோவில் இருக்கும் ஊர் ஒன்றில் இயேசுவின் பிரதிநிதியாக சாம் வந்திறங்குகிறார். கடவுளில்லாத ஊரில் வந்திறங்கும் கடவுளின் தேவதூதன். இப்போது சாம் மனமார சிரிக்கிறார், குடிகாரர்களுடன் பழகுகிறார், ஏழைகளுடன் உறவாடுகிறார். அவர் பழைய இறுக்கமான நீதிமான் அல்ல. அவர் கடற்கரையில் ஒரு ஆன்மாவை கண்டெடுக்கிறார். “சாத்தானின் பிள்ளையை” தெய்வத்தின் மகனாக மாற்றுகிறார். இந்தக் காட்சிகளும் மிக உக்கிரமாகவும் மனதைத் தொடும்வகையிலும் அமைந்துள்ளன. மணிரத்தினத்தால் ஒரு கிராமிய படத்தை எடுக்கவே முடியாது என்பது நம் சினிமா பண்டிதர்களின் கூற்று. கடலின் முதல் பாகத்தில் வரும் காட்சிகளில் அவர் தனக்கு துளிகூட பரிச்சயமில்லாத மீனவ கிராமத்தையும் கிறீத்துவ பின்னணியையும் மிகச் சிறப்பாகச் சொல்கிறார். ஒரு நல்ல படைப்பளிக்கு பின்னணி என்பது ஒரு படம் வரைபவனுக்கு கிடைக்கும் தாளைப்போலத்தான் இல்லையா? தாமஸ் நல்லவனாகிறான். திருமுழுக்கு (ஞானஸ்னானம்) பெறமுயல்கிறான். செட்டியை தன் தந்தையாக பதிவு செய்கிறான். செட்டியோ அதை ஊருடன் சேர்ந்து எதிற்கிறான் ஃபாதர் சாமின் மீது வன்மம் கொள்கிறான்.</p>
<p>கதை மீண்டும் பழைய சவாலுக்கு திரும்புகிறது. பெர்க்மான்ஸ் இப்போது முழுநேர சாத்தானாகிவிட்டான். சாம் குறித்து அவன் மறந்துவிடவில்லை. அவரைக் கண்டதும் ‘ஃபாதர் சாம்’ என்கிறான். பெர்க்மான்ஸ் சாமை ‘ஃபாதர்’ சாம் என அழைப்பது மிக முக்கியமானதொரு தொடர்பைக் காட்டுகிறது. சாம் ஃபாதர் ஆகிவிட்டதெல்லாம் அவனுக்குத் தெரியும். அவன் ஒரு நல்ல தருணத்துக்கு இன்னும் காத்திருக்கிறான். செமினரிக்குப் போகிறவர்களெல்லாம் சாமியாராகிவிடுவதில்லை (உ.ம் நான்). சாம் சாத்தானின் சதியால் நரகத்துக்கே அனுப்பப்படுகிறார்.</p>
<p>இதற்கிடையே தாமஸ் ஒரு புதிய உறவுக்குள் நுழைகிறான். அவன் ஆன்மா ஒரு தேவதையை கண்டுகொள்கிறது. குழந்தைமையே வடிவானதொரு தேவதை. நன்மைத்தனத்தயன்றி வேறெதையும் அறியாத தேவதை. தாந்தேயை (Dante) நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்ற பியாட்ரிஸ் எனும் தேவதை. தாந்தேயும் பியாட்ரிஸையும் போலவே தாமஸும் பியாவும் படத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>பெர்க்மான்ஸின் சவால் இப்போது ஒரு பெரும் தடையை சந்திக்கிறது. சாம் தாமஸின் ஆன்மாவை மீட்டெடுத்ததன் மூலம் பரலோகத்தில் தனக்கான இடத்தை முன்பதிவு செய்துவிட்டான். சாமை நித்தியத்துக்கும் வீழ்த்த இப்போது சாத்தானுக்கு ஒரே வழிதான் உள்ளது அது தாமஸை தன்வழிக்குக் கொண்டுவருவது. அது பெர்க்மான்ஸுக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பும் கூட. ஒரு bibilical காட்சியில் மிகக்கவனமாக செதுக்கப்பட்ட வசனங்களின் வழியே தாமஸின் ஆன்மா சாத்தானின் பக்கம் சாய்வது சொல்லப்பட்டிருக்கிறது. தாமஸ் வழிமாறித் தன்னிடம் வந்துவிட்ட மகிழ்ச்சியான செய்தியை பெர்க்மான்ஸ் சிறைக்குச் சென்று சாமிடம் சொல்கிறான். ’தாமஸ் இப்போ என்கூட இதுதான் சாத்தானுக்க வெளையாட்டு’. பெர்க்மான்ஸ் உலக வெற்றிகளை தாமஸுக்கு வழங்குகிறான். சாத்தான் கொலைசெய்வதின் சுகத்தை தாமசுக்கு காண்பிக்கிறான். பியாட்ரிஸ் உயிர் பிறப்பின் அருமையை காண்பிக்கிறாள். இரண்டு இரத்தங்களின் வித்தியாசத்தையும் ஆழமாகவே உணர்ந்துகொள்கிறது தாமஸின் ஆன்மா.</p>
<p>சாம் சிறையிலிருந்து திரும்பி தாமஸை மீட்க மீண்டும் வருகிறார். அவரிடம் தாமஸுக்கு சொல்வதற்கு எதுவுமில்லை. அவர் அவனிடம் கேட்பது ’உலகத்தில ஒரு மனுசனுக்குள்ளேயேனும் நீ ஆண்டவரோட ஒளிய பாக்கலியா’ என்பதுதான். அவனோ உண்மையிலேயே சாத்தானின் பிள்ளையாகிவிட்டான். குற்ற உணர்வு கிறீத்துவ இறையியலில் மிக அடிப்படையான ஒன்று. அவனுக்கு பாவமன்னிப்பு தேவைப்படுகிறது. தன் தேவதையிடம் பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பை பெறுகிறான். ’இனிமே செய்யாத என்ன?’ பாவ மன்னிப்பில் சொல்லப்படுவதுவும் இதுதானே?</p>
<p>பியாட்ரிஸ் சாம் வழியாக (டேப் ரெக்கார்டர்) தாமஸின் ஆன்மாவை உணர்கிறாள். ஒரு குழந்தை தாயாகும் தருணம் நிகழ்கிறது. பெர்க்மான்ஸ் வெகுண்டெழுகிறான். தன்னில் நிலைத்திருக்கும் கடைசி நன்மைத்தனைத்தையும் அழித்து பேருருவெடுத்து முழுமையான சாத்தானாகவே மாறிவிட முடிவெடுக்கிறான். அதற்கு அவன் தன் மகளைக் கொன்றாகவேண்டும். கடல் பிரம்மாண்டமாகக் கொந்தளிக்கிறது. முடிவில் தாமஸின் ஆன்மா சாமின் ஆன்மாவையும் மீட்டெடுக்கிறது. பியாட்ரிஸிடம் சென்று அடைக்கலம் புகுகிறது.</p>
<p>படத்தின் பல காட்சிகளும் மிக அடர்த்தியாக உள்ளன. பார்வையாளன் ஒரு உச்சத்தை உள்வாங்கிக்கொள்ளும் முன்பே இன்னொன்று வந்துவிடுகிறது. இத்தனை ஆழமான படத்திற்கு இத்தனை வேகம் கொஞ்சம் அதிகம் என்றே சொல்வேன். பலரும் வசனம் இசையால் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது என்கிறார்கள். இது அப்பட்டமான பொய். பின்னணி இசை (மகுடி மகுடி தவிர்த்து) பல இடங்களில் சாந்தமாகவே உள்ளது. தொடர்ந்து முக்கியமான வசனங்கள் வந்துகொண்டேயிருப்பதால் அவற்றை உள்வாங்கிக்கொள்ள நேரமில்லாமல் போய்விடுகிறது.</p>
<p>கடலில் பல சரடுகள் கையாளப்படுகின்றன. இதுவும் பார்வையாளனிடம் அதிக கவனத்தையும் பங்களிப்பையும் கோருகிறது. சாம்+பெர்க்மான்ஸ், தாமஸ்+தாமஸின் அம்மா, தாமஸ்+செட்டி, செட்டியின் குடும்பம், தாமஸ்+சாம், தாமஸ்+பெர்க்மான்ஸ், ஃபாதர்+ஊர் மக்கள், ஃபாதர்+கோவில்பிள்ளை, பெர்க்மான்ஸ்+செலீனா, பியா+தாமஸ், பியா+பெர்க்மான்ஸ், பியா+மதர், பெர்க்மன்ஸின் பின்னணி, தாமஸின் பின்னணி இவை எல்லவற்றிற்கும் ஊடே கத்தோலிக்க திருச்சபையின் ஊடாடல். இந்த மேல் அடுக்களின் கீழே ஓடும் ஆன்மாக்களின் போராட்டம். இப்படி படம் பல விஷயங்களையும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பது சாதாரண சினிமா பார்வையாளன் பழக்கப்பட்ட விஷயமல்ல.</p>
<p>என் மலையாள நண்பர் ஒருவர் ’படம் complicated’ என்றார். இதையே ஒரு சாதாரண பார்வையாளனின் நேர்மையான அவதானிப்பு என்பேன். ஆனால் பல சினிமா பண்டிதர்களும் படம் மிகவும் எளிமையான, மிக வழக்கமான நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் என்றே தீர்ப்பளிக்கிறார்கள். “கடல், ‘டல்’ க சைலண்ட்” என்றெல்லாம் சொல்பவர்களின் சினிமா ரசனையை நியாயத் தராசில்தான் எடைபோடவேண்டும். இத்தனை நாடக உச்சங்களைக் கொண்டிருக்கும் ஒரு படத்தை டல் என்று சொல்பவர்களுக்கு லட்டு தின்றுவிட்டு சும்மா இருக்கலாம். எனக்கு இது ரெம்ப அதிகம் என்று உண்மையை ஒத்துக்கொண்டுவிடுங்கள் போதும்.</p>
<p>படத்தில் நேட்டிவிட்டி இல்லை என்று தீர்ப்பெழுதுகிறார் ஒரு பண்டிதர். கிறீத்துவம் நம் பொதுஜன மனதில் ‘அல்லேலூயா கோஷ்டி’ என்பதைத் தவிர வேறெந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையோ எனும் பரிதாபமான கேள்வியே எழுகிறது. இல்லையேல் தமிழ் நாட்டில் குறைந்தபட்சம் ஐநூறுவருட பாரம்பரியம் கொண்ட கிறீத்துவமும், ஆயிரக்கணக்கான வருடங்களாக தமிழ் கலாச்சாரத்தில் நீங்காமல் இடம்பெற்றுவரும் நம் தென்தமிழக மீனவர்களும் நேட்டிவிட்டிக்குள் வராதுபோவதெப்படி? படம் சமரசமின்றி மீனவர்களின் மொழிவழக்குகளை கயாளுகிறது. கித்தாப்பு, தொட்டி, கச்சோடம், எழுப்பம், தெம்மாடிக்குழி போன்ற வார்த்தைகளானாலும் சரி ’சாம்’க்கு தீபந்தம் தூக்கிட்டு திரியுத?’, ‘அம்மைக்கு மத்தவனால?’ ’(மண்ணை) அள்ளி வாயில போட்டுருவா’ எனும் வழக்குகளும் கடல் முழுக்க நிரவிக்கிடக்கின்றன.</p>
<p>கடல் ஒரு கிறீத்துவ பிரச்சார படம் என்கிறார்கள் சிலர். ஆனால் கடல் பல காத்திரமான விமர்சனங்களை நிறுவன கீறீத்துவத்தின்மீது வைத்திருக்கிறது. சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாமியாராக வருவதாக, வேசியிடம் சென்றவர்களுக்கெல்லாம் மனிப்பும் ஏழை வேசிக்கு தெம்மாடிக்குழியுமாக, காசுக்கு மோட்சம் வாங்கித் தருபவர்களாக என்று சிலவற்றை கோடிட்டுக் காட்டலாம். தாமசின் ஆன்மா நிறுவன கிறீத்துவத்துக்கு வெளியேயே மீட்பை பெறுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் பல்வேறு வடிவங்களில் திருச்சபைக்குள்ளேயே வைக்கப்பட்டுவருகின்றன. ஆகவே ஒரு சாதாரண கிறீத்துவன் இவற்றை எதிர்க்கப்போவதில்லை. இவை மிக நேர்மையான விமர்சனங்களேயாகும்.</p>
<p>’நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் பரலோக ராஜ்ஜியத்தில் உங்களுக்கு இடமில்லை.’ என்பதை ஒரு இன்ஸ்பிரேஷனாக ஜெயமோகன் எடுத்திருக்கலாம். இதை மையமாக வைத்து ஒரு தமிழ்ப்படம் வருவதென்பது எத்தனை அரிதானது?</p>
<p>கடல் கிறீத்துவ இறையியலை மிகச் சரியாகக் கையாண்டிருக்கிறது. சாத்தான் உலகின் வெற்றிகளை அளிப்பவன் என்பது தொடர்ந்து பெர்க்மான்ஸின் பாத்திரம் மூலம் வெளிப்படுகிறது. சாமோ உலகின் வெற்றிகளைக் குறிவைப்பதில்லை. தூய குழந்தைத் தன்மை இறையியல் அறிவையும்விட மேன்மையானது என்பது பியாவின் பாத்திரப்படைப்பின் வழியே சொல்லப்படுகிறது. பியா தூயக் குழந்தமையின் வடிவாக வருகிறாள். அவள் குழந்தையாகவே உறைந்துவிட்டவள். பாவத்தின் நிழலைக்கூட அறியாதவள். ’சாத்தானுக்க மவ ஒரு ஏஞ்சல் பாத்துக்க சிரிப்பா இல்லடே?’ இந்த முரணும் ஒரு அற்புதமான கிறீத்துவ முரணே. ’தொலைஞ்சு போன ஆடு மாதிரி திரும்ப வந்திருக்கல்ல தாமஸ்’ போன்ற மிக எளிமையாகத் தோன்றும் பைபிள் சார்ந்த வசனங்களுக்கு ஆழமான அர்த்தங்களை பார்வையாளன் உருவாக்கிக்கொள்ளாமல் கடலை எப்படி ரசிக்க முடியும்?</p>
<p>பெர்க்மான்ஸ் சாத்தானின் குறீடான எக்களிப்பும், எள்ளலும் கொண்ட ஒரு பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. சாம் சாந்தமும் அமைதியும் சந்தோஷப் புன்சிரிப்பும் விளையாட்டுத்தனமும் கொண்டதொரு பாத்திரம். அர்ஜுனும் அரவிந்த் சாமியும் மிக அற்புதமாக இந்தப் பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர். கவுதமும் துளசியும்கூட நன்றாக நடித்திருந்தாலும் துளசியின் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் பார்வையாளர்கள் பலரை அன்னியப்படுத்திவிட்டதாக உணர்கிறேன்.எப்போதும் குழந்தைத்தனமும் புன்சிரிப்பும் கொண்ட பாத்திரமாக அவள் வந்தாலும் ஒரு மெல்லிய சோகம் அவளைச் சூழ்ந்துள்ளைதை நம்மால் உணரமுடிகிறது.</p>
<p>இயக்குநர் மணிரத்தினம் தன்னுடைய திரைமொழியில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளார். தற்போதைய படங்களில் கையாளப்படும் தீவிரத் தன்மையும் இயல்பான வாழ்க்கைமுறையும் பின்னி உருவாக்கப்படும் திரை மொழியை அவரும் மிக இலாவகமாகக் கையாண்டுள்ளார். ஒரே விஷயம் பாடல்கள். படத்தை இரசித்த பலருக்கும் பாடல்கள் பெரிய ஸ்பீட் பிரேக்கர்கள். ஒன்றிரண்டு பாடல்களே போதுமானதாக இருந்திருக்கும். மற்றவை கொஞ்சமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.</p>
<p>நான் சிறுவயதுமுதல் கடலை கவனித்து வருகிறேன். கடல் ஒவ்வொருமுறையும் எனக்கு ஒவ்வொரு அனுபவத்தை தருகிறது. ஆனால் நாம் விழித்திருக்க வேண்டும் அதன் அலைமொழியை கவனித்திருக்க வேண்டும் அதன் இரைச்சலை கேட்டிருக்கவேண்டும். கணம்தோறும் மாறும் கடலை கண்டுகொண்டேயிருக்கவேண்டும். அந்த உழைப்பைத் தராமல் வெறுமனே காலைக் கழுவிவிட்டு பஜ்ஜி வாங்கி தின்றுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டால் போதுமென்று நினைப்பவர்களுக்கு கடல் வெறும் கடல்தான். ’கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்’</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=631&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&#038;p=631</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>ராஜாங்கம்</title>
		<link>http://cyrilalex.com/?p=625</link>
		<comments>http://cyrilalex.com/?p=625#comments</comments>
		<pubDate>Sat, 14 Jul 2012 09:52:48 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[சிறுகதை]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=625</guid>
		<description><![CDATA[என் பழைய நினைவுகள் அழிக்கப்பட்டுவிட்டன என்றே தோன்றுகிறது. அவ்வப்போது துண்டு துண்டுகளாக, ஒரு சிறிய படத்தின் காட்சிகளாக அவை நினைவுக்கு வந்து போகின்றன. அவையெல்லாம் உண்மையா கற்பனையா என்று என்னால் வகுத்துக்கொள்ள முடிவதில்லை. அவைதான் கனவா இல்லை நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிஜம்தான் கனவா என பலமுறை தோன்றியதுண்டு. நான் தெருவில் அழுக்கடைந்து கிடக்கும் ஒரு பைத்தியமென்றும் இந்த வாழ்க்கையும் என் பழைய வாழ்க்கை குறித்த கனவுகளுமெல்லாமும் என் கற்பனையே என்றும் நினைப்பதுண்டு. நான் கல்லூரிக்கு வெளியில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என் பழைய நினைவுகள் அழிக்கப்பட்டுவிட்டன என்றே தோன்றுகிறது. அவ்வப்போது துண்டு துண்டுகளாக, ஒரு சிறிய படத்தின் காட்சிகளாக அவை நினைவுக்கு வந்து போகின்றன. அவையெல்லாம் உண்மையா கற்பனையா என்று என்னால் வகுத்துக்கொள்ள முடிவதில்லை. அவைதான் கனவா இல்லை நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிஜம்தான் கனவா என பலமுறை தோன்றியதுண்டு. நான் தெருவில் அழுக்கடைந்து கிடக்கும் ஒரு பைத்தியமென்றும் இந்த வாழ்க்கையும் என் பழைய வாழ்க்கை குறித்த கனவுகளுமெல்லாமும் என் கற்பனையே என்றும் நினைப்பதுண்டு.</p>
<p>நான் கல்லூரிக்கு வெளியில் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும்போதுதான் என்னை தூக்கி வந்தார்கள். இரவு ஏழு மணி இருக்கும். நான்குபேர். பழைய அரசர்காலப் படங்களில் பல்லக்கு தூக்குபவர்களைப்போலிருந்தார்கள். அதேபோலவே வரிந்துகட்டிய வேட்டி அணிந்திருந்தார்கள். இடுப்பில் துண்டு இறுகக்கட்டப்பட்டிருந்தது. முதுகுத் தண்டுக்கு ஆதரவாக இருக்கலாம். சட்டையில்லை. எருமையின் நிறத்துடன் இறுகிப் படிந்த உடல்வாகுடன் இருந்தனர். எப்படி என்னை இங்கு கொண்டு வந்தார்கள் என்றே தெரியவில்லை. நான் மயங்கியிருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த நினைவு முற்றிலும் அழிந்திருக்க வேண்டும். கோயம்பத்தூரிலிருந்து இந்த இடத்துக்கு நடைபயணமாக வரவேண்டுமென்றால் மூன்று நாட்களாவது வேண்டும். இரண்டு மலைகளையேனும் கடந்து காட்டு வழிகளில் வரவேண்டும்.</p>
<p>நான் இங்கு வந்து சேர்ந்தபோது கண்ட முதல் காட்சி ஒரு கரிய தாமரைக் குளம். தண்ணீர் சாக்கடை நீர் போலக் கரியதாய் இருந்தது அதில் இருந்த எல்லாமே கருமையின் பல வண்ணங்களிலிருந்தன. உயிருள்ள சாம்பல்நிற தாமரை மொட்டை நான் கண்டிருந்ததேயில்லை. தாமரை இலைகளோ கடுங்கரிய நிறத்திலிருந்தன, தூரத்தில் மதகின் வழியே கரிய நீர் கொட்டிக்கொண்டிருந்தது. ஒரு படித்துறையில் யாரோ குளித்துக்கொண்டிருந்தனர். அது ஒரு தெளிவற்ற நினைவுதான். அடுத்து அந்த மலைத்தொடரைக் கண்டேன். அந்த இடம் மலைகளால் சூழப்பட்டிர்ந்தது. மலைகளும் கறுப்பு வெள்ளௌயில் காட்சியளித்தன. அண்மையிலிருந்த மலைகள் கரிய நிலக்கரிக் குவியல்களாகத் தோன்றின. அவற்றிலிருந்த பெரிய பாறைகள் பெரும் நிலக்கரிப் பாளங்களாகத் தோன்றின. தொலைவிலிருந்த மலைகள் ஈரத்திருநீற்றைப் போலவும் இன்னும் தொலைவில் மலைகள் வெள்ளை நிறத்திலுமிருந்தன. வானமோ வெளிறிய சாம்பல் நிறத்திலிருந்தது. அதன்மீது பளிச்சிடும் வெண்மையுடன் மேகங்கள் நகர்ந்துகொண்டிருந்தன.</p>
<p>பின்பு நான் சிதிலமடைந்து கிடந்த இந்த அரண்மனையைக் கண்டேன். ஒரு குட்டி அரண்மனை. ஒரு பேரரசனின் அரண்மனைக்கு ஒரு மாதிரியை செய்து வைத்ததைப்போல. ஆனால் மிகப் பழமையானதாயிருந்தது. சுவரெங்கும் கரிய பாசி படர்ந்திருந்தது. சுவற்றின் மூலைகளில் பூச்சிகளின் கூடுகளும் வலைப்பின்னல்களுமாயிருந்தன. சுவற்றுப் பூச்சுக்கள் பல இடங்களில் உடைந்து வீழ்ந்திருந்தன. உள்ளே கற்கள் தெரிந்தன கற்கள் கறுப்பு நிறத்திலிருந்தன. ஆங்காங்கே அதன் பழைய வெள்ளைப் பூச்சு தெரிந்தது. அரண்மைனையின் உட்பக்கத்திற்கு வெளியிலிருந்து ஒளி செல்லவே இல்லை. அதன் பழைய மரச்சன்னல்கள் இறுக மூடி வைக்கப்பட்டிருந்தன, சிறிதாகத் திறந்து கிடந்த கதவின் வழியே ஒரு நீண்ட செவ்வக வடிவாக ஒளி விழுந்தது. அந்த ஒளியும் வெள்ளை நிரத்திலிருந்தது. உள்ளே முகடுகளில் இருட்டு அப்பி இருந்தது. குரலெழுப்பினால் அவ்விருட்டு பறந்து கலைந்துவிடுமென்றே தோன்றியது. கருமை. எங்கும் கருமை. ஆங்காங்கே பழைய வெண்மை என அத்தோற்றம் ஒரு கறுப்பு வெள்ளை படக்காட்சியை நினைவூட்டியது.</p>
<p>என்னைச் சுற்றி எல்லாமே கறுப்பும் வெள்ளையுமாகவே தோற்றமளித்தன. அந்த அரண்மனைத் தோட்டமும், அதைச் சுற்றியிருக்கும் காடுகளும்கூட. தோட்டமோ வெறும் புதர்களைக் கொண்டதாயிருந்தது. சாம்பல் நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் சில காட்டுப்பூக்கள் மலர்ந்திருந்தன. காடு முழுவதும் அடர்ந்த கரிய மரங்கள் காற்றில் மெல்ல தலையசைத்துக்கொண்டிருந்தன, அடர்ந்த முடியுடைய ராட்சதன் ஒருவனின் தலைமுடி அசைவதுபோல. அது மாலையோ இரவோ அதிகாலையோ அல்ல. போதுமான வெளிச்சமிருந்தது. ஆனாலும் கறுப்பும் வெள்ளையும் அவற்றின் பல வண்ணங்களைத் தவிர வேறெதையும் என்னால் காண முடியவில்லை. சூரியன் மஞ்சளல்லாமல் வெள்ளையாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. தூரத்தில் சாம்பல் நிறப் புல்வெளியில் சாம்பல்நிறப் பறவைகள் மேய்ந்துகொண்டிருப்பதைக்கண்டேன். அவை பச்சைக்கிளிகளாயிருக்கவேண்டும் என யூகிக்கிறேன். என் உடலின் நிறமும் துல்லிய கருஞ்சாம்பல் நிறமாக மாறியிருப்பதை என் கைகளில் கண்டேன்.  பிற வண்ணங்களை பார்க்கும் சக்தியை என் கண்கள் இழந்துவிட்டன என்று நினத்தேன் அல்லது கறுப்பு வெள்ளையிலாலான ஒரு உலகிற்குள் நான் வந்துவிட்டிருக்கிறேன். பழைய கோப்புக்களையோ புத்தகங்களையோ புரட்டும்போது ஏற்படும் மெல்லிய நார்றமொன்று எப்போதும் வீசிக்கொண்டிருந்தது.</p>
<p>என் கைகளோ கால்களோ கட்டப்படவில்லை என்றாலும் என்னால் எழுந்து நிற்கவோ கையசைக்கவோ முடியவில்லை. பேசக்கூட முடியவில்லை. ஒரு வசியக் கட்டுக்குள்ளிருப்பதைப்போல உணர்ந்தேன். நான் தரையில் உட்கார்ந்திருந்தேன். அந்த நான்குபேரும் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். திடீரென அந்த நான்குபேரும் உடல் கூனி நின்றனர். அந்த பாழடைந்த குட்டி அரண்மனையின் உள்ளிருட்டிலிருந்து ஒரு கரிய உருவம் தோன்றி வந்தது. முதலில் அவரை ஒரு நடமாடும் நிழல் என்றே நினைத்தேன். சற்று தடித்த உடல்வாகு. வயிறு வீங்கிப் புடைத்திருந்தது. முதுமையடைந்து பொலிவிழந்த முகம். ஒளியிழந்த கண்கள். அவரது உடல் முழுக்க அழுக்கடைந்திருந்தது. கால்களிலும் கைகளிலும் நகங்கள் மட்கிப்போன மரக்கட்டைகளைப் போல காட்சியளித்தன. அவர் அவர்களை ஏதோ கேட்டார். தமிழில் அல்ல. அவர் பேசிய மொழியில் அவ்வப்போது சில தமிழ் வார்த்தைகள் கலந்து வந்தன. ஒரு முதிராத கரடு முரடான மொழி போலத் தோன்றியது. அவரின் குரல் கனத்திருந்தது. அதிகாரத்தொனியிருந்தது. நான்குபேரில் ஒருவன் குனிந்து நின்றுகொண்டே தலையசைத்தான். பின்பு அந்தப் பெரியவர் என் அருகில் வந்தார். &#8216;வருக&#8217; எனத் தமிழில் சொன்னார். பின்பு அந்த நான்குபேருக்கும் ஏதோ கட்டளை ஒன்றைச் சொன்னார். அவர்கள் என்னை அந்த அரண்மனையின் இருளுக்குள் தூக்கிச் சென்றார்கள். அந்த இருளுக்குள்ளிருந்து பல கண்களும் என்னை பார்த்துக்கொண்டிருந்ததைப்போலிருந்தது.</p>
<p>உருக்குலைந்து அதிர்ந்து ஆடிக்கொண்டிருக்கும் ஒரு மரப்படியின் மீதேறி மாடியில் ஒரு அறைக்குள் என்னைத் தள்ளி கதவை சாத்தினார்கள். மூலையில் ஒடுங்கி அமர்ந்தேன். பின்பு களைப்பில் அங்கிருந்த படுக்கையில் படுத்துக்கொண்டேன். எத்தனை மணி நேரம் உறங்கியிருப்பேன் என்று தெரியவில்லை. ஒரு நாள் முழுக்கவும் தூங்கியிருக்கலாம். எழுந்தபோது அறையில் ஒரு சன்னல் இருந்தது. அதைத் திறந்தேன் வெள்ளை ஒளி உள்ளே வந்து விழுந்தது. தூசி எழுந்து ஒளியில் மிதந்தது. வெளியில் அதே கறுப்பு வெள்ளையில் இயற்கை மாயமாகத் தோற்றமளித்தது. என்னால் இன்னும் பேச முடியவில்லை. அல்லது நான் பேச முற்படவில்லை. அங்கிருந்து தப்பி ஓடுவது குறித்தே எனக்கு யோசனையில்லை. என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மெல்ல நடந்து அந்த அறையின் தடித்த கதவின் பக்கம் வந்து நின்று அதை விரலால் தொட்டேன். அதை உடைக்கவோ தள்ளவோகூட என்னால் முடியாது என்று தோன்றியது. அப்படியே தப்பிச் சென்றாலும் வெளியே அந்த நான்கு பேரும் கண்டிப்பாக காவலிருப்பார்கள்.</p>
<p>அறைக்குள் மேசையில் உணவு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். கரிய நிற ஆப்பிள் போன்ற பழங்கள். அப்படி பழங்கள் இருக்கும் என நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. ஒரு பழத்தை எடுத்து பிய்த்தேன். உள்ளே கன்னங்கரியதாய் பழத்தின் சதை இருந்தது. கரியச் சாறு கையில் வழிந்தது. சட்டென்று கீழே விட்டெறிந்தேன். பசி வயிற்றில் நெருப்பாய் எரிந்துகொண்டிருந்தது. அந்த உணவுத்தட்டை எடுத்து கீழே வீசினேன்.</p>
<p>மேசையின் ஓரத்தில் ஒரு புத்தகம் இருந்தது. மிகப் பழைய புத்தகம். சாம்பல் நிற தடித்த அட்டையில் எதுவும் எழுதப்படவோ பதிக்கப்படவோ இல்லை. புத்தகத்தை புரட்டினேன். வெற்றுத்தாள்களாய் இருந்தது. ஆங்காங்கே காய்ந்த மிருகத் தோல்களும் தாள்களைப்போல மடித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் எழுத்துக்களொன்றுமில்லை. கடைசி பக்கமும் வெற்று வெள்ளைத் தாளாயிருந்தது. ஆனால் அதில் ஒரு படம் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது என என் மனதில் தோன்றியது. வியப்பாகவும் பயமாகவும் இருந்தது. எனக்கு மனம் பிசகி ஒரு பைத்தியக்கார விடுதியில் சேர்த்திருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டேன். பசி. தரையில் கிடந்த அந்தக் கரிய பழங்களிலொன்றை கையிலெடுத்தேன். பிய்த்து முகர்ந்து பார்த்தேன். எந்த மணமுமில்லை. இன்னொன்றை எடுத்து பிய்த்தேன். மணமில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு வாயிலிட்டேன். கண்களை மூடிக்கொள்வது எத்தனை அபத்தமான பாதுகாப்புணர்வைத் தருகின்றது? அந்தப் பழத்தில் எந்தச் சுவையுமில்லை. வெறும் நீரை உள்ளடக்கிய சுவையற்ற மணமற்ற பழம். தரையிலிருந்து எல்லா பழங்களையும் எடுத்துத் தின்றேன். என் கையில் கருமையான பழச் சாற்றின் கறை படிந்திருந்தது.</p>
<p>மீண்டும் உறக்கம் வந்தது. உறங்கி எழுந்தபோது மேசையில் ஒரு தட்டில் அதே கரிய நிற பழங்கள் இருந்தன. இந்த முறை எந்தத் தயக்கமுமில்லாமல் பழங்களை உண்டேன். இன்னும் எத்தனை நாளில் பைத்தியம் தெளியுமோ என்று நினைத்தேன். எல்லாமே கறுப்பும் வெள்ளையுமாக இருந்தது. வேறு ஏதேனும் ஒரு வண்ணப்பொருளையேனும் பார்த்துவிட மாட்டோமா எனும் ஏக்கத்தை அளித்தது. வண்ண்ங்களற்ற உலகம் ஏமாற்றமளித்தது.</p>
<p>அடுத்த நாள் (என்றே நினைக்கிறேன்) பக்கத்து அறையிலிருந்து சத்தம் கேட்டது. யாரோ ஒருவரை சிலர் நையப்புடைத்துக்கொண்டிருந்தார்கள். அவன் வலியில் கதறிக்கொண்டிருந்தான். சற்று வயதான குரல். பரிச்சயமான குரலாகவும் தெரிந்தது. அடி விழுவதையும் கதறலையும் கவனித்துக்கொண்டிருந்தேன். அடிப்பது அந்த நான்குபேரும் என்று தெரிந்துகொள்ள முடிந்தது. அடி வாங்குபவன் ஏதோ பெருங்குற்றம் செய்துள்ளான். எனக்கு உள்ளூர பயம் எழுந்தது, அடுத்து நானாக இருக்கலாம் என்று. எனக்கு அடி தாங்க சக்தி இல்லை. அவர்கள் விருப்பம்போல நடந்துகொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.</p>
<p>மாலை பழங்களைத் தின்றுவிட்டு கண்ணை மூடித் திறக்கையில் ஒரு திடுக்கிடும் காட்சி கிடைத்தது. அந்த வெற்றுப் புத்தகத்தின் அட்டையில் சில எழுத்துக்கள் தென்பட்டன. மிக மங்கலான எழுத்துக்கள். நான் புத்தகத்தை கயிலெடுக்கும்போதே அவ்வெழுத்துக்கள் மாயமாய் மறைந்தன. பிரமை என்று நினைத்தேன், நான் படிக்க விரும்புகிற கதை ஒன்றை என் மூளை எனக்காக அந்தப் புத்தகத்தில் எழுத விரும்புகிறது போல. மீண்டும் கண்களை சற்று மூடித் திறந்தேன். இப்போதும் அதேபோல எழுத்துக்கள் தோன்றி மறைந்தன. இம்முறை சில எழுத்துக்கள் கண்ணில் பட்டன. தமிழ் எழுத்துக்கள்தான். கண்களை மூடியபோது அந்தக் காட்சி மனதில் ஓடியது எழுத்துக்கள் மனதுக்குள் துல்லியமாகத் தெரிந்தன. &#8216;சிம்மபுர ராஜ வரலாறு&#8217; என்பதுதான் அந்த புத்தகத்தின் தலைப்பு.</p>
<p>கண்களைத் திறந்தேன். இப்போது அந்த புத்தகத்தின் அட்டையில் அந்த எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன. &#8216;சிம்மபுர ராஜ வரலாறு&#8217;. புத்தகத்தின் முதல் பக்கத்தை புரட்டினேன். அதில் எதுவும் எழுதப்படவில்லை. மேலும் சில பக்கங்களிலும் எதுவுமில்லை. திடீரென ஏதோ தோன்ற சட்டென்று அட்டைக்குச் சென்றேன். அது.. அது பழுப்பு நிற வண்ணத்திலிருந்தது. முன்பு கறுப்பு நிறத்திலிருந்த அட்டை பழுப்பு நிறத்திலிருந்தது. அதில் தங்க நிறத்தில் எழுத்துக்களிருந்தன. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பின்னகர்ந்தேன். அறையின் மூலையிலிருந்து பார்க்கும்போது அந்த கறுப்பு வெள்ளை காட்சியில் அந்த புத்தகத்தின் அட்டையின் வண்ணம் மட்டும் தனித்துத் தெரிந்தது. சட்டென பயம் தொற்றிக்கொண்டது. கறுப்பு வெள்ளையாகவே காட்சி இருந்திருக்கலாமோ என்று நினைத்தேன்.</p>
<p>அடுத்த நாள் காலையில் நான் எழுந்தபோது கண்ட காட்சி எனக்கு இப்போது மிகத் துல்லியமாக நினவிலுள்ளது. மேசையில் அதே தட்டில் பழங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. எல்லா பழங்களும் அதே கரிய நிறத்திலேயே இருந்தன. ஒரே ஒரு பழத்தைத் தவிர. அந்தச் சிறிய பழக் குவியலின் மேல் முகட்டிலிருந்த பழம் மட்டும் இரத்தச் சிவப்பில் தெரிந்தது. செக்கச் சிவந்த ஆப்பிளைப்போல, அல்லது ஒரு ப்ளம் பழத்தைப் போல. உங்களுக்குப் புரிகிறதா நான் சொல்வது? என் காட்சி முழுவதுமே கறுப்பு வெள்ளையில் தெரிகின்றது ஒரே ஒரு பழம் மட்டும் செக்கச் செவேலென்று&#8230; இரவு வானத்தில் நிலா செக்கச் சிவப்பாக எரிந்துகொண்டிருந்தால் எப்படித் தோன்றும்? அதைப்போல. அல்லது ஒரு கரிய எருமையின் கண்கள் செக்கச் சிவந்திருப்பதைப்போல.</p>
<p>சட்டென்று எழுந்து அந்தப் பழத்தை உண்டேன். என் ஆழ்மனதில் ஏதோ தோன்றியிருக்க வேண்டும். அது என்னவென்று பழத்தை கடித்தவுடன் தெரிந்தது. சுவை. முதல் கடியிலேயே இனிமை திகட்டியது. உடனேயே சுவை மாறி சற்று கசந்தது. கொஞ்ச நேரம் துவர்த்தது. பின்பு கள்ளைப்போல புளித்தது மணந்தது. பின்பு சுவையேயின்றி மறைந்துபோனது. அடுத்த கடியிலும் அதேபோல இனிமையும். கசப்பும், துவர்ப்பும் புளிப்பும் வந்து பின்பு சுவையின்றி மறைந்து போனது. ஒவ்வொரு முறை அதை சுவைத்தபோதும் என்னால் அதன் சுவையை நினைவில் வைத்திருக்க முடியவில்லை. அதை மீண்டும் சுவைத்தே உணர முடிந்தது. மீண்டும் முற்றிலும் சுவையும் மணமும் மறந்து போயின.</p>
<p>அந்தப் புத்தகம் இப்போது முழுவதுமாக வண்ணத்தில் தெரிந்தது. பழத்தைக் கீழே வைத்துவிட்டு சிம்மபுர ராஜ வரலாற்றை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அதன் சுருக்கம் இதுதான். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிம்மபுரத்தில் (அது கோயம்புத்தூருக்கருகிலுள்ள ஒரு மலையடிவாரமாயிருக்கலாம்) ஒரு சிற்றரசு இருந்தது. ஆயிரத்துக்கும் குறைவான வீடுகள் அங்கே இருந்தன. மலையின் மறுபக்கம் இன்னும் ஆயிரம் வீடுகள் இருக்கலாம். மிகவும் வளமான இடமாக இருந்தது. கொள்ளை நோய் ஒன்று அந்த சிற்றரசை தாக்கியபோது ராஜ விசுவாசிகள் அரசனையும் அவன் மனைவியையும் பாலகனாயிருந்த இளவரசனையிம் பதினெட்டு வகை வேலையாட்களையும் அவர்களின் குடும்பத்தையும் நூறு வண்டி பொருட்களையும் சேர்த்து பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் காடு மலைகள் வழியே பயணித்து இந்த குளக்கரையில் தங்கினர். சில நாட்களுக்கு பின் சிம்மபுரத்துக்கு அனுப்பப்பட்ட ஆள் திரும்பவேயில்லை. அடுத்து ஒருவனும் திரும்பவில்லை. மன்னனோடு வந்தவர்கள் நூற்றுக்கருகிலிருந்தனர். செம்மண்ணையும் மலைக் கற்களையும், மரங்களையும் கொண்டு இந்த குட்டி அரண்மனை கட்டப்பட்டது. அவர்களின் வம்சாவளியில் வந்தவர்கள்தான் இன்று இங்கே இருப்பவர்கள்.</p>
<p>இவர்கள் இங்கு வந்த கதைக்குப் பின் அவர்களின் பல சந்ததியினர் குறித்த குறிப்புக்களிருந்தன. திருமணங்கள், குழந்தை பிறப்புக்கள். பஞ்ச காலங்கள், வெள்ளக் காலங்கள் குறித்த குறிப்புகள். இவற்றில் சில விடுபட்டுமிருந்தன. பிற்காலத்தில் யாரோ எழுதத் துவங்கி பதிப்பது தொடர்ந்திருக்க வேண்டும். கடைசி அரசனின் வரலாற்றில் குழந்தை பிறப்புகளுக்குப்பின் ஒரு குறிப்பிருந்தது. அதில் மன்னனின் மூத்த மகன் சீரடிச் செவ்வேள் இங்கிருந்த பைத்தியக்காரன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. நான் கடைசி பக்கத்தை புரட்டினேன். அதில் முன்பு எனக்குத் தோன்றியதைப் போலவே மெல்லிய மையால் ஒரு படம் வரையப்பட்டிருந்தது ஒரு சிறுவனின் படம். ஆறு வயதிருக்கும். என்னால் அதை நம்பவே முடியவில்லை. அது ஆறு வயதில் என்னை பார்ப்பதுபோலவே இருந்தது.</p>
<p>என் அப்பா எனக்கு வளர்ப்புத் தந்தை எனச் சொல்லியிருந்தார். தான் ஒரு பழங்குடி இனத்தவன் என்றும் அந்த ஊரில் நோய் வந்து எலோரும் சாகும்போது என்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டதாகவும் என்னிடம் சொல்லியிருந்தார் . மிகக் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து என்னை படிக்கவைத்தார். நல்ல உழைப்பாளி. அவர் என்னிடம் அதிகம் பேசுவதில்லை. என்னைத் தொடுவதுகூடக் கிடையாது சற்று தூரத்திலிருந்தே என்னை பார்த்துக்கொள்வார். எனக்கு அது புரியாததாகவே இருந்தது. நானோ எப்போதும் அமைதியாக தனித்தே இருக்கப் பழகிக்கொண்டேன். இப்போது எனக்கு நியாபகம் வந்தது, பக்கத்து அறையில் கேட்டது அவரது குரல்தான். அப்படியானால் நாந்தான் சீரடிச் செவ்வேளா?</p>
<p>&#8216;சீரா சீரா&#8217; என என்னை ஒரு பெண் முன்பு கூப்பிட்டிருப்பதைப்போல ஒரு பிரமை தோன்றியது. அந்தக் கரிய‌ தாமரைக் குளத்தில் நான் நீராடி களித்திருந்ததாய் ஒரு நினைவு வந்து சென்றது. அந்தக் குளிர்ந்த நீரை என்னால் உணர முடிந்தது. மரமெங்கும் செக்கச் சிவந்து பழுத்துத் தொங்கும் இந்த கிட்டிப் பழங்களை நான் கண்டிருக்கிறேன். கிட்டிப் பழம். பெயர்கூட நினைவிருக்கிறது. அவற்றை நான் முன்பு மிகவும் விரும்பு உண்பேன், அது மட்டுமே எனக்கு உணவாயிருந்தது என்றொரு நினைவு வந்தது. இல்லை இவை எல்லாம் கற்பனை என்று இன்னொரு குரல் கதறியது. நீ கோயம்பத்தூரில் கல்வி கற்று கலைக் கல்லூரியில் ப்யூனணாகப் பணியாற்றும் வேல் என்றது அந்தக் குரல். தினமும் எல்லோரிடமும் கேவலமாக திட்டு வாங்கி கூனிக் குறுகி நிற்கும் நான் ராஜ வம்சமா? என்ற கேள்வி எழுந்தது. பைத்தியம் பைத்தியம் என்றது இன்னொரு குரல். இப்போது தட்டிலிருந்த பழங்களெல்லாமே சிவப்பு நிறத்திலிருந்தன. பழத்தட்டு தங்க நிறத்தில் மினுமினுத்தது. என் கைகள் பழைய மாரநிற வண்ணத்தில் தெரிந்தன. அறையின் சன்னலுக்கு ஓடினேன். வெளியே காட்சிகளனைத்தும் பல்வேறு வண்ணங்களிலிருந்தன. தூரத்தில் தெளிந்த இளம்பச்சை நிறத்தில் தாமரைக் குளத்து நீர் தெரிந்தது. அதன் மீது மீனின் செதில்களைப்போல ஒளி பட்டு மினுங்கிக்கொண்டிருந்தது. மலைகள் பச்சையின் பலவண்ணங்களில் காட்சியளித்தன. சட்டென்று ஓடி கதவைத் தள்ளினேன். திறந்துகொண்டது. அந்தக் கதவு பூட்டப்படவேயில்லை எனத் தோன்றியது.</p>
<p>அறைக்கு வெளியே நான் கண்ட காட்சி வர்ணிக்க முடியாதது.</p>
<p>அரண்மனை புத்தம் புதிதாய் கட்டப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டதைப்போலிருந்தது. மரத்தூண்கள் எண்ணை பூசப்பட்டதைப்போல மினுமினுத்தன. அரண்மனைக்குள் மூலைகளில் கூட இருளே இல்லை. அதன் கூரைகளிலும் சன்னல்களிலும் தங்கம் பூசப்பட்டிருந்தது. பல வண்ணத் துணிகளைக் கொண்டு அரண்மனையின் தாள்வாரங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கர்பூரமும் மல்லிகையும் மணந்தன. அங்கே யாருமேயில்லை. வேகமாக நடந்து அரண்மனையின் நடுப்பகுதிக்கு வந்தேன். முன்பு பார்த்ததைவிட அரண்மனை பெரியதாக, ஒரு ராஜாங்கத்தின் அரண்மனையாகவே தோன்றியது. அங்கே தங்கம் மின்னும் ஒரு அரியணை இருந்தது. ஓடிச் சென்று அதில் அமர்ந்தேன். அதில் முன்பு நான் அமர்ந்திருக்கிறேன் என்று ஒரு நினைவெழுந்தது. என் நினைவு தெரிந்து முதன்முறையாக ஆத்மார்த்தமான ஒரு புன்னகை தோன்றியது. கொஞ்சம் வாய்விட்டு சிரித்தும்விட்டேன். பைத்தியம் பைத்தியம் என்றது ஒரு தீனக்குரல். அக்குரல் மெல்ல மறைந்து போவதைப்போலிருந்தது. மெல்லக் கண்களை மூடினேன். என்னை அறியாமலே சிரித்துக்கொண்டிருந்தேன். &#8216;சீரா சீரா&#8217; எனும் குரல் கேட்டு எழுந்தேன். என்னருகே ஒரு மத்திய வயதுப் பெண்மணி அரச உடையில் நின்றுகொண்டிருந்தாள். அவளருகே அரச உடையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். என்னை &#8216;வருக&#8217; என வரவேற்ற அசிங்கமான அந்த வயதானவர் இப்போது பொலிவான முகத்துடன் இராஜ களையோடு நின்றுகொண்டிருந்தார். அவரது ஆடைகள் புத்தம் புதியதாயிருந்தன. அவர்களைத் தாண்டி மக்கள் நின்றுகொண்டிருந்தனர். எண்ணிக்கை நூறுக்கும் மேல் இருக்கும். அவர்கள் முகங்களில் ஆச்சரியமும் சந்தோஷமும் நிறைந்திருந்தது. ஒருக‌ண‌ம் என் பார்வையை திருப்பிய‌போது அவ‌ர்க‌ளெல்லாம் பைத்திய‌ம் என்று முணுமுணுடத்த‌தைப்போலிருந்த‌து. ச‌ட்டென‌த் திரும்புகையில் எல்லோரும் புன்ன‌கையுட‌ன் உறைந்துபோலன‌வ‌ர்க‌ளைப்போல‌ நின்றுகொண்டிருந்த‌ன‌ர்.</p>
<p>அன்றிலிருந்து நான் இந்த குட்டி ராஜாங்கத்தின் அரசனாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் சின்ன அசைவுகளுக்கெல்லாம் பணி செய்ய ஆட்களிருக்கிறார்கள். என்னை காதலிக்கும் பேரழகி ஒருத்தி இருக்கிறாள். பட்டாடைகளாலும் பொன்னாலும் நான் தினமும் அலங்கரிக்கப்படுகிறேன். ஆணையிடுகிறேன் ஆட்சி புரிகின்றேன். நானே இந்த சிம்மபுரத்தின் புதிய ராஜா. பைத்தியம் பைத்தியம் எனும் அந்தக் குரல் அவ்வப்போது கேட்கிறது. ஆனால் என்னால் இந்த இன்பங்களனைத்தையும் உணர முடிகிறது. கிட்டிப் பழத்தின் சுவை இப்போது மறப்பதில்லை. அவர்களின் அந்தப்பழைய மொழி எனக்கு மிகப்பரிச்சயமாகிவிட்டது. என்மேல் புதிய பாடல் ஒன்றும் இயற்றப்பட்டுவிட்டது. நான் முடிசூடிய வரலாறு அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுவிட்டது.</p>
<p>ஏன் இந்தக் கதையை உங்களிடம் சொல்கிறேனென்றே தெரியவில்லை. எது நிஜம் எது பொய் எனத் தெரிந்துகொள்ள முடியாத ஒரு உலகத்தில் நீங்களும் ஒரு அரசனாக அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கலாம் என நான் எண்ணுவதாலோ என்னவோ?</p>
<p>இல்லை ஒருவேளை நான் தெரு ஓர‌த்தில் கிட‌ந்துகொண்டு, மேல் நோக்கி, இல்லாத ஏதோ ஒன்றை வெறித்துப்பார்த்து புன்ன‌கைத்துக்கொண்டிருக்கும் ஒரு அழுக்க‌டைந்த‌ பைத்திய‌மென்றாலும் பரவாயில்லை. என்னை அப்படியே விட்டுவிடுங்கள். எனக்கென ஒரு ராஜாங்கம் உள்ளது.</p>
<p>=======================</p>
<p>நன்றி: வடக்குவாசல் (ஜூலை 2012)</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=625&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&#038;p=625</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆக்குபை அமெரிக்கா!</title>
		<link>http://cyrilalex.com/?p=621</link>
		<comments>http://cyrilalex.com/?p=621#comments</comments>
		<pubDate>Fri, 23 Mar 2012 01:41:48 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[செய்தி விமர்சனம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=621</guid>
		<description><![CDATA[முதலில் அமெரிக்கப் பொருளாதார அரிச்சுவடிகளிலிருந்து ஒரு பாலபாடம். 2007 கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் சொத்தில் 85% பங்கு 20% பணக்காரர்களிடமும் மீதி 15% மிச்சமுள்ள 80% மக்களிடமும் உள்ளது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 1% பேர் அமெரிக்காவின் 34.6% சொத்துக்களுக்கு உரிமையாளர்கள். மீதி 99%பேரில் சிலர் தற்போது &#8216;வால்&#8217; தெருவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கியமானக் குறியீடுகளில் ஒன்று நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட். இங்குதான் உலகப்புகழ் பெற்ற நியுயார்க் பங்கு வர்த்தக மையம் உள்ளது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>முதலில் அமெரிக்கப் பொருளாதார அரிச்சுவடிகளிலிருந்து ஒரு பாலபாடம். 2007 கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் சொத்தில் 85% பங்கு 20% பணக்காரர்களிடமும் மீதி 15% மிச்சமுள்ள 80% மக்களிடமும் உள்ளது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 1% பேர் அமெரிக்காவின் 34.6% சொத்துக்களுக்கு உரிமையாளர்கள். மீதி 99%பேரில் சிலர் தற்போது &#8216;வால்&#8217; தெருவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள்.</p>
<p>அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கியமானக் குறியீடுகளில் ஒன்று நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட். இங்குதான் உலகப்புகழ் பெற்ற நியுயார்க் பங்கு வர்த்தக மையம் உள்ளது. உலகின் <img class="alignleft" title="99%" src="http://load.kovideo.net/s/raw/n/occupy-wall-street-hollywood.jpg" alt="99%" width="164" height="132" />தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகொண்டதாக நம்பப்படும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கிய புனிதத்தலமான வால் தெரு நோக்கி கடந்த செப்டம்பர் 17 சனிக்கிழமை ஒரு கூட்டம் கோஷங்களுடனும், பாடல்களுடனும், பேனர்களுடனும் நகர்ந்துகொண்டிருந்தது. வழக்கமான கறுப்பு கோட்டும் டையும் கையடக்க முதலைத் தோல் பெட்டியும் இல்லாத மக்களின் கூட்டம். ஒன்று இரண்டு பத்து நூறு என கூட்டம் பெருகியது. அவர்களின் அன்றைய கோரிக்கைகள் பல, நோக்கம் ஒன்றே ஒன்று, வால் ஸ்ட்ரீட்டில் குடிபுகுவது. கூட்டம் மெல்ல நகர்ந்து நியு யார்க்கின் ஜக்கோட்டி பூங்காவிற்கு வந்து சேர்ந்தது. கூடாரங்கள் அமைக்கப்பட்டன வந்த ஆயிரம்பேரில் 300பேர் அன்றிரவை ஜக்கோட்டிப் பூங்காவில் கழித்தனர்.</p>
<p>இப்படி எளிமையாக, வெறும் ஆயிரம்பேர்களைக் கொண்டு துவங்கிய இந்தப் போராட்டம் இன்று அமெரிக்கப் பெருநகரங்களிலெங்கும் பரவிப் பெருகி வளர்ந்து வருகிறது. &#8216;ஆக்குபை&#8217; (முற்றுகை) எனும் பெயரில் பல்வேறு சிறு சிறு இயக்கங்கள் உருவாகியுள்ளன. சியாட்டில் முற்றுகை, போர்ட்லான்ட் முற்றுகை, என வெவ்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நகரின் முக்கிய பகுதியில் கூடுவது, கூடாரமிடுவது அங்கேயே தங்குவது என்பதுவே போராட்ட முறை. ஒட்டு மொத்த அமெரிக்க அரசியல் களமும் தன் கவனத்தை ஆக்குப்பை இயக்கத்தின்பால் கொண்டுள்ளது. ஊடக விவாதங்கள் ஆக்குப்பையை சுற்றியமைந்துள்ளன. இது ஒரு உலகளாவிய இயக்கமாகவும் மாறிவருகின்றது. தென் கொரியா, இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி ஆஸ்திரேலியா இங்கிலாந்து உட்பட்ட பல்வேறு நாடுகளில் ஆக்குப்பை இயக்கங்கள் உருவாகியுள்ளன.</p>
<p>ஆக்குபை இயக்கம் அடிப்படையில் ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கம். இதை ஒருங்கிணைத்தது கனடா நாட்டைச் சார்ந்த anti-consumerist பத்திரிகையான adbusters(ஆட்பஸ்டர்ஸ்). இது தேவைக்கதிகமான நுகர்பொருட் கலாச்சாரத்தை நுகர்பொருட் கலாச்சாரத்தின் கருவிகளைக்கொண்ட்டே எதிர்க்கும் ஒரு அமைப்பு. உதாரணமாய் இவர்களின் விளம்பரங்கள் நுகர்பொருட்களின் விளம்பரங்களைப்போலவே அமைந்திருக்கும் ஆனால் அதிநுகர்வுக்கு எதிரான செய்திகளைக் கொண்டிருக்கும்.</p>
<p>ஜூன் 9, 2011ல் ஆட்பஸ்டர்ஸ் பத்திரிகை வால்ஸ்ட்ரீட் முர்றுகைப் போராட்டத்திற்கான முதல் வரைவையும் அழைப்பையும் முன்வைத்தது. அடுத்த சில நாட்களில் அது ஒரு இணைய தளத்தை உருவாக்கியது. இன்னும் ஒருசில தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்துகொண்டன. ஆரம்பத்தில் மிகவும் தயக்கத்துடனும் சந்தேகங்களுடனும் துவங்கிய ஆக்குபை இயக்கம். தற்போது இணையம் வழியாக மட்டும் பல லட்சம் ஆதரவாளர்களைத் திரட்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் ஆக்குபை போராட்ட தலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவகல்கள் உள்ளன.</p>
<p><img class="alignright" title="காவல்" src="http://a.abcnews.go.com/images/Business/ap_Occupy_Wall_Street_March_jt_110925_wblog.jpg" alt="" width="342" height="146" /></p>
<p>ஆக்குபை வால்ஸ்ட்ரீட் இயக்கத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைக்காக போராடி வருகிறார்கள் எனலாம். அவை பொதுவாக தத்தம் பின்னணிகளிலிருந்தும் அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் அவரவருக்குக் கிடைத்த மோசமான அனுபவங்களிலிருந்தும் உருவெடுக்கின்றன. உதாரணமாக சிலர் தங்கள் வேலைகள் பறிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து களத்திலிறங்கியுள்ளனர், சிலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர், இன்னும் சிலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளனர், அரசியல் நோக்கங்களுடையவர்கள் களத்திலுள்ளனர், பொதுவுடமைக் கோரிக்கைகளுடையவர்களுள்ளனர். உலகளாவிய ஆக்குப்பை இயக்கத்தின் முக்கிய கோரிக்கை &#8216;அரசின் செயல்பாடுகளில் கார்ப்பரேட்டுகளின் ஈடுபாட்டை குறைப்பது அல்லது முற்றிலும் நீக்குவது&#8217; என்பதேயாகும்.</p>
<p>அமெரிக்க அரசியலில் கார்ப்பரேட்டுகளின் அதீத ஈடுபாடு நெடுநாட்களாக விவாதிக்கப்பட்டுவரும் ஒரு பிரச்சனை. தேர்தல் நிதி வழங்குதல் மூலமும், லாபியிங் மூலமும் அமெரிக்க கார்ப்பரேட்டுகள் கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கு பணம் தருகின்றன என்பது மிக வெளிப்படையான இரகசியமாகும். வங்கிகள், காப்பீடு உட்பட்ட பொருளாதாரச் சந்தையில் இயங்கும் கார்ப்பரேட்டுகள் மட்டுமே கடந்த பத்து ஆண்டுகளில் 5பில்லியன் டாலர்கள் அமெரிக்க அரசியலில் தெளித்துவிட்டிருக்கிறன. (இன்றைய மதிப்பில் இந்திய ரூபாய் 25,000 கோடி). இந்த கார்ப்பரேட், அரசியல் கள்ள உறவு ஒவ்வொரு தேர்தலின்போதும் விவாதிக்கப்படுகின்றது. கடந்த 2008 அதிபர் தேர்தலின்போது ஒபாமா அமெரிக்க அரசியலில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை குறைக்க சட்டங்களை இயற்றப்போவதாக அறிவித்தார். அவரது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானதான ஒன்றாக இது கருதப்பட்டது. ஆனால் ஒரு ஆட்சி காலத்திலேயே மாற்றியமைக்க முடியாத மிக ஆழமாக வேரூன்றிய நச்சு மரமாக இந்த கார்ப்பரேட் ஆதிக்கம் உருமாறியிருக்கிறது என்கிறார்கள் ஆக்குபை போராளிகள்.</p>
<p>ஒபாமாவின் அரசும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான பல முடிவுகளையும் தொடர்ந்து எடுத்தது. குறிப்பாக பொருளாதார வீழ்ச்சியின்போது &#8216;பெயில் அவுட்&#8217; எனப்படும் கார்ப்பரேட் உதவித் தொகைகள் வழங்கப்பட்டபோது அமெரிக்க பொதுமக்கள் மத்தியில் பெரிய அதிருப்தி நிலவியது. பின்னர் அந்த பெயில் அவுட் பணம் கார்ப்பரேட் கொண்டாட்டங்களுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளின் பெருத்த போனஸ்களுக்கும், சம்பள உயர்வுக்கும் பயன்படுத்தப்பட்டபோது பொது மக்கள் இன்னும் கோபமடைந்தனர். பல ஆக்குபை போராளிகளின் முக்கிய எரிச்சல் &#8216;பெயில் அவுட்&#8217; ஆகும்.</p>
<p>2001, 2003ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் புஷ் வழங்கிய வரி சலுகைகள் பெரும்பாலும் பணக்கார அமெரிக்கர்களுக்கு சாதகமாக அமைந்தன. இதை புஷ் வரி குறைப்பு (&#8230;) என்றே அழைக்கின்றனர். அடுத்து வந்த ஒபாமா அரசு இந்த குறைந்த வரி விகிதத்தை தொடர்ந்து செயலாக்கியது. இதன்மூல பல பெரும்பணக்காரர்களும் குறைந்த வரியை செலுத்தி வந்தனர். பல கார்ப்பரேட்டுகளும் எந்த வரியுமே செலுத்தாமல் பெயில் அவுட் மூலமும் வரி திரும்பப்பெறுவதன் மூலமும் பல மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசிடமிருந்து பெற்றுள்ளன.</p>
<p>அமெரிக்காவில் ஒரு சாதாரண பணியாளரின் சம்பளத்துக்கும் ஒரு கார்ப்பரேட் தலைமை இயக்குநரின் சம்பளத்துக்குமான விகிதாச்சாரம் 1:475 என்ற நிலையில் இருக்கிறது. பிற வளர்ந்த நாடுகளில் இது அதிகபட்சம் 1:50 என்ற விகிதத்திலேயே இருக்கிறது. மேலும் பல அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரங்களும் ஆக்குபை இயக்கத்தை நியாயப்படுத்துகின்றன. ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமைக்கோட்டிற்கும் கீழே வசிக்கிறார். இது நான்கு கோடிபேருக்கும் மேல். ஆறுபேரில் ஒருவருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 14.5% வீடுகள் அடுத்த வேளை சாப்பாடு குறித்த நிச்சயமின்றி வாழ்கின்றனர்.</p>
<p><img class="alignleft" title="bull" src="http://blogs-images.forbes.com/jamesmarshallcrotty/files/2011/10/occupy-wallstreetposter.jpg" alt="" width="310" height="456" /></p>
<p>அமெரிக்க அரசின் வரவு செலவு திட்டங்களில் தொடர்ந்து பெரும் இடைவெளி இருந்து வருகிறது. இதனால் சோஷியல் செக்யூரிட்டி, மெடிக்கேர், மெடிக்கெய்ட் போன்ற மக்கள் நலப் பணிகளுக்கான செலவுகள் குறைக்கப்பட்டுவருகின்றன. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு பெயில் அவுட் உதவித் தொகைகளுக்கும் பணக்காரர்களுக்கு வரிவிகிதக் குறைப்பும் தொடர்ந்து அமலில் உள்ளன. கார்ப்பரேட்டுகள் தனது பங்குதாரரின் இலாபங்களை பெருக்குவது எனும் ஒரே கொள்கையுடன் இயங்குகின்றன. இலாபத்தை ஈட்ட எல்லா வழிகளையும் அவை கயாளுகின்றன. பல கார்ப்பரேட்டுகளும் பொய்யான தகவல்களின் மூலம் தொடர்ந்து மகளையும் அரசையும் ஏமாற்றி வந்திருக்கின்றன. கார்ப்பரேட் உதவித் தொகைகள் வேலை வாய்ப்பை பெருக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எனும் நம்பிக்கையில் வழங்கப்பட்டன. ஆனால் கார்ப்பரேட்டுகளோ வேலைவாய்ப்பை தொடர்ந்து குறைத்து வந்திருக்கின்றன. 1948 துவங்கி 2010 வரை வேலையில்லாதவர்களின் சதவிகிதம் சராசரி 5.7% என்றிருந்தது. 2008 ஜனவரியில் இது 5%க்கருகிலிருந்தது. தற்போது 9%க்கும் மேல் இருக்கிறது. தற்போது இது ஒரு பெரும் பிரச்சனையாகியுள்ளது.</p>
<p>பல படித்த பட்டதாரிகளும் தகுதி குறைந்த வேலைகளைச் செய்தோ அல்லது வேலையே இல்லாமலோ வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் உயர்கல்விகற்கும் பலரும் வங்கிகளில் கல்விக் கடன் வாங்கியே படிக்கவேண்டியுள்ளது. இப்படி பெறப்படும் கல்விக்கடன்களின் சராசரி $230,000 ஆகும். அமெரிக்காவின் சராசரி வருடாந்திர சம்பளம் $30,000 எனும்போது இந்தத் தொகை எத்தனை பெரியது என்பதை புரிந்துகொள்ளலாம். இப்படி கடன் வாங்கி கல்வி கற்றும் வேலை வாய்ப்பின்றி, கடனை திருப்பி செலுத்த வழியின்றி திண்டாடும் இளைய தலைமுறையின் இயக்கமாகவும் ஆக்குபை மாறிவருகிறது. இவர்களில் பலர் இணையம் மூலம் தங்கள் சொந்தக் கதைகளை பரப்பி ஆக்குபை இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.</p>
<p>இவற்றில் பலவும் பரிதாபமான சோகக் கதைகள். தன் தாய் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதை ஒருவர் பதிந்துள்ளார், வேலை பறி போனதை பலரும் பதிந்துள்ளனர், பார் மற்றும் உணவகங்களிலும் ஸ்ட்ரிப் கிளப்களிலும் வேலைபார்க்கும் பட்டதாரிகளின் பதிவுகளும் உள்ளன, ஒரு சிறுவன் தன் தாய் தன் பிறந்தநாளை கொண்டாடவுமில்லை தனக்கு பரிசும் தரவில்லை என்று பதிந்துள்ளான். இவர்கள் எல்லோருமே தங்களை &#8216;நாங்கள் 99%&#8217; என்று அழைத்துக்கொள்கிறார்கள்.</p>
<p>ஆக்குபை வால் ஸ்ரட்ரீட் இயக்கம் அவ்வப்போது சில குறிப்பிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றது. இவற்றில் முக்கியமானவை சில..</p>
<p>1. பொருளாதார ஏர்றத்தாழ்வை களையவேண்டும்<br />
2. அரசியலில் லஞ்சம் களையப்படவேண்டும்<br />
3. தனிமனித தகவல் தணிக்கைகள் கைவிடப்படவேண்டும்<br />
4. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும்.</p>
<p>5. ஏழ்மை ஒழிக்கப்படவேண்டும்<br />
6. மரண தண்டனையை தடை செய்ய வேண்டும்<br />
7. போர்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்<br />
8. அமெரிக்கா பிற நாடுகளில் அமைத்திருக்கும் இராணுவத் தளங்கள் மூடப்படவேண்டும்.</p>
<p>9. மருத்துவத் துறையில் அதிக இலாபம் ஈட்டுவது தடைசெய்யப்படவேண்டும்.</p>
<p>இந்தப் பட்டியலில் ஒன்றுகூட ஒரு திட்டவட்ட வரையறையுடையதல்ல என்பதை நம்மால் உணர முடிகிறது. ஆக்குபை போராளிகளும் இதை நிச்சயம் உணர்ந்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் துவங்குகையில் எந்தவித கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என்பதுவும், தற்போதும் பலரும் கோரிக்கைகளை முன்வைப்பதை தவிர்க்கிறார்கள் என்பதுவும் அல்லது இதுபோன்ற பொதுவான கோரிக்கைகளே முன்வைக்கப்படுகின்றன என்பதுவும் இந்தக் கிளர்ச்சியை புரிந்து கொள்வதில் பல சிக்கல்களை உருவாக்குகின்றன.பல ஆதரவாளர்களும் இதை எந்த ஒரு கோரிக்கையுமில்லாத ஒரு மக்கள் இயக்கமாகவே பார்க்கின்றனர். ஒரு நம்பிக்கையை முன்வைக்கும் இயக்கமாகவும், அரசின் செயல்பாடுகளில் மக்களின் பங்கை உருவாக்கும், பெரிதாக்கும், மீட்டெடுக்கும் ஒரு இயக்கமாகவும் இது பார்க்கப்படுகின்றது.</p>
<p>ஆக்குபை இயக்கத்தை விமர்சிப்பவர்கள் வழக்கமான கம்யூனிச எதிர்ப்பு முழக்கத்திலிருந்து துவங்குகிறார்கள். அமெரிக்க வலதுசாரிகளும், அவர்களின் ஊடகப் பிரதிநிதிகள் பலரும் ஆக்குபை வால் ஸ்ட்ரீட் இயக்கத்தை ஒரு மார்க்சிஸ்ட் இயக்கமாக வர்ணித்துள்ளனர். அமெரிக்க அரசியல் சமூக கலைச்சொல்லகராதியில் கம்யூனிசம் எப்போதுமே கெட்டவார்த்தையாகவே குறிக்கப்படுகிறது. இவ்வியக்கம் முதலாளித்துவ எதிர்ப்பியக்கம் என்பதால் இது கம்யூனிச ஆதரவு இயக்கமாக வர்ணிக்கப் படுகிறது. அடுத்தது இவ்வியக்கம் உழைப்பை விரும்பாத சோம்பேறிகள் சிலரின் இயக்கம் என்றும் விமர்சிக்கப்படுகிறது. அமெரிக்க வலதுசாரிகளின் பார்வையில் ஏழைகள் சோம்பேறிகள். பணக்காரர்கள் தங்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுபவர்கள். ஆனால் நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் பால் க்ருக்மேன் அமெரிக்கா ஒரு சமநிலை கொண்ட முதலாளித்துவ பொருளாதாரமாக இருந்திருந்தால் உழைக்கும் அனைவருக்கும் தத்தம் பங்களிப்பிற்கேற்ற கூலி கிடைத்திருக்கும், மாறாக பணக்காரர்கள் மட்டும் அதிகபட்ச ஊதிய உயர்வும், வளர்ச்சியும் அடைந்துவரும் நிலை சமநிலையின்மையையே காட்டுகிறது என்கிறார். கடந்த ஆண்டுகளில், முதல் 1% பணக்காரர்களின் வருமானம் 250%க்கும் மேல் உயர்ந்துள்ளது ஆனால் கடைநிலையில் உள்ளவர்களின் வருமானம் ஆண்டுக்கு $900 குறைந்துள்ளது என்கிறது ஒரு புள்ளிவிபரம்.</p>
<p>ஆக்குபை இயக்கத்தின் வியத்தகு அம்சங்களில் ஒன்று அதன் தலைமையற்றத் தன்மை. இது முற்றிலும் தன்னார்வமுடைய மக்களால் நடத்தப்படுகிற இயக்கம். இடதுசாரித்தன்மை இந்தப் போராட்டங்களில் தென்பட்டாலும் இவற்றில் பங்குபெறும் பலரும் கட்சியோ அல்லது சித்தாந்த சார்புநிலைகளோ அல்லாத சாமானியர்கள். இயக்கத் தலைவர்களென்று எவருமில்லை. ஒருங்கிணைப்பாளர்கள் என சிலர் தாமாகவே பொறுப்பேற்றுள்ளனர். எவரையும் தங்கள் பிரதிநிதியாகவோ தங்கள் சார்பு பேச்சாளர்களாகவோ ஆக்குப்பை போராளிகள் அறிவிக்கவில்லை. நிதியும் மற்ற உதவிகளும் அன்பளிப்புகளின் மூலமே பெறப்படுகிறது. நகைமுரணாக இவ்வியக்கத்துக்கு சில பணக்காரர்களும் கார்ப்பரேட்டுகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p>
<p>அமெரிக்காவில் தற்போது குளிர்காலமாகும். பனிப்பொழிவும் உறைநிலைக்குக் கீழான தட்பவெப்பமும் அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களிலும் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. இரவில் வெளியில் சற்று நேரமே நடமாடமுடியும் எனும் நிலை இருந்தும் ஆக்குப்பை போராளிகள் தங்கள் தெருவோரக் கூடாரங்களை, பூங்காக் கூட்டங்களை கலைப்பதாயில்லை. பல இடங்களிலும் போராட்டம் இன்னும் தீவிரமடைந்து வருகின்றது. குளிர்காலத்தை கடத்த பல புது யுக்திகளை ஆலோசித்துவருகிறது ஆக்குபை இயக்கம். கூடாரங்கள் வைக்கோல் கட்டுகளால் பலப்படுத்தப்படுகின்றன. குளிர்கால ஆடைகளை அன்பளிக்குமாறு தங்கள் ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இருந்தாலும் அமெரிக்காவின் தசையை உறயச் செய்யும் குளிர்காலம் ஆக்குபை இயக்கங்களுக்கு பெரும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.</p>
<p>தலைமை என்று எதுவுமில்லாத, கோரிக்கைகளும் இலக்குகளுமில்லாத, தத்துவார்த்த நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் ஆக்குபை இயக்கம் எங்கு சென்று முடிவடையும் என்பதை யூகிப்பது கடினம். ஆக்குபை ஏற்கனவே அமெரிக்க அரசியலில் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளது கண்கூடு. வரும் அதிபர் தேர்தலில் ஆக்குப்பையின் சித்தாந்தங்கள் வாக்குறுதிகளாக மாற்றப்படும். அரசு தன் பங்குக்கு ஒன்றிரண்டு கமிஷன்களை அமைக்கும். ஏற்கனவே &#8216;சூப்பர் கமிட்டி&#8217; என்று ஒன்று அமைக்கப்பட்டு அது எந்த முடிவையும் எட்ட முடியாமல் தோல்வியுற்றுள்ளது. அமெரிக்க அரசியலில் கார்ப்பரேட் ஆதிக்கம் குறையுமா என்பது எளிதில் பதில் சொல்ல முடியாத கேள்வி. நாம் இன்று காணும் அமெரிக்கா கார்ப்பரேட் அமெரிக்கா. படையெடுப்புக்கள், போர்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளுமே கார்ப்பரேட் இலாபங்களுக்காகவே செய்யப்படுகின்றன என்பதை பல தரவுகள் மூலம் அமெரிக்க ஊடகங்களும் உலக ஊடகங்களும் நிறுவியுள்ளன‌.</p>
<p>உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசாட்சியில் மக்கள் தங்களுக்கான பங்கை கேட்டு போராடி வருகின்றனர். ஆக்குபை இயக்கங்கள் இதில் மிக முக்கியமானவை. இந்தியாவில் லோக் பால் சட்டத்தை இயற்ற வலியுறுத்தும் போராட்டமும் அரசியல் அதிகாரத்தில் மக்களுக்கு கணிசமான பகுதியை பெற்றுத் தருவதற்கான முயற்சியே. ஆக்குபை இயக்கம் அமெரிக்க ஜனநாயகத்தின் ஆன்மாவை நோக்கிய ஒரு பிரார்த்தனையே. கார்ப்பரேட் அமெரிக்கா மக்களின் அமெரிக்காவாக மாறுவதென்பது பிரார்த்தனைகளால் மட்டுமே நிகழ்த்தப்படக்கூடிய அற்புதம் இல்லையா?</p>
<p>- ஆழம் பிப் 2012ல் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=621&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&#038;p=621</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>சில கிறுக்கல்களும் கிறுக்குத்தனங்களும்.</title>
		<link>http://cyrilalex.com/?p=616</link>
		<comments>http://cyrilalex.com/?p=616#comments</comments>
		<pubDate>Sat, 10 Dec 2011 03:11:57 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ஆளுமை]]></category>
		<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[அலசல்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=616</guid>
		<description><![CDATA[&#8220;சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக!&#8221; என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா&#8230;&#8230;” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன? விழியோரக் கண்ணீருடனா? கனத்தமனத்துடனா? அலுவல் பரபரப்புகளின் மத்தியில் கவனமின்றியா? நண்பருடன் தொலைபேசிக்கொண்டா? எதையுமே நம்மால் யூகிக்க முடிவதில்லை. இணையத்துக்கு இரத்தமுமில்லை சதையுமில்லை. உலகம் முழுவதும் அது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக!&#8221; என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா&#8230;&#8230;” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன? விழியோரக் கண்ணீருடனா? கனத்தமனத்துடனா? அலுவல் பரபரப்புகளின் மத்தியில் கவனமின்றியா? நண்பருடன் தொலைபேசிக்கொண்டா? எதையுமே நம்மால் யூகிக்க முடிவதில்லை. இணையத்துக்கு இரத்தமுமில்லை சதையுமில்லை. உலகம் முழுவதும் அது ஒரு மாபெரும் வெள்ளைத்தாள் போல விரிந்து கிடக்கிறது. மக்கள் அதன் மீது ஏதேதோ எழுதிவைத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள். கணிணியின் திரை எனும் ஒரு சின்ன சாளரம் வழியே இழுத்து இழுத்து அந்த மாபெரும் வெள்ளைத் தாளின் பக்கங்களை <a href="http://cyrilalex.com/wp-content/uploads/2011/12/SCAN0025.jpg"><img class="alignleft size-medium wp-image-617" title="SCAN0025" src="http://cyrilalex.com/wp-content/uploads/2011/12/SCAN0025-214x300.jpg" alt="" width="214" height="300" /></a>பார்த்துக்கொள்ள முடிகிறது. ஒருபோதும் அந்தத் தாளில் கிறுக்கியவர்களை, அவர்களின் மனநிலையை, அவர்களின் நம்பிக்கைகளின், ஈடுபாட்டின் தீவிரத்தை, ஆளுமைகளை நம்மால் துல்லியமாக எடைபோட முடிவதில்லை. ஆக இந்தக் கட்டுரையில் நேரடி ஆளுமைகளை அல்ல இணைய பதிவுகள், குறிப்புகள், பகிர்வுகள் வழியே தோன்றும் ஆளுமைகளையே குறிப்பிட முடிகிறது.</p>
<p>செய்திகளையும் பத்திரிகைக் கட்டுரைகளையும் தவிர்த்துப் பார்த்தால் இணையத்தில் ரஜினிகாந்த் குறித்து எழுதும் மூன்று முக்கிய ஆளுமைகளைக் காணமுடிகிறது. முதலில் ரஜினி ரசிகர்கள். மிகத் தீவிர ரசிகர்கள் முதல் சாதாரண, பகுதி நேர ரசிகர்கள் வரை இவர்களில் பல விதங்கள். இரண்டாவது ரஜினிகாந்த் எனும் சமூக நிகழ்வை அவதானித்து மற்ற சமூக நிகழ்வுகளைப் போலவே இதைக்குறித்தும் கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருப்பவர்கள். ஜப்பான் அணு உலை வெடிப்பதும், ரஜினி திரைப்படம் வெளியிடப்பதுவதும் ஒரே தீவிரத்துடனோ அல்லது தீவிரமின்மையுடனோ இவர்களால் பதிவு செய்யப்படுகிறது. அடுத்து ரஜினிகாந்தின் ரசிகர்களை, ரஜினிகாந்தை விமர்சனம் செய்யும் நபர்கள். இவர்களிலும் பல வகைகள் உண்டு. சிலர் பிற நடிகர்களின் ரசிகர்கள். சிலர் அரசியல் சாய்வுடையவர்கள். சிலர் சமூக சீர்திருத்தப் பார்வையோ பாவனையோ கொண்டவர்கள். எது எப்படியானாலும் ரஜினிகாந்த் குறித்த எண்ணற்ற பதிவுகளை இணையத்தில் காணமுடிகிறது.</p>
<p>ரஜினி ரசிகர்கள் இணையத்தில் குழுக்களாகவும் தனித்தும் என்னவெல்லாம் செய்துவிட முடியுமோ அதையெல்லாம் செய்து வைத்திருக்கிறார்கள். ரஜினி பெயரிலும் அவரது இரசிகர்களின் பெயரிலும் பிரபல வலைத்தளங்கள் இயங்கிவருகின்றன. இவை ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு துவங்கி ரஜினி குறித்த அண்மைச்செய்திகள்வரை பதித்து வைத்திருக்கின்றன. ரஜினிகாந்த் நடித்த படங்களின் பட்டியல்கள், பாடல்கள், புகைப்படத் தொகுப்புகள், பஞ்ச் டயலாக்குகளின் தொகுப்புக்கள், படத் தொகுப்புக்கள், செய்தித் தொகுப்புக்கள், ரஜினிகாந்த் குறித்து பிற பிரபலங்களின் ’பொன்மொழிகள்’ என பல பக்கங்களில் பல பரிமாணங்களில் இந்தத் தளங்கள் ரஜினிகாந்தின் புகழ்பாடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய தளங்களை செயல்படுத்த ஒப்பீட்டளவில் அதிக நேரமும் பணமும் தேவைப்படுவதால் பொதுவாக இவை குழுக்களால் செயல்படுத்தப்படுகின்றன.</p>
<p>உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைத்துக்கொள்வதே இத்தகைய ரஜினி ரசிகர்களின் இணைய தளங்களின் முக்கிய நோக்கம். rajinifans.com, envazi.com onlysuperstar.com போன்றவை இத்தகைய தளங்கள். rajinifans.com 2003 முதல் இயங்கிக்கொண்டிருக்கிறது. நானூறு ரசிகர்களுக்கும் மேல் இதில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் அதிகம் பேர் வெளிநாடுகளில் இருப்பவர்கள். தமிழகத்தில் ஊர் ஊராக இயங்கும் ரசிகர் மன்றங்களுக்கு மாற்றாக இணையத்தில் குழுவாக இவர்கள் இயங்கிவருகின்றனர். ரஜினியின் ஜப்பானிய ரசிகர்களோடும் இவர்கள் தொடர்பிலுள்ளனர்.</p>
<p>வெறும் ரஜினி திரைப்படங்களின் ரசிகர்களாய் மட்டுமில்லாமல் பல சமூக சேவைகளையும் இவர்களால் செய்ய முடிந்திருக்கிறது. தமிழகத்தை ஆழிப்பேரலைகள் தாக்கியபின்பு அலையென எழுந்த உதவிக்கரங்களில் இணைய ரஜினி ரசிகர்களின் கரங்களும் ஒன்று. ஒரு இணையதளம் மட்டும் இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடை பெற்று நலப்பணிகளை செய்துள்ளது. இதில் கணிசமான தொகை ஜப்பானிய ரசிகர்களிடமிருந்து பெறப்பட்டது. நன்கொடையோடு நின்றுவிடாமல் நேரடி சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு பல உதவிகளை செய்துள்ளார்கள். ரஜினிகாந்தின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் இவர்கள் இரத்ததான முகாம்களை நடத்தி இரத்ததானம் செய்கிறார்கள்.</p>
<p>இத்தகைய இரசிகர்குழுத்தளங்களுக்கிடையே சிறு சித்தாந்த வேறுபாடுகளும் தென்படுகின்றன. சில தளங்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கின்றன, சில தளங்கள் அவரை திரைநாயகனாக மட்டுமே காண விரும்புகின்றன, சில சமூக சேவைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன மற்றவை சினிமாவை மட்டுமே கண்டுகொள்கின்றன.</p>
<p>குழுக்களாக இல்லாமல் தனிநபர்கள் ரசிகர்கள் இலவச வலைப்பதிவு சேவைகளில் இயங்குகிறார்கள். ரஜினி ரசிகர்கள் ரஜினியை குறித்து மட்டுமே எழுதிவரும் வலைப்பதிவுகள் பத்துக்கும் குறையாமல் உள்ளன. இதே எண்ணிக்கையில் பல்வேறு பேசு பொருள்களுக்கிடையில் ரஜினி குறித்த பதிவுகளையும் முக்கியமாக பதிக்கும், ரசினி ரசிகர் என்பதை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு இயங்கும் பதிவுகள் உள்ளன. இணையம் குறித்து அதிகம் தெரிந்துவைத்திருக்காதவர்களுக்கு இவை சிறிய எண்ணிக்கையாகத் தெரியலாம். வலைப்பதிவுகள் என்பவை ஒரு தனிநபரே நடத்தும் பத்திரிகையைப் போன்றது. தன் ஓய்வு நேரத்தில் கணிசமான பகுதியை செலவிட்டாலொழிய ஒரு வெற்றிகரமான வலைப்பதிவை நடத்த முடியாது என்கிறவகையில் இந்த எண்ணிக்கைகள் கணிசமானவை.</p>
<p>வலைப்பதிவுகளைத் தவிர்த்தால் ரசிகர்கள் கூடிப் பேசிக்கொள்ள விவாதக் குழுமங்கள் (Discussion groups/forums) உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு வலைத்தளம் அமைக்கப்படுமுன் ரசிகர்கள் குழுமங்களாகவே இணைகிறார்கள். இக்குழுமங்களில் ரஜினியின் திரைப்படங்கள் குறித்த கருத்துக்களும், செய்திப்பதிவுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.</p>
<p>கடந்த சில வருடங்களில் இணையத்தில் பிரபலமாகியிருக்கும் Social Networking எனப்படும் சமூகத் தொடர்புத் தளங்கள் வழியாகவும் ரஜினி ரசிகர்கள் ஒருங்கிணைந்துள்ளார்கள். இங்கேயும் தனியாகவும் குழுக்களாகவும் ரசிகர்கள் இணைந்துள்ளார்கள். facebook, orkut போன்ற சேவைகள் இதற்கு உதாரணம். மிக இயல்பாகவும் அனிச்சையாகவும் இங்கே ரசிகர்கள் பேசிக்கொள்கிரார்கள்.</p>
<p>ரஜினிகாந்த் உடல்நிலை தேறிவர எழுப்பப்பட்ட ஆயிரக் கணக்கான வேண்டுதல்களை ஃபேஸ்புக்கில் காண முடிகிறது. &#8216;என் குடும்பத்துக்காக வேண்டிக்கொள்ளும்போதெல்லாம் உங்களுக்காகவும் வேண்டிக்கொள்வேன். உங்கள் பெயரை என் உடம்பில் பச்சை குத்தி வைத்துள்ளேன். நீங்கள் இதை வாசிக்கப் போவதில்லை என்பது தெரியும் இருந்தாலும் உங்களை எனக்கு மிகவும்ம்ம்ம்ம் பிடிக்கும்&#8217; என்று ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. &#8216;கடவுளே ரஜினி&#8217; என்று ரத்தினச் சுருக்கமாக ஒருவர் பதிவு செய்துள்ளார். &#8216;தலைவா நீ சீக்கிரம் வா&#8217; என அழைப்பு விடுக்கிறார் இன்னொருவர். ரஜினிகாந்தின் அண்மைய புகைப்படம் ஒன்றின்கீழ் ஒருவர் மிக உருக்கமாக &#8220;தலைவரின் இந்த போட்டோ பார்த்தவுடன் என் கண்கள் கலங்கிவிட்டது நீண்ட நாட்கள் கழித்து என் தாய் ,தந்தையை ,பார்ப்பது போல் உள்ளது&#8221; என எழுதிவைத்துள்ளார். பலரும் எதுவும் சொல்லத் தெரியாதவர்களைப்போலவோ, சொல்ல முடியாதவர்களைப்போலவோ வெறுமனே &#8216;தலைவா&#8230;&#8217; என்றொரு பெரும் விளிப்புடன் நின்றுவிடுகின்றனர். இன்னொரு பிரபல சமூகத் தொடர்புத் தளமான டுவிட்டரில் ரஜினிகாந்த் குறித்து தினமும் ஒரு பதிவேனும் செய்யப்படுகிறது. ரஜினி குறித்த முக்கிய செய்திகள் வெளிவரும்போது தமிழ் இணையத்தில் ரஜினி குறித்த உற்சாகம் இன்னும் பலமடங்காகிவிடுகிறது.</p>
<p>தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் எல்லா திரைப்படங்களுக்கும் இணையத்தில் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. பல பக்கங்கள் வரை செல்லும் கட்டுரைகள் முதல் 140 எழுத்துக்களுக்குள் அடக்கப்படும் டுவிட்டர் செய்திகள்வரை இவை பல்வேறு பரிமாணங்களுடையவை. ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் வெளிவரும்போது யார் முதலில் திரை விமர்சனம் எழுதுவது என்பதில் தீவிர போட்டி நிலவுகிறது. சிவாஜி, எந்திரன் படங்கள் வெளி வந்து இரண்டே நாட்களுக்குள் நூற்றுக்கும் மேல் திரை விமர்சனப் பதிவுகள் வெளிவந்தன. இவற்றை எழுதியவர்களில் 90%க்கும் மேல் ரஜினியின் தீவிர ரசிகர்களல்லாத வலைஞர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.</p>
<p>புகழுக்கு இரு எல்லைகள். ஒரு எல்லையில் வழிபாடுகளும் உயர்வு நவிர்ச்சிகளும் விதந்தோம்பல்களும் என்றால் இன்னொரு எல்லையில் கிண்டல்களும் கேலிகளும் வசைகளும் உள்ளன. ஹாலிவுட்டின் அதிரடி சாகச நாயகனான சக் நோரிஸ் குறித்த பகடிகள் இணையத்தில் பிரபலம். இந்தியர்கள் அவற்றை சற்று குறைத்தும் நீட்டியும் ரஜினிகாந்த் ஜோக்குகளாக மாற்றியுள்ளனர். ரஜினிகாந்த் ஜோக்குகளுக்கென்றே சில வலைத்தளங்களும் ஃபேஸ்புக் பக்கங்களும் செயல்படுகின்றன. இவை பொதுவாக ரஜினிகாந்த் திரைப்படங்களில் வரும் அதீத சாகசத் தன்மையை பகடி செய்பவை &#8220;நேப்பாளில் நிலநடுக்கம் ஏன் வந்தது தெரியுமா? ரஜினிகாந்த் மொபைலை வைப்ரேட் மோடில் வைத்ததனால்.&#8221; &#8220;ரஜினியால் ஒரு மீனை மூழ்கடிக்க முடியும்&#8221; &#8220;ரஜினிகாந்தால் ஒரு வெங்காயத்தை அழவைக்க முடியும்&#8221; &#8220;கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடிச்சப்போ ரஜினிகாந்திடமிருந்து மூணு மிஸ்டுகால் வந்திருந்துச்சு&#8221;. போன்றவை எடுத்துக்காட்டுகள். ஃபேஸ்புக்கில் இதை செய்துகொண்டிருப்பவர்களில் பலரும் வட இந்தியர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவை வெறுப்பின் அடிப்படையில் எழுதப்படுபவையாக அல்லாமல் ஒரு புதிய வகை பகடியாக, தரம் தாழாமல் எழுதப்படுபவை..</p>
<p>இந்த உள்நோக்கமற்ற பகடிகளைத் தாண்டி ரஜினி மீது தொடர்ந்து வசைபாடும் நபர்களையும் இணையத்தில் காணமுடிகிறது. இவற்றில் பல கீழத்தரமான வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கு பதிலடி தரும் தீவிர ரசிகர்களும் இதே தரத்தில் பதிலளிக்கிறார்கள். இணையத்தில் கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளிலும் இதுபோன்ற தரம் தாழ்ந்த விவாதங்கள் நடைபெறுகின்றன. தன் சுய அடையாளங்களை மறைத்து ஒருவரால் இணையத்தில் செயல்படமுடியுமாகையால் இது உலகளாவிய நிகழ்வாகவே அறியப்படுகிறது.</p>
<p>இணையத்தில் அதிகமும் பயன்படுத்தப்படுகிற கூகிள் தேடுபொறி வசதி இணையத்தில் பரவலாக யார் எதைத் தேடுகிறார்கள் என்பதை கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் குறித்த தேடல்களை அலசும்போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. இணையத்தில் இந்தியாவிலிருந்தே அதிகம் பேர் ரஜினி ரஜினிகாந்த் அல்லது சூப்பர்ஸ்டார் ஆகிய வார்த்தைகளைத் தேடுபவர்களாக இருப்பார்கள் என்பதில் ஆச்சர்யமிலை. 35% தேடல்கள் இந்தியாவிலிருந்து வருகின்றன. அடுத்து வருவது இலங்கை(26%), அடுத்தது ஐக்கிய அரபு நாடுகள்(12%), சிங்கப்பூர் நான்காமிடத்திலுள்ளது(10%), மலேஷியா ஐந்தாமிடத்தில் (9.9%), அடுத்தது சவுதி அரேபியா(2%), ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, போலாந்து, ஃபிரான்ஸ் நாடுகள் 1%க்கும் குறைவான அளவு தேடல்களுடன் அடுத்தடுத்து வரிசைப்படுத்தப்படுகின்றன. (see Table 1). அஜித் விஜய் தொடர்பானத் தேடல்களில் இலங்கை முதலிடம் வகிக்கிறது என்பது உப தகவல்.</p>
<p>Table 1: Top regions for rajinikanth+rajini+ரஜினி+ரஜினிகாந்த்+சூப்பர் ஸ்டார்<br />
Country/region % Searches<br />
India 35.33568905<br />
Sri Lanka 26.14840989<br />
United Arab Emirates 12.72084806<br />
Singapore 10.60070671<br />
Malaysia 9.893992933<br />
Saudi Arabia 1.766784452<br />
Australia 0.706713781<br />
Canada 0.706713781<br />
United Kingdom 0.706713781<br />
United States 0.706713781<br />
Poland 0.35335689<br />
France 0.35335689<br />
Source: Google insight</p>
<p>ரஜினிகாந்த் இறந்துவிட்டதாக இணையத்தில் வதந்தி பரவிய மே 2011ன் இரண்டாம் மூன்றாம் வாரங்களில் ரஜினி குறித்த தேடல்கள் உச்சத்தை அடைந்துள்ளது. பிற முன்னணி தமிழ் நடிகர்கள் குறித்த தேடல்களுடன் ஒப்பிடுகையிலும் இதுவே அதிகமான எண்ணிக்கை என்கிறது கூகிள். இத்தகைய முக்கிய தினங்களை தவிர்த்து தினசரி தேடல்களில் பிற நடிகர்களோடு ஒப்பிடும்படியே ரஜினி குறித்த தேடல்கள் அமைந்துள்ளன. பல நேரங்களில் இளைய தலைமுறை நடிகர்கள் குறித்த தேடல்களின் எண்ணிக்கை (அதிகம் அஜித்) மேலோங்கியுள்ளது.</p>
<p>ரஜினி குறித்து அதிகம் தேடும் நகரங்களில் தஞ்சாவூர்(22%) முதன்மையானது என்கிறது கூகிள். அடுத்து ஈரோடு(19%), சென்னை(17.3%) மூன்றாமிடத்திலுள்ளது, நான்காமிடத்தில் கோயம்புத்தூர்(17.1%), அடுத்து பெங்களூரு(6.6%) ஆறாமிடத்தில் ஹைதராபாத்(3.5), ஏழில் கொழும்பு(3%), அடுத்து டில்லியும்(2%) மும்பையும்(2%),ஒன்பதாமிடத்தில் துபாய்(1.5%), பூனே(1.5%) , கோலா லம்பூர்(1.5%) ஆகிய நகரங்களுள்ளன<br />
பத்தாமிடத்தில் சிங்கப்பூர்(1.3%) இடம்பெறுகிறது. (see table 2)</p>
<p>Table 2: Top cities for rajinikanth+rajini+ரஜினி+ரஜினிகாந்த்+சூப்பர் ஸ்டார்<br />
Town/City/Suburb %<br />
Thanjavur (India) 22.22222222<br />
Erode (India) 19.33333333<br />
Chennai (India) 17.33333333<br />
Coimbatore (India) 17.11111111<br />
Bangalore (India) 6.666666667<br />
Hyderabad (India) 3.555555556<br />
Colombo (Sri Lanka) 3.111111111<br />
New Delhi (India) 2.222222222<br />
Mumbai (India) 2.222222222<br />
Dubai (United Arab Emirates) 1.555555556<br />
Pune (India) 1.555555556<br />
Kuala Lumpur (Malaysia) 1.555555556<br />
Singapore (Singapore) 1.333333333<br />
Warsaw (Poland) 0.222222222</p>
<p>Source: Google insight</p>
<p>அதிகமானபேர் தேடுவது ரஜினி பாடல்களையே என்கிறது கூகிள். அதன் பிறகு வெறுமனே &#8216;ரஜினிகாந்த்&#8217; எனும் தேடல் பிரபலமானது. அண்மையில் &#8216;ரணா&#8217; குறித்த தேடல்கள் மிக அதிக அளவில் நடைபெறுவதாககூகிள் தெரிவிக்கிறது.<br />
1954ல் மாஸ்லோவ் எனும் உளவியல் வல்லுநர் மனிதனின் தேவைகளின் அடுக்கு ஒன்றை வெளியிட்டார். இன்றளவும் உலகப் புகழ்பெற்ற உளவியல் கருதுகோள்களில் ஒன்றாக அது விளங்குகிறது. உளவியலின்படி மனிதனின் தேவைகளை ஒரு பிரமிடாக அடுக்கினார் மாஸ்லோவ். காற்று, நீர், உணவு போன்ற உடல் உயிர்வாழத் தேவையானவை மிக அடிப்படைத் தேவைகள் என்றார், அடுத்ததாக பாதுகாப்புக்கானவற்றிற்கான தேவைகள் அமைந்தன. இவ்விரு அடிப்படை தேவைகளுக்கும் அடுத்ததாக மனிதன் தான் அன்பு செலுத்தப்படுவதற்கும் சமூகத்தில், ஒரு குழுவில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுவதற் குமான தேவைகளை வைக்கிறார் மாஸ்லோவ். தேனீக்களும் எறும்புகளும் சிம்பன்சிகளும் தன் கூட்டை, குழுவைச் சார்ந்தவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்கின் றன, தாவரங்கள் உட்பட்ட பல உயிரினங்களும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் கூட கூடிவாழ்வதில் பலனடைகின்றன. ரசிகர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவதென்பது உலகளாவிய நிகழ்வே. உலகளவில் எல்விஸ் ப்ரெஸ்லிக்கு ஐந்து கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கிறது ஒருகணக்கு, மக்கேல் ஜாக்சனுக்கும், பீட்டில்ஸ் பாடகர்குழுவிற்கும் மிகத் தீவிர ரசிகர்குழுக்கள் உள்ளன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விளையாட்டு அணியினருக்கு பைத்தியக்காரத்தனமான ரசிகர் கூட்டங்கள் செயல்படுகின்றன. இணையத்தில் ஹாரிபாட்டருக்கும், ஆன்ட்ராய்ட் இயங்குதளத்துக்கும், ஆப்பிள் கணிணிகளுக்கும்கூட இரசிகர் தளங்கள் செயல்படுகின்றன. இவை எவையுமே நம் ரஜினி நரசிகர்களின் மனோபாவங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் எந்தவிதத்திலும் வேறுபட்டவையாக இல்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை குணாதிசயங்களையும், நற்குணங்களையும், தீவிரப் போக்குகளையும் இவைகளும் கொண்டுள்ளன. நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்வது நம் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவே இருக்கிறது. அது பலருக்கும் ரஜினி ரசிகன் என்கிறதாய் அமைந்துவிடுகிறது.</p>
<p>இணையத்தில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பார்த்தால் ரஜினிகாந்த் அவரின் ரசிகர்களால் மட்டும் விரும்பப்படுகிற கலைஞர் அல்ல என்பது தெளிவாகிறது. ரஜினி குறித்த செய்திகளில் மக்கள் அதிக விருப்பம் கொண்டிருக்கிறார்கள், அவரது திரைப்படங்களை எதிர்பார்த்திருக்கிறார்கள், அவரை எப்போதும் கவனித்தபடியே இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. உலகெங்கிலும் பரவிக்கிடக்கும் தமிழர்களை இணைக்கும் பல்வேறு புள்ளிகளில் முக்கியமான ஒன்றாய் தமிழ் திரையுலகம் அமைந்துள்ளது. அதில் முதன்மையானவர் ரஜினிகாந்த். இவற்றையெல்லாம் மிக எளிதாக கிறுக்கத்தனம் என்றும் நேர விரையமென்றும் கடந்துபோகிறவர்களும் நம்மிடையே உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்தக் &#8216;கிறுக்கத்தனங்கள்&#8217; ஒரு குறிப்பிட்ட விகிதம் இருந்துகொண்டிருப்பதே ஒரு ஆரொக்கியமான சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும், ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு கிறுக்கத்தனம் இருந்துகொண்டிருப்பதைப்போல.</p>
<p>====</p>
<p>தொகுக்கப்படாத பதிப்பு.</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=616&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&#038;p=616</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>ஓராயிரம் கண்கள் கொண்டு</title>
		<link>http://cyrilalex.com/?p=613</link>
		<comments>http://cyrilalex.com/?p=613#comments</comments>
		<pubDate>Fri, 11 Nov 2011 08:36:42 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[வகைப்படுத்தாதவை]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=613</guid>
		<description><![CDATA[ஆழி சூழ் உலகு படித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. என்னைப் போல வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்தாலும் அது குறித்து என்ன எழுதுவது என்று பின்மண்டையில் ஒரு எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கும். அது அந்த செயல் தரும் அனுபவத்தை வேறுவிதமாக மாற்றிவிடும். ஆழி சூழ் உலகு படிக்கத் துவங்குகையில் எனக்கு அப்படி ஒரு எண்ண ஓட்டம் இருந்தது. கரையைக் கடந்து உள்ளே செல்லச் செல்ல ஆழி முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது. நாவலைப் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஆழி சூழ் உலகு படித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. என்னைப் போல வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்தாலும் அது குறித்து என்ன எழுதுவது என்று பின்மண்டையில் ஒரு எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கும். அது அந்த செயல் தரும் அனுபவத்தை வேறுவிதமாக மாற்றிவிடும். ஆழி சூழ் உலகு படிக்கத் துவங்குகையில் எனக்கு அப்படி ஒரு எண்ண ஓட்டம் இருந்தது. கரையைக் கடந்து உள்ளே செல்லச் செல்ல ஆழி முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது.</p>
<p>நாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ கிராமத்துக் கிழவி. கொஞ்சம் கற்பனை செய்தால் அவளை கண்கள் முன் கொண்டுவந்துவிடலாம். ஓலைக் குடிசையின் கீழ் அமர்ந்து கொண்டு, இடித்து இடித்துக் குழிவிழுந்த ஒரு கல்லில் மழுங்கிப்போன இன்னொரு கல்லை வைத்து, கல்லைப் பல்லாக்கி செக்கச் செவேலென வெற்றிலையை இடித்துக்கொண்டே, கதை கேட்க யாராவது வரமாட்டார்களா என்று காத்துக்கிடப்பவள். ‘எய்யா, எக்கி எங்க போற இங்கன இரி’ என வருவோரையும் போவோரையும் கதை சொல்ல அழைத்துக்கொண்டிருப்பவள். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஊரின் மூலை முடுக்குகளில் நிகழும் மிகவும் அந்தரங்கமான தகவல்களைக் கூடத் தெரிந்து வைத்திருப்பவள். அவளின் கதைகளும் இந்த நாவலில் சரி சமமாக இடம் பெற்றுள்ளன..</p>
<p>ஜோவின் உழைப்பு வியக்கத்தக்கது. இப்படி ஒரு நாவலை மீனவரல்லாத ஒருவரால் உருவாக்கியிருக்க முடியாது. மீனவர்களிடையேயும் இதை செய்து முடிக்கும் திறன் உடையவர்கள் உண்டா என்பது சந்தேகமே. மீன்பிடித் தொழில் குறித்த பல துல்லியமான தகவல்கள் நாவல் முழுவதும் வருகின்றன. இவற்றை சரிபார்க்கும் அளவுக்குக் கூட என் போன்ற படித்த மீனவ இனத்தவர்களுக்கு கடல் அறிவு கிடையாது எனச் சொல்லலாம். யாராலும் செய்து முடிக்க இயலாத ஒரு பணியை செய்து முடித்திருக்கிறார் ஜோ.</p>
<p>ஆழி சூழ் உலகு ஒரு கற்பனை மீனவ கிராமத்தின் கதை. உண்மையில் ஆமந்துறை எனும் அதன் பெயர் மட்டும்தான் கற்பனை. மற்றவை ஜோவின் அறிவிலிருந்தும் டி. குருசாவின் வாயிலிருந்தும் வந்து விழுந்துவிட்ட வரலாறும், விமர்சனமும், ஊர்பேச்சும். நாவலில் ஜோவுக்கும் டி. குருசாவுக்குமான வித்தியாசங்கள் தெளிவாகத் தெரிகின்றன. வரலாற்றை எழுதும்போதோ, அல்லது சமூக நல் நோக்கம் கலந்த கருத்துக்களை எழுதுகையிலோ கதை மொழி வேறாகவும் ஊரில் நிகழும் உணர்ச்சிகரமான விஷயங்களை விவரிக்கையில் கதை சொல்லியின் மொழி முற்றிலும் இயல்பான பேச்சு மொழியாகவே அமைந்துவிடுவதையும் காண முடியும். சில இடங்களில் வம்பு பேச்சு மொழி நடையிலேயே இவை அமைந்துள்ளன.</p>
<p>கதையைப் பொறுத்தவரை காட்சிக் கோர்வைகளாக, நிகழ்வுகளின் தொகுப்பாக நாவல் நகர்ந்து கொண்டிருக்கிறது. நிறுத்தமில்லாத ஓட்டம். எங்கேயும் நின்று எண்ணங்களை சேகரித்துக் கொள்ளவோ அசை போடவோ இடமில்லை. விரல்களுக்குள் அடங்காத எண்ணிக்கையில் கதாபாத்திரங்கள். நாடகத்தன்மை கலந்த மெல்லிய மிகைப்படுத்தல்கள். சுவாரஸ்யம் தோய்ந்துவிடக் கூடாதென்பதற்கான யுக்திகள். ஒரு வேளை மீனவர்களின் வாழ்கையே வெறும் சம்பவக் கோர்வைதானோ என எனக்குத் தோன்றியது. வெறும் எதிர்வினைகளாலானதொரு வாழ்க்கை. ஒரு செயல் இன்னொன்றைத் தூண்ட அது இன்னொன்றை அது வேறொன்றை என நிகழ்வுகளின் இடைவிடா சங்கிலித் தொடர்தானோ மீனவரின் வாழ்க்கை? இருக்கலாம். நிறுத்தி நிதானித்து யோசித்து செயல்படும் ஒரு வாழ்க்கை முறையை நாவல் சொல்லவில்லை. வெறும் அடிப்படை உணர்ச்சிகளால் உந்தப்படும் ஒரு வாழ்க்கையைத்தான் நாவல் சொல்லிச் செல்கிறது. பசி, கோபம், குரோதம், காமம் மட்டுமல்ல தியாகமும் கருணையும் கூட அடிப்படை உணர்ச்சிகள்தான், இல்லையா? கிட்டத்தட்ட ஒரு பழங்குடி அமைப்பை நம் கண் முன் நிறுத்துகிறது ஆழி சூழ் உலகு.</p>
<p>கதை பல இடங்களில் உரையாடல்களின் மூலமே சொல்லப்படுகிறது. இது வாசிப்பை எளிதாக்குகிறது. ஆனால் கதையின் இடத்தை, கதை மாந்தர்களை, சூழலை, நுட்பமாக வர்ணித்து அதன் மேல் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் நிகழ்த்திச் செல்வது சிறந்த இலக்கிய படைப்புகளின் இயல்பு. இந்த நாவல் அதற்கான சமயத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இடைவெளியற்ற ஒரு நாடகம் போல உரையாடல்கள், நிகழ்வுகள் மட்டுமே அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல முக்கிய கதாபாத்திரங்கள் என்ன ஆடை அணிந்திருந்தார்கள் என்றோ, என்ன மாதிரி வீட்டில் தங்கியிருந்தார்கள் என்பதோ விவரிக்கப்படவில்லை. வெறும் கதை மட்டுமே அதிகம் சொல்லப்படுகிறது. இத்தகைய யுக்தியின் ஒரு குறைபாடு என்னவென்றால் நீடித்த நினைவுகளை அவற்றால் உருவாக்க முடிவதில்லை என்பதுதான். பெரும் நாவலோ சிறுகதையோ நம் மனதில் விரிந்து அங்கே நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு இந்த நுண் விவரிப்புகள் தேவைப்படுகின்றன.</p>
<p>சூழல் குறித்து எத்தனை அதிகம் தகவல்கள் தரப்படுகின்றனவோ அத்தனை நுட்பமாக நமது கற்பனை விரிகிறது. பின்பு அங்கே நீர்படிந்த கண்ணாடிக் காட்சிபோல கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக வருகின்றன. அதன்பின் கதாசிரியர் அவர்களையும் விவரிக்கிறபோது காட்சி துல்லியமடைகிறது. பாத்திரங்களின் குரலின் தன்மையைக் கூட சில ஆசிரியர்கள் சித்தரிக்கின்றனர். இவற்றின் வழியாக நாம் உருவாக்கும் மனச் சித்திரங்கள் நீண்ட மனப்பதிவுகளை உருவாக்குகின்றன. நம்மால் கதைச் சூழலின் உள்ளிறங்கி அங்கு நடப்பவற்றிற்கு சாட்சியாக நிற்க முடிகிறது. ஆழி சூழ் உலகு உரையாடல்களை, அவற்றின் சுவாரஸ்யத்தன்மையை பெரிதும் நம்பி இருக்கின்றது. ஆழி சூழ் உலகின் நுண்விவரணைகள் கொண்ட காட்சிகள் சிலவற்றைக் கொண்டே நம்மால் இந்த கருத்தை உறுதி செய்து கொள்ள முடியும். ராமேஸ்வர இரயில் புரண்டு கடலில் விழும் காட்சி, சுறா வேட்டை காட்சிகள், கடலில் மூவர் மிதந்து கொண்டிருக்கும் காட்சிகள் என சிலவற்றை வாசகரால் முழுவதும் கற்பனை செய்ய முடிவதையும் நாவலின் மற்ற பகுதிகள் பலவற்றையும் அப்படி கற்பனை செய்ய முடிவதில்லை என்பதையும் நாம் காணலாம். தமிழ் திரையுலகம் இப்போது அதிகம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கிராமியச் சூழலில், கிராமிய சாயலில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கே இந்த நாவலை என்னால் ஒப்பிட முடிகிறது.</p>
<p>’மரணத்தின் முன் வாழ்க்கையின் பெறுமதி என்ன?’ எனும் கேள்வியே நாவலின் மூலக் கேள்வி என்பது ஜோவின் கருத்து. அதற்கேற்றார்போல மரணங்கள் நாவல் முழுக்க அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன. ஒருவராக, இருவராக, கூட்டமாக, இயற்கையாக, செயற்கையாக மனிதர்கள் நாவல் முழுவதும் இறந்து கொண்டிருக்கிறார்கள். உயிர்த்தியாகம் ஒரு உன்னத கிறீத்துவ மதிப்பீடு. ‘நண்பனுக்காக உயிரை விடுவதைவிட மேலான அன்பு எதுவில்லை’ (யோவான் 15:13) என்கிறார் இயேசு. இதுவே ஆழி சூழ் உலகு நாவலின் திரண்ட கருத்தும் எனலாம். ’மரணத்தை தியாகத்தால் வெல்லலாம்’ என்பது ஜோவின் முடிவு. ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது அந்த இறுதிகட்ட உயிர்த் தியாகங்களல்ல. ஒரு கணத்தின் வேகத்தில், சூழலின் தாக்கத்தில் நிகழ்ந்துவிடும் உயிர்த்தியாகம் மட்டுமே நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியுமா என்ன? அத்தகைய மரணம் எல்லோருக்கும் சாத்தியமா? இல்லையெனில் நம் வாழ்கையை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? அதுவும் தியாகத்தின், அன்பின் வழியாகவே. நாவல் இதனை ஆர்பாட்டமின்றி சொல்லிச் செல்கிறது. காகு சாமியார், தொம்மாந்திரை, கோத்ரா, கொத்தாளத்தா, மேரி என பலர் தூய அன்பின், தியாகத்தின் சாட்சிகளாக கதை முழுவதும் வந்து செல்கிறார்கள். பிரதிபலன் பாராமல் இது தியாகம் இது அன்பு என்ற கூச்சலில்லாமல் ’செய்கிறேன் பார்’ என்ற முழக்கமில்லாமல் தங்கள் முழு வாழ்க்கையையுமே பிறருக்காக அர்ப்பணிக்கும் குணமுடையவர்களாகவே இவர்களைக் காண முடிகிறது.</p>
<p>கடற்புரங்களிலோ அதையொத்த கிராமப்புறங்களிலோ இத்தகைய மனிதர்களைக் காண்பது அரிதல்ல. கடற்கரை கிராமங்களில் நோய், ஆழிப் பேரலை போன்ற பேரழிவுகளாலன்றி அனாதைகள் என யாரும் அறியப்படுவதில்லை. நான் கடற்புறத்தில் அனாதை என்று ஒருவரைப் பற்றியும் கேள்விப்பட்டதுமில்லை. ’உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி’ என்பதும் கிறீத்துவின் அழுத்தமான கட்டளைகளில் ஒன்றென்றாலும், இதை ஒரு பழங்குடி சமூகப் பண்பாகவும் காண முடியும். கடற்புறங்கள் பழங்குடி மரபிலிருந்து தங்களை இன்னும் முழுமையாக துண்டித்து விடவில்லை. அவர்கள் ஒரே இனத்தவர்கள், மரபணுத் தொடர்புள்ளவர்கள். அங்கே யாரும் அனாதையல்ல, ஆதரவற்றவரல்ல. ஏதேனும் ஒரு சொந்தக்காரர் அல்லது குடும்ப நண்பர் அல்லது தந்தையுடன் வியாபாரம் செய்தவர் என யாரோ ஒருவர் ஆதரவற்றவர்களைக் கண்டு உதவி செய்துவிடுவதுண்டு. இதை இப்படிச் சொல்லலாம், அங்கே எல்லோருமே கைவிடப்பட்டவர்கள், தன்னை நம்பி மண்ணை நம்பி வாழ்பவர்கள், ஆகவே எவனுமே தனித்து கைவிடப்பட்டவன் அல்ல.</p>
<p>எத்தனை அற்புதமான கணங்கள். அயலான் ஒருவனின் துயரங்களைத் தாங்கும் கணங்கள், ஆதரவற்ற பிள்ளைகளை நம் பிள்ளைகளாய் சுவீகரிக்கும் கணங்கள், அன்னியன் ஒருவன் மீது முழுமையாக நம்பிக்கை கொள்ளும் கணங்கள், தேடிச் சென்று உதவும் கணங்கள். உயிர்த்தியாகத்தால் மட்டுமல்ல வாழ்க்கை அர்த்தம் கொள்வது. பொதுவாக நாம் படிக்காதவர்கள் என்றும், முரடர்கள் என்றும், கொச்சை மொழி பேசுபவர்கள் என்றும் கருதும் இந்த எளிய மக்கள் எத்தனை உயரங்கள் சாத்தியமானவர்கள், எத்தனை உயரங்கள் சென்று மீண்டவர்கள்?</p>
<p>இதில் கோத்ரா பிள்ளைக்கும் காகு சாமியாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒருவர் அங்கி அணிந்த பாதிரியார் இன்னொருவர் மீனவர். இருவருமே பிறர் நலன் நாடுபவர்கள். தேடிச் சென்று உதவுபவர்கள். தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பவர்கள். ஒரு நல்ல மனிதன்தான் நல்ல பாதிரியாராகவும் இருக்க முடியும். மாற்றிச் சொன்னால் ஒரு நல்ல மனிதனுக்கும் நல்ல பாதிரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை.</p>
<p>பழங்குடி வாழ்க்கை முற்றிலும் மகோன்னதமான வாழ்க்கையுமல்ல. அப்படி ஒரு அப்பழுக்கற்ற உன்னத வாழ்க்கை முறையை எந்த இனமும் இன்னும் சென்றடையவில்லை. அதை கனவு மட்டுமே கண்டிருக்கிறோம் இன்னும் கட்டமைக்கவில்லை. நீட்டிய கைகளுக்கு வெகு அருகிலேயே பறந்து செல்லும் பட்டாம்பூச்சி போல அந்தக் கனவு கைவசமாகாமல் சென்று கொண்டிருக்கிறது. பழங்குடி வாழ்கையின் போட்டி பொறாமைகள், உட்பூசல்கள், துரோகங்கள், மனிதம் நீங்கி விலங்காகி உடலெங்கும் வன்மத்தின் நகங்கள் முளைக்க வெறியுடன் பாய்ந்து ஒரு சிற்றுயிரை மாய்க்கும் தருணங்களையும் ஜோ பதிவு செய்திருக்கிறார். நெருங்கிய உறவினர்களுக்குள் சுவற்றில் முளைத்த சின்னஞ்சிறு செடி போலப் பகை மெல்ல நுழைந்து வீட்டையே தகர்க்கும் ஒரு பெரும் விஷ மரமாய் வளர்ந்து ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொள்ளுமளவிற்குச் சென்றுவிடுவதை சமீப காலங்கள் வரையிலும் நாம் கேள்விபட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுளின் உறைவிடமென்றும், ஆன்மாவின் வீடென்றும், அறிவைத் தாங்கியதென்றும், இனங்களிலே பேரினத்தினுடையதென்றும் நாம் உன்னதப்படுத்தி வைத்திருக்கும் உயிருள்ள ஒரு மனித உடலை துகள் துகளாக வெடிகுண்டு கொண்டு சிதறச் செய்யும் கொடுமைகளும் இதே கடற்கரை மணல்களில் இரத்தம் படிய அரங்கேறியுள்ளன. கடவுளும் விலங்கும் ஒருசேரக் கலந்தவனல்லவா மனிதன்?</p>
<p>ஆழி சூழ் உலகில் பெண்களும் இந்த இரு துருவ நிலைகளுக்கு நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள். கோத்ராவின் மனைவி தோக்களத்தாவும், சூசையின் மனைவி மேரியும் பிறர்நலம் பேணும் நல்லவர்களாகவும், கணவனைப் புரிந்து செயல்படுவதில் நம் புராண பாத்திரங்களுக்கு நிகராகவும் இருக்கிறார்கள் என்றால் வசந்த மாளிகை எனப்படும் ரெபெக்காவும், ரோஸம்மாவும் அதன் எதிர்பக்கம் எனச் சொல்லலாம். இதன் நடுவே சுந்தரி டீச்சர், வசந்தா போன்ற பாத்திரங்கள்.</p>
<p>நாவலில் சொல்லப்பட்டிருக்கும் பாலியல் வழுக்கல்களை நெருடலில்லாமல் பலராலும் படித்துச் செல்ல முடியவில்லை. நான் நாவல் குறித்து மீனவ இனத்தைச் சார்ந்த என் வாசக நண்பரான ஒரு பெண்மணியிடம் பேசுகையில் அவர் சொன்ன ஒற்றை வரிக் கருத்து ‘அவ இவங்கூட ஓடிப்போனான், இவ அவங்கூட ஓடிப்போனாண்ணு எழுதியிருக்கான்’ என்பதுவே. வேறு சிலர் ‘வெறும் கெட்டவார்த்தையா எழுதியிருக்காரு’ என்றார்கள். இதற்கான காரணங்களாக நான் கருதுவது இரண்டு.</p>
<p>முதலில் ஒழுக்கம் சார்ந்த நம் நம்பிக்கைகள். குறிப்பாக ஒரு புத்தகம் என்பது நல்லவை என நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளை மட்டுமே உள்ளடக்கியிருக்க வேண்டும் எனும் பார்வை. இது வாசிப்பில் உள்ள குறைபாடு. மேலும் எங்கள் மக்களுக்கு சமகால இலக்கிய பரிச்சயம் அதிகம் இல்லை. ஆக காமம் குறித்து எழுதுவதே தவறானது போன்ற ஒழுக்க மதிப்பீடுகளுடன் படைப்பை அணுகுவது தவிர்க்க இயலாதது.</p>
<p>இரண்டாவது நாவலின் காம நிகழ்வுகள் அனைத்தையும் டி. குருசா கிழவி சொல்லியிருக்கிறாள். அதாவது கிராமத்து கிசு கிசு பாணியிலேயே இந்த பகுதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ‘நல்ல கறுத்த நாட்டுக் கட்டை’ என்றோ ‘காயா இது பழமா’ என சினிமா பாடலின் மேற்கோளுடனோ இந்தப் பகுதிகள் சொல்லப்படுவது அப்படியே கிராமிய வம்புப் பேச்சுகளை ஒத்திருக்கின்றது. சில காட்சிகள் விடலைத்தனமாக எழுதப்பட்டிருக்கின்றன. சுந்தரி டீச்சருக்கும் சூசைக்கும் களவொழுக்கம் துவங்கும் காட்சி வெறும் கிளர்ச்சியூட்டும் காமக் காட்சியாகவே எழுதப்பட்டிருக்கிறது என்பது எனது திண்ணமான கருத்து.</p>
<p>காமத்தை எழுதுவது அத்தனை எளிதானதல்ல. இவற்றையும் ஜோ என்கிற படித்த பண்பட்ட இளைஞனே எழுதியிருக்க வேண்டியது அவசியம் என நான் கருதுகிறேன். ’நல்ல மாநிறம். வளர்த்திக்கேற்ற உடல்கட்டு. தேவையான நெளிவு சுளிவுகள். சிறுத்திருந்த இடையின்கீழ் பருத்த பின்புறங்கள்’ போன்ற வர்ணணைகளும் சரி,  ’வழித்துணையாக வந்தவர்கள் உரசிக்கொண்டதில் நெருக்கம் அதிகரித்து இப்போது தொடர்கதையாகிவிட்டது’ என்று ஒரு களவொழுக்கத்தின் தொடர்ச்சியை போகிற போக்கில் குறிப்பதும் சரி ‘வேலைய முடிங்க’ போன்ற பேச்சுக்களும் சரி மிகச் சாதாரணமான கிளர்ச்சியூட்டும் காமக் கதைகளை ஒத்திருப்பதை மறுக்க முடியாது. இது எழுத்தின் குறைபாடு.</p>
<p>காமம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இன்றைய இலக்கிய படைப்புக்களில் குறிப்பாக பெரும் நாவல்களில் காமம் மிகச் சாதாரணமாக பேசப்படுகிறது. சில நாவல்கள் காமத்தினால் எழும் மனித உறவு சிக்கல்களை மட்டுமே முன்வைத்து எழுதப்பட்டுள்ளன. ஆக காமம் பேசப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது மட்டுமல்ல , அவசியமானதும்கூட. ஒழுக்கம் சார்ந்த தூயத்துவப் பார்வையுடன் ஆழி சூழ் உலகு அணுகப்படக் கூடாது. ஆனால் காமம் வாழ்க்கையின் ஒரு பகுதியானாலும் அது வெளிப்படையானதல்ல என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். காமம் பேசப்படும்போது அதற்கான முதிர்ச்சியுடன் பேசப்படவேண்டும். காம உறவுகளை கொச்சைப்படுத்தும் வர்ணனை ஒன்றையோ எள்ளல் தொனியையோ கையாளுவது நாவலின் தன்மையையே கறை செய்யும்.</p>
<p>என் நண்பரும் மனதுக்கினிய எழுத்தாளருமான ஜெயமோகனின் காடு, இரவு, அனல் காற்று நாவல்களில் காமம் பேசப்படுகிறது. காடு முழுக்க முழுக்க தூய காமத்திற்கும் தூய காதலுக்குமான ஒப்பீட்டைச் சொல்கிறது. ஆனால் ஒரு இடத்தில்கூட, களவொழுக்கம் கூட, எள்ளல் தொனியிலோ, விடலைத்தனத்துடனோ சொல்லப்படவில்லை. ஏனெனில் ஒவ்வொரு காம நிகழ்வும், பிறழ்வும் மனித இயல்பின் அடிப்படைகளில் ஏதோ ஒன்றை கேள்விக்குறியாக்குகிறது. ஒரு வேளை தான் ஒரு விலங்கு என்று மனிதன் உணரும் தருணங்களில் ஒன்றாக இது இருக்கலாம். அந்தப் பரிணாமம் பல அர்த்தங்களை உணர்த்தக் கூடியது.</p>
<p>ஆழி சூழ் உலகு ஒவ்வொரு காமப் பிறழ்வுக்கும் ஒரு விளைவைச் சொல்லிச் செல்கிறது. ஜஸ்டின், வசந்த மாளிகையின் உறவு ஒரு கொலையில் முடிகிறது, ஜஸ்டின் வசந்தாவுக்கிழைத்த துரோகம் அவனின் உயிரை அவள் கையாலேயே பறித்து விடுகிறது, பத்தினி மட்டும்தான் கொலை செய்யவேண்டுமென்றில்லையே, சூசை சாராவை வெறி கொண்டு துய்த்த செயல் அவனை குற்ற உணர்வுள்ளவனாக்கி பரிகாரமாய் அவன் உயிரைப் பெற்றுக் கொள்கிறது.</p>
<p>இந்த இடத்தில் தகழி சிவசங்கர பிள்ளையின் ‘செம்மீன்’ எனும் மீனவர் பின்புலத்தில் எழுதப்பட்ட நாவல் நினைவுக்கு வருகிறது. செம்மீன் மீனவர்களிடையே உலவிய கற்பு குறித்த ஒரு தொன்மத்துக்கு உயிரூட்டியது. அது திரைப்படமாக வந்தபோது அதன் பாடல் வரிகளிலேயே இது சொல்லப்பட்டது. பெண்ணாளே பெண்ணாளே எனும் பாடலில் கடலில் மீன் பிடிக்கப் போன முக்குவனுக்காக (மீனவன்) கற்புடன் காத்திருந்த மனைவிக்கு கடலம்மை கணவனை திருப்பித் தந்தாளென்றும் அப்படியல்லாதவளின் கணவனை ’கடலம்மே கொண்டு போயி’ என்றும் வரிகள் வருகின்றன. செம்மீன் ஒற்றை இலக்குடன் சொல்லப்பட்ட கதையாகிலும் அதனூடே கேரள மீனவ வாழ்க்கையின் பல முகங்களும் வெளி வந்தன. ஆழி சூழ் உலகு கற்பு குறித்த மீனவத் தொன்மத்தை சிறிதும் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. அது நிகழ்வுகளை அப்பட்டமாகவே சொல்லிச் செல்ல விழைகிறது. முன்பே நான் சொன்னதைப் போல டி. குருசா இதழோர நமுட்டுச் சிரிப்புடன் சொல்லும் கற்பனை கலந்த காமக் கதைகளின் சாயலையே நாம் ஆழி சூழ் உலகின் காமம் சொல்லும் பகுதிகளில் காண முடிகிறது. சாயலென்ன அவை அப்படிப்பட்ட கதைகள்தாம் என்பதை உறுதியாகவே சொல்ல முடியும்.</p>
<p>நாவல் முழுவதுமே தான் கண்டதையும் கேட்டதையும் படித்ததையும் பெரிதும் இலக்கிய கற்பனையின்றி ஒரு கிராமத்தின் டைரிக் குறிப்பை எழுதுவதைப் போல எழுதப்பட்டிருக்கிறது எனும் உணர்வு எனக்குள்ளது. ஒரு புனைவெழுத்தாளரிடம் நாம் எதிர்பார்ப்பது அபாரமான நினைவாற்றலை மட்டும் அல்ல. நேரடிக் காட்சிகளை துல்லியமாக பதித்துச் செல்வதுவோ, கிராமத்துக் கதைகளை மீள்பதிப்பதுவோ மட்டுமே ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிவிட முடியாது. ஒரு இலக்கியப் புனைவின் போக்கில் இரண்டு நகர்வுகள் இருக்க வேண்டும்.  ஒன்று கதை மாந்தர்களின் செயல்களின், சொற்களின் வழியே, எழுத்தாளனின் வர்ணணைகள், விவரணைகள் வழியே நகரும் கதையின் நகர்வு. இன்னொன்று அதற்கு மேல்தளத்தில் நிகழும் கருத்தின் அல்லது கருத்துக்களின் நகர்வு. இந்த இரண்டு நகர்வுகளும் பின்னிப் பிணைந்து சென்று சேர்ந்து உச்சமடைதலே ஒரு நல்ல இலக்கிய படைப்பின் அழகு. ஆழி சூழ் உலகில் கருத்து நகர்வு என்பது இல்லை. சுவாரஸ்யமான கதை நகர்வு மட்டுமே உள்ளது. நான் கருத்து எனச் சொல்வது நல்லொழுக்க போதனைகளையோ, புரட்சிகரமான சமூகக் கருத்துகளையோ அல்ல. அந்தக் கருத்துகள் நம் நம்பிக்கைகளை கேள்வி கேட்பவையாக இருக்கலாம், ஒழுக்க விதிகளை சிதறடிக்கச் செய்யலாம், நம் இருப்பையே கேலி செய்யலாம். ஒரு லட்சியம் நோக்கிய நகர்வு, அல்லது லட்சியங்களை விமர்சிக்கும் கருத்து. எதுவாகிலும் ஒன்று.</p>
<p>அமெரிக்காவில் ஜெல்லி பெல்லி என ஒரு சிறிய மிட்டாய் வகை உண்டு. பல வண்ணங்களில் பல சுவைகளில் அவை வரும். ஒரு குண்டு சோற்றுப் பருக்கையின் அளவே இருக்கும். அவை பொதுவாக பழங்களின் சுவையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு பழத்தை எடுத்துக் கொண்டு அதை சுருக்கி சுருக்கி இன்னும் சுருக்கி சிறிதாக்கியதைப் போல. ஒன்றை வாயிலிட்டால் அந்தப் பழத்தை சுவைப்பது போன்ற அனுபவம் நம் புலன்களுக்குக் கிடைக்கும். உதாரணமாக வாழைப் பழம் சாப்பிடும் போதெல்லாம் உங்களுக்கு ஒரு சிறுவயது நியாபகம் வந்து போகுமென்றால் ஜெல்லி பெல்லியும் அந்த நியாபகத்தை மீட்டெடுக்கும். எல்லா வகையிலும் ஒரு பழத்தை உண்ணும் அனுபவத்தைத் தரக் கூடியது ஜெல்லிபெல்லி, அளவையும் வடிவத்தையும் தவிர்த்து.  பல சிறந்த இலக்கிய நாவல்களும் ஜெல்லி பெல்லியைப் போன்றவை. அவை வேறொரு வாழ்வனுபவத்தை நமக்குத் தரவல்லவை. ஆழி சூழ் உலகோ ஒரு பெரிய பலாப்பழத்தை உரித்து நம் முன் வைத்ததைப் போல வைக்கப்பட்டுள்ளது. பூடகமில்லாத வெளிப்படையான நேரடியான எழுத்து. நிகழ்வுகளை அடுக்கிச் செல்லும் சினிமாவின் யுக்தியே இதில் கையாளப்பட்டுள்ளது.</p>
<p>ஆழி சூழ் உலகு தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் மதமான கத்தோலிக்க கிறீத்துவம் குறித்த இரு பார்வைகளை முன்வைக்கிறது. ஒரு பக்கம் காகு சாமியாரை ஒரு நல்ல பாதிரியாருக்கு அடையாளமாக கதையினூடேயே சொல்லிச் செல்கிறது. தூய அன்புடையவராகவும், உண்மையான இறைபக்தியுடையவராகவும் காகு சாமியார் காட்டப்படுகிறார். அவர் மக்களை வழிநடத்தும் ஒரு பழங்குடித் தலைவனின் பிம்பமும்கூட. இன்னொரு பக்கம் பல இடங்களில் கிறீத்துவம் குறித்த விமர்சனங்கள் திடீரென முளைக்கும் சில காட்சிகளாலும் உரையாடல்களாலும் வெளிப்படுத்தப்படுகின்றன. நான் கவனித்தவரையில் நாவலில் வெளிப்படையாக ‘கருத்து’ எனச் சொல்லப்பட்டிருப்பவை கத்தோலிக்க திருச்சபையின் மீதான விமர்சனங்களே.</p>
<p>இன்றைய, படித்த மீனவ இளைஞர்கள் மத்தியில் கத்தோலிக்க கிறீத்துவம் குறித்த அதிருப்தி நிலவுவதைக் காண முடிகிறது. பிற சமூகத்தினரிடம் உரையாடலற்ற, உறவற்ற சமூகமாக மீனவ சமூகம் அண்மை வரை இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக கிறீத்துவ மதமாற்றத்திற்குப்பின் இது ‘மீட்கப்பட்டவர்கள்’ ‘மீட்பில்லாதவர்கள்’ என்ற பிரிவினையால் வந்திருக்கலாம் என்கிறது ஒரு தரப்பு. அதற்கு முன்பாக பல நேரடி உறவாடல்கள் கடலோர மீனவர்களுக்கும் பிற சமூகத்தினர்களுக்கும் இருந்து வந்துள்ளது. இப்போது மீண்டும் படித்து தங்கள் புலங்களை விட்டு வெளியே வரும் மீனவ இளைஞர்கள் வெளியே சமூகச் சூழல்களைக் நேரடியாகக் காண்கிறார்கள். கத்தோலிக்க கிறீத்துவம் தங்கள் மீது, தங்கள் மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது, இன்னும் செய்து வருகிறது என்று கருதுகிறார்கள். மக்கள். படித்த தங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பைவிட பாதிரியார்களுக்கு அதிக மதிப்பிருப்பது அவர்களை ஒரு வகையில் ஏமாற்றமடையச் செய்கிறது. பாதிரியார்களோ, திருச்சபையோ இவர்களை போட்டியாளர்களாகக் காண்பதுவும் உணரப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை துவக்கம் முதலே இந்த இக்கட்டில் இருந்து வருகிறது எனலாம். அதன் ஆன்மிக எல்லைகளைத் தாண்டி திருச்சபை தன் தாக்கத்தை சமூக அரசியல் எல்லைகளுக்குள் செலுத்தும் போதெல்லாம் தவிர்க்க இயலாமல் இந்த இக்கட்டில் விழுகிறது. எதிர்ப்பு வலுக்கும்போது அது தன் ஆன்மிக கூட்டுக்குள் தலையை இழுத்துக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறது. தங்கள் முன்னோர்களின் வரலாற்றையே இருட்டடித்து விட்டது திருச்சபை என்பது இன்னொரு தரப்பின் ஏக்கம். பல கடவுள்களை வணங்கும் ’பெருந்தன்மை’ இந்து மதத்திற்கிருப்பதாக நேரடியான எதிர்மறை ஒப்பீட்டை ஆழி சூழ் உலகு முன்வைக்கிறது. இன்றைய பாதிரியார்கள் பலரும் பக்தியின்றி பகட்டுடனும் ஒழுக்கம் மீறியும் வாழ்வதாயும் குற்றம் சாட்டுகிறது. இதை நான் மேலே குறிப்பிட்டுள்ள அதே பட்டவர்த்தனத்தோடே சொல்கிறது நாவல்.</p>
<p>எந்த நிறுவனமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. குறைந்தபட்சம் அதன் உறுப்பினர்களுக்கேனும் அந்த உரிமை முழுமையாக உள்ளது. திருச்சபையும் இதற்கு விதிவிலக்கல்ல. வரலாற்றை இன்றைய மதிப்பீடுகளின்படி நோக்குவது ஒரு திரையிட்ட பார்வையே என்றாலும், திருச்சபையின் இரண்டாயிரம் கால வரலாற்றை மேலோட்டமாகப் பார்த்தாலே ஒன்று புலப்படும். தன்னை விமர்சிப்பவர்களை அது அடக்கிய காலங்களெல்லாம் அதன் இருண்ட காலமாகவே இருந்திருக்கிறது. அது தன்னைத்தானே விமர்சித்தும், விமர்சனங்களுக்கு செவிமடுத்தும் தன்னை அவ்வப்போது புதுப்பிக்கத் துவங்கிய பின்னர் அது மிகுந்த ஜனநாயகத் தன்மையை அடைந்து இன்றைய உலகின் மதிப்பீடுகளை உருவாக்கிய, செயல்படுத்திய முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகத் தன்னை உருமாற்றிக் கொண்டது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் அப்படிப்பட்ட நிகழ்வுகளில் மிக முக்கியமானது எனலாம்.</p>
<p>ஜோ முன்வைக்கும் விமர்சனங்கள் பொதுமக்களின் உணர்வை நிச்சயம் பிரதிபலிக்கிறது என்பேன். அது புரிதலின் பிழையாகக்கூட இருக்கலாம் ஆனால் அந்த விமர்சனங்களுக்கு செவிமடுத்து தன்னையோ தன்னைப்பற்றிய புரிதலின் பிழையையோ திருச்சபை சரிசெய்தாக வேண்டும். திருச்சபையோ, கிறீத்துவர்களோ தங்கள் எண்ணங்களையும் செயல்களையும் இயேசுவில் சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். வேறெந்த அளவுகோலையும், உரைகல்லையும் தேடத் தேவையில்லை. இதை அடிப்படை நேர்மையுடனும் அறவுணர்வோடும் செய்ய வேண்டும். தென் தமிழக மீனவர்களுக்கு பிரதிநிதித்துவம் தரும் ஒரு பெரும் அமைப்பு கத்தோலிக்க மதம் மட்டுமே. அதற்கேற்ற கடமையுணர்வுடன் அது நடந்து கொண்டிருக்கிறதா என்பதை சோதித்தறிய வேண்டும். இன்னும் மிக முக்கியமாக மீனவ சமூகங்களுக்கும் பிற கத்தோலிக்க சமூகங்களுக்குமேனும் ஒரு இனைப்புப் பாலமாக திருச்சபை விளங்க வேண்டும்.</p>
<p>கிறீத்துவ வாழ்க்கையை மையமாகக் கொண்ட படைப்புகள் தமிழில் மிக மிகக் குறைவாகவே உள்ளன. மையமாக இல்லையென்றாலும் பரவாயில்லை, கிறீத்துவப் பின்னணியைக் கொண்ட சாதாரண கதைகளைக்கூட விரல்விட்டு எண்ணிவிடலாம். கிறீத்துவ பத்திரிகைகளில் வரும் நல்லொழுக்கக் கதைகளை நான் இதில் சேர்த்துக் கொள்ளவில்லை. பொதுத் தமிழ் இலக்கியங்களை அல்லது பிற கலைப் படைப்புகளைக் கொண்டு தமிழக வரலாற்றை எழுத முயன்றால் கிறீத்துவம் எந்த இடத்தில் நிற்கும் என்பதை கணக்கிட முடியவில்லை. மிகச் செயற்கையாக நம் திரைப்படங்களில் காட்டப்படும் ‘அன்பு மகனே! மகளே!’ என அங்கி கசங்காமல் வந்து நிற்கும் பாதிரியாரின் சித்திரம் மட்டுமே மிஞ்சும். அந்த வகையிலும் ஆழி சூழ் உலகு ஒரு முக்கியமான, முன்னோடியான படைப்பாகிறது. அது ஒரு கிறீத்துவ கிராமத்தின், கிறீத்துவ வாழ்க்கையின் பல முகங்களையும் காட்டுகிறது. திருவிழாக்கள் ஒருங்கிணைக்கப்படும் விதம், பங்கு கமிட்டிகளின் செயல்பாடுகள், கோவிலின் பாடல் குழு, பிற செயற்குழுக்கள் குறித்த குறிப்புகள் என பல முக்கியமான குறிப்புகளையும் நாவல் உள்ளடக்கியுள்ளது.</p>
<p>ஆழி சூழ் உலகு 1985ல் முடிகிறது. அந்த கால கட்டத்தில் என் கிராமத்தில் தினசரி செய்தித்தாள் கிடைக்கவில்லை, தொலைபேசி இல்லை, தொலைக் காட்சிப் பெட்டிகளில்லை, வானொலியில் இலங்கை நிலைய ஒலிபரப்புக்கள் மட்டுமே அவ்வப்போது கேட்கும், வீட்டுக்கொரு மிதிவண்டி இருப்பதே பெரிய விஷயம், பேருந்து எறுவதற்கு இரண்டு கிலோமீட்டர்கள் வரை மேடும் பள்ளமுமாக ஏறி இறங்கி நடக்க வேண்டியிருந்தது, தார்ச்சாலைகளில்லை, ஆட்டோ வசதியில்லை, தெருவிளக்குகளில்லை. மாலை ஆறு ஏழு மணிக்குப் பிறகு ஊருக்கு வருவதோ போவதோ கடினமானது. பல மீனவ கிராமங்களும் இந்த நிலையில்தான் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தெரு ஒன்றில் நடந்து சென்றால் திண்ணைகளில் யாரேனும் நிச்சயம் அமர்ந்திருப்பார்கள். நான் உறவினர்களின் ஊருக்குச் செல்லும்போது அப்படித் திண்ணைகளிலிருந்து திடீர் திடீரென குரல்கள் என்னை அழைப்பதுண்டு. ’ஏய் நீ அல்லேசி(அலெக்ஸ்) மவனா வந்து சாப்பிட்டுட்டு போயா.’ எனக் கூப்பிடும் அந்த மனிதர்கள் எனக்கு பரிச்சயமில்லாத என் உறவினர்கள். மாலை நேரங்களில் கடற்கரையில் ஆணும் பெண்ணுமாகக் குடும்பமாக அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருப்பார்கள். கடலும் தன்பங்குக்குப் பேசிக்கொண்டிருக்கும்.</p>
<p>இன்று எல்லாவிதமான வாகனங்களும் ஊருக்குள் வந்து போகின்றன, கடலுக்குள்ளிருந்து மீனவர்கள் தொலைபேசுகிறார்கள். பல வீடுகளில் தொலைபேசி உள்ளது. 90%க்கும் மேல் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு செல்ஃபோனாவது உள்ளது. கேபிள் தொலைக்காட்சியோ சாட்டிலைட் டிஷ்ஷோ, 24 மணி நேரமும் நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. திண்ணைகள் காலியாகியுள்ளன. பழைய வீடுகள் பல புதிப்பிக்கப்படுகின்றன. அவற்றில் திண்ணைகளே இல்லை.</p>
<p>இருபது வருட இடைவெளியில் ஆழி சூழ் உலகு சொல்லும் பழங்குடி வாழ்க்கை முறை காணாமல் போயிருக்கிறது. சக மனிதர்கள் மீதான சார்பு நிலையும் ஆதிக்கமும் தாக்கமும் குறைந்துள்ளது. முன்பு முரட்டு மரங்கள் ஓங்கி வளர்ந்த அழகிய வனத்தைப் போல இருந்த கிராமங்கள் இன்று அளவாய் திருத்தி வடிவமைக்கப்பட்ட தோட்டங்களாயிருக்கின்றன. முரட்டு மரங்கள் அவ்வப்போது உரசி காடே தீ பற்றி எரிவதுண்டு தோட்டங்கள் அப்படியில்லை, நேர்த்தியானவை, ஆனால் தோட்டங்கள் கத்தரிக்கோல்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. பல சமூகங்களைப் போலவே லௌகீகக் கவலைகளில் மீனவர்களின் கவனம் சென்றிருக்கிறது. தொலைக்காட்சி தொடர்ந்து வெவ்வேறு உலகங்களை, அவற்றின் கனவுகளை, கவர்ச்சிகளை நிலவறைகளில் கொண்டு கொட்டிக் கொண்டிருக்கிறது. சுருங்கும் உலகம் பல வாய்ப்புகளைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. நுட்பமின்றிச் சொன்னால் பிற சமூகங்களைப் போலவே இங்கேயும் பணம் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல ஒரு பழங்குடி இனம் தன் குழந்தைமையை இழந்து வருகிறது.</p>
<p>எளிமையான, தன்நிறைவு கொண்ட சமூகங்களாக நம் பழங்குடிகள் இருந்து வந்திருக்கின்றன. இன்று கூட்டிலிருந்து கலைத்து விடப்பட்ட தேனீக்கள் போல பணம் தேடி சிதறியோடிக் கொண்டிருக்கின்றனர் நம் மக்கள். ஒரு பழங்குடி சமூகம் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து கொண்டே தன் மரபார்ந்த அடிப்படைகளை தக்கவைத்துக் கொள்வது சாத்தியமா? இனிவரும் காலங்களில் மீன்பிடித் தொழில் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று சேரும் என சிலர் கணிக்கிறார்கள். ஆழ்கடலில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது முதல், இதுவரை எந்த விதத்திலும் எதிரி ஊடுருவல்களுக்கு ஆளாகாத பகுதிகளில் இராணுவ பாதுகாப்பிற்கென்று மீனவர்கள் இடம்பெயர்க்கப்படுவது வரை பல திட்டங்களும் மறைமுகமாக இந்த பன்னாட்டு முதலாளிகளின் இலாபங்களுக்காகவே செய்யப்படுகின்றன எனும் ஐயம் இயல்பாகவே எழுகிறது. மீனவர்கள் கூட்டுறவுகளின் மூலமோ, முதலீட்டை ஒன்றாய் குவித்து ஒருங்கிணைப்பதன் மூலமோ பெருவாரியான மீன் பிடிப்புத் தொழிலில் ஈடுபடுவது அவசியம். இது அவர்களை முதலீட்டுத்துவத்துக்கு அழைத்து வருவது மட்டுமல்ல, வெறும் இலாப நோக்கோடு இயற்கை வளங்களை கொடுவாட்கள் கொண்டு அறுவடை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பதிலாக இயல்பாகவே தன் சூழல் மீது அக்கறை கொண்ட, மரபின் மனசாட்சிக்கு கீழ்படிகிற நம் பழங்குடிகள் கையில் நம் இயற்கை வளங்கள் இன்னும் நீள் காலங்கள் நிலைத்து நீடிக்கவும் செய்யும்.</p>
<p>ஒரு சிற்றூரின் கதை யூகிக்க முடியாத பல இடங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. வேலிக் கற்றாழைகளில், கள்ளிச் செடிகளில், பாழடைந்து கிடக்கும் வீடுகளில், பள்ளிகளில், கோவில் சுவர்களில், ஊருக்கு ஒதுங்கிய குன்றின் கற்களில், இவற்றை விடவும் மேலாக அங்கு வாழும் மக்களின் ஆழ்மனங்களில் ஆழப்பதிந்து கிடக்கின்றன பல கதைகளும். ஜோ இங்கிருந்தெல்லாம் கதைகளைத் தேடி எடுத்திருக்கிறார். ஒரு மீனவ கிராமத்தில் அவர்களை அறியாமல் படப்பிடிப்புக் கருவிகளை பொருத்தி வைத்து ஓராயிரம் கண்கள் கொண்டு பார்த்துக்கொண்டிருப்பதை போன்ற சுவாரஸ்யம் நிச்சயம் ஆழி சூழ் உலகு தரும் அனுபவங்களில் ஒன்று. ‘அதற்கு மேல் என்ன?’ என்பது இலக்கியத்தை பொறுத்தமட்டில் பெரும் கேள்வி.</p>
<p>நன்றி: <a href="http://solvanam.com/?p=16797">சொல்வனம்</a></p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=613&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&#038;p=613</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை</title>
		<link>http://cyrilalex.com/?p=611</link>
		<comments>http://cyrilalex.com/?p=611#comments</comments>
		<pubDate>Fri, 11 Nov 2011 08:30:46 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[செய்தி விமர்சனம்]]></category>
		<category><![CDATA[தொழில் நுட்பம்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இயற்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[அலசல்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=611</guid>
		<description><![CDATA[மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன.</p>
<p>பலரும் ஏதோ திடீரென இந்தப் போராட்டம் உதித்துவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். கூடங்குளம் அணு உலை திட்ட நிலையில்இருக்கும்போதே அதற்கு எதிர் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துபிட்டன. அப்போது நடந்த மக்கள் குறை கேட்கும் கூட்டங்கள் மிகச்சாதுர்யமாக அணு உலை அமைக்கப்படும் இடத்திற்கும் 87 கிலோ மீட்டர்கள் தள்ளி நடத்தப்பட்டன. மக்களுக்கும் நம் அரசுக்குமான தூரத்தின் சிறியஅளவைதான் அந்த 87 கி.மி. ஒரு மீனவனாக, ஒரு ஏழை பனையேறியாக, மழை பொய்த்துப்போன மண்ணிலும் ஏதேதோ விளைவித்துக்கொண்டிருக்கும் ஒரு விவசாயியாக, ஒரு தினக்கூலியாக இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவர்களுக்கு அது எண்பத்தேழாயிரம் கிலோமீட்டர்கள் என.</p>
<p>இருந்தும் மக்கள் கூட்டமாய் சென்று தங்கள் எதிர்ப்பை அப்போதே பதிவு செய்தனர். தொடர்ந்து அணுஆலை திட்டம் ஒவ்வொரு மைல்கல்லைத் தொடும்போதும் போராட்டங்கள் நடந்துகொண்டேயிருந்தன. பலரும் மதில்மேல் பூனையாய் இருந்துவந்தனர் என்பதும் உண்மை. சிலர் ஒரு ‘தொழிற்சாலை’ புதிதாய் வருவதால் நமக்கு இலாபம்தானே, வேலைகள் கிடைக்குமே பூமி விலை ஏறுமே என தற்காலிக இலாபங்களை எண்ணி மௌனமாயிருந்தனர். ஃபுக்குஷிமா பேரழிவுக்குப் பின் எல்லோரும் ஒன்றாய் விழித்துக்கொண்டுள்ளனர்.</p>
<p>மார்ச் 11ல் ஜப்பானை உலுக்கிய 9 ரிக்டர் நிலநடுக்கத்தினாலும் அதில் விளைந்த ஆழிப்பேரலைகளினாலும் ஃபுக்குஷிமாவின் அணுசக்தி ஆலை இடிபட்டு, அங்கிருந்த அணு உலைகளை குளிரூட்டச் செய்யும் கருவிகள் செயலிழந்து, மூன்று உலைகள் 2800 டிகிரி செல்ஷியஸுக்கும் மேல்வெப்பமடைந்து வெடித்துச் சிதறின. இதில் ஃபுக்குஷிமாவுக்கும் 20 முதல் 25 கி.மி சுற்றளவு வரைக்கும் மெல்லக் கொல்லும் கதிரியக்கப் பொருட்கள் வெடித்துப் பரவின. மிகுந்த குளறுபடிகளுக்குப் பின் இந்தப் பகுதிகளில் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பலர் கிடைத்த வழிகளில்இடங்களை விட்டு வெளியேறினர். ஆறுமாதங்களுக்குப் பின்னும் இன்னும் பலரும் தம் பழைய குடியிருப்புகளுக்கு திரும்பி வர முடியாமல்உள்ளனர். திரும்பி வந்த சிலரும் அன்றாட வாழ்வின் சின்னச் சின்ன தேவைகளையும் அவநம்பிக்கையுடனும் சந்தேகங்களுடனும் செய்யவேண்டிய நிலையிலுள்ளனர். பலரும் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி மீண்டும் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் பலர் தீவிர மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் பலர் விவசாயிகள்.</p>
<p>ஃபுக்குஷிமாவைச் சுற்றி மண் முதல் விண்வரை கதிரியக்கம் பரவியுள்ளது. பள்ளிகளில் மைதானங்களின் மேற்பரப்பில் 50சென்டிமீட்டர் வரைக்குமான மண்ணை அள்ளி அப்புறப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் எப்போதும் முகக்கவசமணிந்துகொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் விளையும் எந்த காய்கனியையும் யாரும் உண்ண முடியாது. அங்கிருக்கும் காடுகளின் இலைகளில் கதிரியக்கம் ஊடுருவியுள்ளது. அவற்றை உண்ணும் கால் நடைகள் வழியாக மனிதர்களுக்கும் கதிரியக்க தாக்கம் வருகிறது. இன்னும் எரிந்துகொண்டிருக்கும் அணு உலைகளில் வெப்பத்தைக் குறைக்க நீரை இறைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். அது பெரும் நீராவி மேகமாக மேலெழும்புகிறது. அவற்றிலும் கதிரியக்கம் ஊடுருவியுள்ளது. அது மேகமாக பல இடங்களுக்குச் செல்லும் அபாயம் நிலவுகிறது. உலகின் மிகப் பெரிய அணுசக்தி உலை வெடிப்பாகக் கருதப்படும் செர்னோபில் விபத்தைவிட ஃபுக்குஷிமாவின் பாதிப்பு பெரிதானது எனக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 966கிமீ சுற்றளவு நிலம் வாழத்தகுந்ததல்ல என்று சொல்லப்படுகிறது.</p>
<p>50 கிமீ வரையிலும் நேரடிபாதிப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் ஆறுமாதங்கள் ஆகியும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் அரசுகளும் தலையிட்டும் ஃபுக்குஷிமாவில் ஏற்பட்டிருக்கும் கதிரியக்கத்தின் துல்லிய அளவையோ அதன் பின்விளைவுகளையோ யாராலும் அறியமுடியவில்லை.</p>
<p>கதிரியக்கம் என்பது கண்ணுக்குத் தெரியாத அலையாகச் செல்லும் சக்தி. அது நம் மரபணுவை (டி.என். ஏ) ஊடுருவும் சக்திகொண்டது. கதிரியக்கத்துக்கு ஆளானவர்கள் சிறிய அளவில் தைராய்ட் பிரச்சனைகள் முதற்கொண்டு மிக மோசமான கேன்சர் வரைக்கும் அனுபவிக்கநேர்கிறது. அளவுக்கதிகமான நேரடி கதிரியக்க ஊடுருவல் உடலைச் சிதைத்து உயிரைப் பறிக்கும். மிகவும் கொடூரமான கதிரியக்க விளைவாகத் தலைமுறைகளைத் தாண்டி கதிரியக்கம் ஊடுருவி, பிறக்கும் குழந்தைகளின் உடற்கூறுகளை மாற்றியமைத்துவிடுகிறது.</p>
<p>உண்மையைச்சொல்லப்போனால் கதிரியக்கத்தின் மத்தியில் உருவாகி வளரும் கரு ஒன்று எப்படி பிறப்பெடுக்கும் என்பதை யூகிக்கக்கூடமுடியாது. அத்தனை கொடூரமான விளைவுகளை உருவாக்கக்கூடியது கதிரியக்கம். மனிதன் இதுவரை கண்டுபிடித்த ஆயுதங்களிலேயே அதிக உடனடிப் பேரழிவையும் தலைமுறைகள் தாண்டி நீடிக்கும் தாக்கத்தையும் உருவாக்கும் ஒரே ஆயுதாம் அணு குண்டுதான். செர்னோபிலுக்குப் பிறகுஅதன் சுற்றுப்பரப்பில் 30,000 முதல் 90,000 பேர்வரைக்கும் புற்றுநோயால் அவதியுற்றனர். கதிரியக்கத் தன்மையுள்ள மூலப்பொருட்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் கிடந்து தலைமுறை தலைமுறையாக பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்.</p>
<p>இவை எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் மிக முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் அரசாங்கம், தன் மக்களைக் கைவிட்டுவிட்டதாக மக்கள் நம்புகின்றனர். இத்தகைய பேரழிவை ஜப்பான் எதிர்பார்த்துத் திட்டமிடவில்லை என்பதே உண்மை. பின்னர் உலகஅளவில் உதவிகள் வந்தபோதும் விபத்தையோ, கதிரியக்கப் பேரழிவுகளையோ அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது ஜப்பான்அரசு ஒரு விபரீத விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறது. அது இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த கதிரியக்க உச்ச வரம்புகளைஉயர்த்திவிட்டு பிரச்னைகள் இல்லை என்று கணக்கிடுகிறது.</p>
<p>கதிரியக்கச் சூழலில் வேலைபார்ப்பவர்களுக்கு பாதுகாப்பான கதிரியக்க அளவாக100 மில்லிசீவெர்ட்ஸிலிருந்து திடீரென 250மில்லிசீவெர்ட்ஸாக மாற்றியது. இதே போல உணவுக்கான கதிரியக்க உச்சவரம்பையும், கடலில் கலப்பதற்கான வரம்பையும் உயர்த்தியுள்ளது. உலகின் அரசுகள் பலவும் செய்துகொண்டிருப்பதையே ஜப்பான் அரசும் செய்கிறது. தகவல்கள்மறுக்க்கப்படுகின்றன, திரிக்கப்படுகின்றன, குறைக்கப்படுகின்றன. பாலுக்கு அழும் குழந்தையின் வாயில் ரப்பர் சூப்பியை வைத்து ஆறுதல்சொல்வதைப்போல அரசு பல பொய்களின் மூலமும் அரைத் தகவல்களின் மூலமும் மக்களை நம்பிக்கையுடன் வைத்திருக்கிறது. ஆனால் உண்மை மிகக் கொடியாதாக இருக்கிறது.</p>
<p>செப்டம்பர் 16, 2011ல் வெளிவந்துள்ள சைன்ஸ் பத்திரிகையில் ‘அடுத்த ஃபுக்குஷிமாவைத் தடுப்பது’ எனும் தலைப்பில் அணுசக்தி தொழில் நுட்பத்தில் பல வருடங்கள் அனுபவமுள்ளவர்களும், தற்போதைய ஹார்வர்ட் விரிவுளையாளர்களுமான மாத்தியூவ் டன், ஒள்ளி ஹெயீனொனென்ஆகியோர் எழுதிய கட்டுரை ஃபுக்கொஷிமாவுக்குப் பின் உலக அளவில் மேற்கொள்ளப்படவேண்டிய பல முக்கியமான அணு சக்தி திட்டமாற்றங்களை அலசுகிறது. அதில் மிகுந்த அக்கறையுடன் கீழ்கண்ட வரிகள் எழுதப்பட்டுள்ளன. ‘உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றானதும், அணு சக்தி தயாரிப்பில் மிகுந்த அனுபவம் கொண்டதுமான ஜப்பானிலேயே இத்தனை குறைகள் இருக்குமென்றால் இது இன்னும் கடுமையான அரசியல் மற்றும் நிர்வாகச் சமநிலையையும், பலனுள்ள மேற்பார்வைத் திறனும், நீடித்த அமைப்புகளையும் உருவாக்குவதற்கான தேவையை காட்டுகிறது’. அதைவிட முக்கியமாக ‘அணுசக்தி பயன்படுத்தும் சில நாடுகள் பயனற்ற கட்டுப்பாட்டு மேற்பார்வைகளுடையவை, ஊழலில் திளைப்பவை, நிலையான அரசியலற்றவை’ என கிட்டத்தட்ட நேரடியாகவே இந்தியா பாக்கிஸ்தானைக் குறிப்பிடுகின்றனர்.</p>
<p>நிர்ணயிக்கப்பட்ட தண்டவாளங்களில் ஓடும் ரயில்கள் மோதிக்கொள்வதையே தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது நம் அரசு. இத்தனை இரயில் விபத்துக்களுக்குப் பிறகு இப்போதுதான் விபத்தை தடுக்கத் திட்டமிட ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. நம் அணு உலைகள் நடத்தப்படும் லட்சணங்களை செப்டம்பர் 11, 2010 தெகல்கா கட்டுரை ஒன்று அதிர்ச்சியுடன் வெளியிட்டிருக்கிறது. கல்பாக்கம் அணுஉலையில் தொடர்ந்து நடக்கும் விபத்துக்களை அது பட்டியலிட்டு அவை குறித்த உண்மையான தகவல்கள் எதையும் இந்திய அணுசக்தி மேலாண்மை அமைப்பு வெளியிட மறுத்துள்ளதை குறிப்பிடுகிறது. கல்பாக்கத்தை சுற்றி வசிக்கும் சேரி மக்கள் தொடர்ந்து புற்று நோய்க்கு ஆளாகிவருவதை அது சுட்டிக்காட்டுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ‘மிகக் குறைந்த அளவில் கேவலம் “வெறும்” 244 பேருக்கு’ மட்டுமே புற்று நோய்வந்திருப்பதாக இந்திய அணு சக்தி அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் உண்மையில் அந்த எண்ணிக்கை மிக அதிகம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் அந்தப் பகுதி மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்களும். அணு உலைகளில் வேலை பார்ப்பவர்களின்குழந்தைகளுக்கு புற்று நோய் ஏற்படுவதை குறிப்பிடுகிறது தெகல்கா. உண்மைகள் மறைக்கப்பட்டு தங்களுக்குத் தெளிவான ட்ராக் ரெக்கார்ட் இருப்பதாக மார்தட்டிக் கொள்கிறார்கள் நம் அதிகாரிகள்.</p>
<p>அணுசக்தியில் மின்சாரம் தயாரிப்பது உலகளவில் மிகவும் இலாபகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கடைசியாக அமைக்கப்பட்ட10 அணு உலைகளும் திட்டமிடப்பட்டதைவிட 300% அதிக செலவில் அமைக்கப்பட்டுள்ளன. கோடி கோடிகயாகக் கொண்டு கொட்டியும் அணுசக்தியிலிருந்து இந்தியா பெறும் மின்சாரத்தின் அளவு கேவலம் 2.7% மட்டுமே. இந்தியாவில் எந்த அணு உலையுமே அது அமைக்கப்பட்ட முழுதிறனுக்கும் உற்பத்தியைச் செய்யவில்லை. திட்டங்கள் துவங்குகையில் எதிர்பார்க்கப்படும் மின்சார அளவுகள் எல்லாம் வெறும் பேப்பர்களிலேயே எழுதப்பட்டுள்ளன. ஆக இந்தப் பெரும் திட்டங்கள் யார் யாருக்கோ இலாபங்களை ஈட்டுவதற்காகவே செய்யப்படுகின்றன எனும் சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.</p>
<p>ஃபுக்குஷிமாவுக்குப் பிறகு அணுசக்தி குறித்த உலகப் பார்வை ஒரு அதிரடி மாற்றத்தை அடைந்துள்ளது. ஜெர்மனி, இத்தாலி ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் அணு சக்தியை முற்றிலும் கைவிட முடிவெடுத்துள்ளன. அடுத்த சில வருடங்களில் அணுஉலைகளை ஒவ்வொன்றாக நிறுத்தப்போகிறார்கள். அவை மாற்று சக்தியை நோக்கி நகர முடிவெடுத்துள்ளன. மிகத் தீவிர அணுசக்தி ஆதரவான நாடு ஃப்ரான்ஸ். அங்கேயே 63%மக்கள் அணுசக்திக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இத்தாலியில் 95%பேர் அணுசக்தி பயன்பாட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மே 25, 2011ல் வியன்னாவில் கூடிய ஆஸ்ட்ரியா, கிரீஸ், அயர்லாந்து, லாத்வியா, போர்சுகல் உள்ளிட்ட எட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மந்திரிகளின் குழுஅணு சக்தி பயன்பாட்டுக்கு எதிராக பிரகடனம் ஒன்றை செய்துள்ளனது.</p>
<p>நோபல் பரிசு பெற்றவர்கள் 18 பேர் ஒன்றுகூடி ஃபுக்குஷிமாவுக்குப் பின் உலகளவில் அணுசக்தி பயன்பாடு மெல்ல கைவிடப்படவேண்டும் என பிரக்டனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ‘உலகில் 400 அணுமின்ஆலைகள் உள்ளன. அவற்றிலிருந்து 7% மட்டுமே உலகின் மின்தேவை பூர்த்திசெய்யப்படுகிறது. ஆனால் இவற்றில் பலவும் விபத்துப் பகுதிகளில்அமைந்துள்ளன இது மனித குலத்துக்கே ஆபத்தானது!’ என்கிறது இவர்களின் பிரகடனம். இந்தியாவைப் போலவே அணுசக்தியை பெரிதும் நம்பியிருந்த சீனா ஃபுக்குஷிமாவுக்குப் பின் அதைக் கைவிட்டுவிட்டு மாற்று மின்சக்தி தயாரிப்பில் உலகிலேயே அதிக ஆர்வம் காட்டும் நாடாகமாறிவிட்டிருக்கிறது.</p>
<p>ஆனால் இந்தியாவில் ஃபுக்குஷிமாவுக்குப் பிறகான அணுசக்தி அணுகுமுறை என்ற ஒன்றே வகுக்கப்படவில்லை. உலகின் மிகப் பெரிய அணுஉலை விபத்தை இந்தியா கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. நான்குமுறை உச் கொட்டிவிட்டு வழக்கம்போல அலுவலகத்துக்குச் செல்லஆரம்பித்துவிட்டனர் அதிகாரிகள். அரசாங்கமே சும்மாயிருக்கும்போது அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள் பாவம்?</p>
<p>பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் விவசாயத்துக்குள் நுழைந்து நாகரிகங்களாக உருமாற ஆரம்பித்தது. அதன் பின் எத்தனையோ நாகரிகங்களும் பேரரசுகளும் உருவாகி மடிந்துபோயிருக்கின்றன. கோடி தலைமுறைகள் வந்துபோயிருக்கின்றன. ஒருவேளை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருகதிரியக்க விபத்து நடந்திருந்தால் அதன் தாக்கத்தை இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருப்போம். காரணம், கதிரியக்கப் பொருட்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வீரியத்துடன் இருக்கும் தன்மையுடையவை. இந்நிலையில், இன்று நாம் செய்யும் ஒரு தவறு நம்முடைய எத்தனை சந்ததிகளை அழிக்க வல்லது என்பதை நாம் பரிந்துகொள்ளவேண்டும்.</p>
<p>அணு உலைகளின் நீடித்த ஆபத்துகளும் சரி, விபத்துகளினால் ஏற்படும் பெரும் அழிவுகளும் சரி, மிகக் குறைவானதாகவே அணுசக்தி ஆதரவாளர்களால் மதிப்பிடப்படுகின்றன. இதற்குப் பின்னணியில் அணுசக்தி மேலண்மை செய்யும் தனியார் நிறுவனங்களின் பெரும்பணம் செயல்படுவதை யாரும் மறுக்க முடியாது. இவர்களின் ‘லாபி’ அமைப்புகள் உலக நாடுகளெங்கிலும் செயல்பட்டு தங்களுக்கு சாதகமான கொள்கைகளை உருவாக்கிக்கொள்கின்றன. மிகக் குறிப்பாக வளரும் நாடுகளை இவை குறிவைக்கின்றன. தனியாருடன் அணுஒப்பந்தங்களில் ஈடுபடுவதில்லை என்று சொல்லிவந்த இந்தியாவும் சமீப காலமாக மாறிவிட்டது.</p>
<p>மாறியபிறகு, அணு விபத்துகளின்போது மக்களுக்கு யார் உதவித்தொகை வழங்குவது என்பது குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இதுவும் முதலில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கைகழுவிவிட்டு ஓடும் வசதியை கொண்டிருந்தது. பின்னர் மக்களின் எதிர்ப்புக்குப் பிறகு இது கொஞ்சம் சரி செய்யப்பட்டுள்ளது. (தற்போதுகூடங்குளம் திட்டம் இந்தச் சட்டத்துக்குள் அடங்காது என்று அரசு கைவிரித்துள்ளது).</p>
<p>தனியார்மயமாதல் தன்னளவில் ஒரு கெட்ட பொருளாதாரக் கொள்கையல்ல. இன்று உலகளவில் வெற்றிகரமான ஒரே பொருளாதார வகைமையாக அதுவே உள்ளது. ஆனால் தனியார்மயமாதலில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு நன்மைபயக்கும்படி செய்வதே அரசின் முக்கியக் கடமை. அதைச் செய்யத் தவறும்போது இலாபம் மட்டுமே குறிக்கோளான தனியார் நிறுவனங்கள் கடற்கொள்ளைக்காரர்களைப்போல சூறையாடத் துவங்கிவிடுகின்றனர். இந்தியாவில் அப்படி ஒரு கட்டுப்பாடான அரசு இயந்திரம் இருக்கிறதா என்பது பெரும் கேள்வி. இதில் இன்னொரு உண்மையையும் நாம் பார்க்க வேண்டும். இதுவரை அணுசக்தித் துறையில் இலாபம் பார்த்து வந்த சீமன்ஸ் எனும் தனியார் நிறுவனம் இனிமேல் அந்தத் துறையில் தான் செயல்படப் போவதில்லை என அறிவித்துள்ளது. இலாபத்தை விட மனித இனத்தின் மீது அது காட்டியிருக்கும் அக்கறை பாராட்டத் தகுந்தது. ஆனால் நம் அரசோ பழைய அணுசக்தி தயாரிப்பு முறைகளை நம் தலையில் கட்டிக்கொண்டிருக்கிறது.</p>
<p>நம் தேவையில் வெறும் 2.7% மின்சாரத்தைத் தயாரிக்கும் அணு உலைகளினால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். இவற்றுக்குப் பதிலாக மாற்று மின்சக்தி உற்பத்தியை இந்தியா ஊக்குவிக்கவேண்டும். நமது மின்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய பலஆலோசனைகளை பன்னாட்டு சக்தி நிறுவனம் (International Energy Agency) வழங்கியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50%க்கும்மேல் வீணாக்கிவிடுகிறது என்கின்றன ஆய்வுகள். இதில் தேவயற்ற மானியங்களும், ஊழல்வழி இலவச மின்சாரம் பெறுவதும் உள்ளது. ஆக நாம் நமது மின்சார விநியோகத் திறனை மேம்படுத்துவது முதலில் அவசியம். ஆனால் அது குறித்து இங்கே யாரும் திட்டமிடுவதாகத் தெரியவில்லை.ஒரே ப்ராஜெக்டில் அதிக இலாபம் பார்க்கலாம் என்கிற அரசியல்தானே இது? IEA முன்வைக்கும் ஆலோசனைகளில் மிக முக்கியமானது ஒவ்வொருபகுதிக்குமான மின்சாரத் தேவைகளை அந்தந்த பகுதிகளிலேயே உற்பத்தி செய்ய முயலவேண்டுமென்பதே. தற்போதைய மாற்று மின் உற்பத்திமுறைகளைக் கொண்டு இதை நிச்சயம் சாத்தியமாக்கலாம்.</p>
<p>இந்தியா தன் மின்சக்தித் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள ஐ.இ.ஏ முன்வைக்கும் சில முக்கியப் பரிந்துரைகளைப் பார்ப்போம்.</p>
<p>■மின்சக்தி தயாரிப்பை பயன்பாட்டிடத்துக்கு அருகில் கொண்டு செல்வது. இதன்மூலம் சிறியதாக பல திட்டங்களைச்செய்து அந்தந்த பகுதிகளின் வேலைவாய்ப்பையும் பெருக்க முடியும்.<br />
■மின்சக்தி மானியங்கள் அதற்குத் தகுதியான மக்களுக்கு மட்டும் வழங்கப்படவேண்டும்.<br />
■மின் வினியோகம் முறைப்படுத்தப்பட்டு அதனால் ஏற்படும் பெரும் இழப்பைத் தவிர்க்க வேண்டும்.<br />
■மின்சக்தி திருடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்.<br />
■சூரிய சக்திமூலம் வீட்டுத் தேவைகளுக்கு மின்சக்தி தயாரிப்பு பரவலாக்கப்படவேண்டும்.<br />
காற்றாலை மூலம் மின்சக்தி தயாரிப்பில் இந்தியா முதலிடத்திலுள்ளது. ஆண்டு முழுவதும் சூரிய ஒளி விழும் பகுதிகள் இந்தியாவில் ஏராளமாயக உள்ளன. எந்தத் தீங்கும் விளைவிக்காத இவற்றைக் கொண்டு மின்சக்தியை உருவாக்குவதை தவிர்த்துவிட்டு தலைமுறைகள் தாண்டி பேராபத்துக்களை உருவாக்கும் அணு ஆலைகளை அமைக்க நம் அரசுகள் முடிவெடுப்பதன் பின்னணியில் ஒரே ஒரு மனநிலைதான்தென்படுகிறது. அது மக்களின் உயிரையோ, வாழ்க்கை தரத்தையோ கிஞ்சித்தும் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை.</p>
<p>கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு எதிராக டாக்டர் உதயகுமார் முன்வைத்திருக்கும் 13 முக்கிய கருத்துக்கள் இவை</p>
<p>1.கூடங்குளம் அணு உலைகள் அமைக்க ஜனநாயக முறைகள் கையாளப்படவில்லை. அணு உலையினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்களோ, பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த திட்டங்களோ தீட்டப்படவில்லை அல்லது அவை மக்கள் பார்வைக்குத் தரப்படவில்லை.<br />
2.தமிழக அரசு உலைக்கும் 2முதல் 5 கி,மீ வரை உள்ள இடங்கள் மக்கள் வாழத் தகுதியற்றவையாக வரையறுத்துள்ளது.( G.O. 828, 29.4.1991 – Public Works Department). ஆனால் கூடங்குளம் அதிகாரிகள் மக்களிடம் வாய்மொழியாக அப்படி எதுவும் இல்லை என்று தன்னிச்சையாக பதிலளிக்கிறார்கள். இது அணு உலை ஆரம்பித்த பின்னர் தங்கள் வாழ்விடங்களிடமிருந்து மக்களை அப்புறப்படுத்தும் என்னும் பயத்தை அதிகப்படுத்துகிறது.<br />
3.உலைக்கு 30 கி.மீ சுற்றளவில் பத்து இலட்சம் மக்கள் வசித்துவருகின்றனர். விபத்து நேர்கையில் இந்தப் பெரிய மக்கள்திரளைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்தியமற்றது.<br />
4.அணு உலைகளை குளிரூட்ட பயன்படுத்தப்படும் தண்ணீர் கடலுக்குள் செலுத்தப்படவுள்ளது. அது கடல் நீரிலும், மீன்களிலும் கதிரியக்கத்தைசெலுத்தும். மீனவர்கள் மேலும் ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள். கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கும் (கன்னியாகுமரி, முட்டம் போன்ற அழகிய கடற்கரை சுற்றுலாத் தலங்கள் நேரடியாக பாதிக்கப்படும். குளச்சல் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களும் அதே கடல்வழியேயே அடையக்கூடியவை).<br />
5.ஏற்கெனவே தோரியம் பிரித்தெடுக்கும் (மணவாளக்குறிச்சி மணல் கம்பெனி) பணியில் இருந்தவர்களில் பலரும் புற்று நோயால்அவதிப்படுகின்றனர். இன்னொரு சோகம் இங்கே வேண்டாம்.<br />
6. கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டுமானங்களின் தரங்கள் அங்கே வேலைபார்த்தவர்களாலேயே தரமற்றவை என்று கணக்கிடப்பட்டுள்ளன. (இவை வட இந்திய ஒப்பந்ததாரர்களால் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்).<br />
7.அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் காட்டிலாகா அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூடங்குளத்தில் 3-6 அணு உலைகளுக்கு அனுமதி மறுத்துள்ளார்.ஆக 1-2ம் சூழலுக்கு பாதுகாப்பானதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.<br />
8.பலரும் இந்தப் பகுதியில் எந்த இயற்கை சீற்றமும் வராது என தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு அது எப்படி நிச்சயமாகத் தெரியும்? 2004ல் இதேஅணு உலையின் கட்டுமானங்கள் சுனாமியால் இடிக்கப்பட்டன. மார்ச்19, 2006ல் இங்கே நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12, 2011ல் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (ஃபுக்குஷிமாவில் இயற்கை சீர்றம் குறித்த இத்தகைய மேம்போக்கான நம்பிக்கைகள் திட்டத் தோல்விகளை உருவாக்கியுள்ளதை சைன்ஸ் பத்திரிகை பதிவு செய்கிறது. உண்மையில் உலகின் எந்த பகுதியில் என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் குறிக்கும் எந்த அறிவியலும் உருவாக்கப்படவில்லை).<br />
9.இந்தியப் பிரதமரே நம் நாட்டின் அனுசக்தி ஆலைகள் தீவிரவாதிகளின் டார்கெட்டாக உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.<br />
10.ரஷ்ய நிறுவனத்துடன் விபத்து உதவித்தொகை வழங்குவது குறித்த ஒப்பந்தங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ரஷ்யா தனக்கும் இந்தியஅரசுக்கும் 2008ல் ஏற்பட்ட இரகசிய உடன்படிக்கை தற்போதைய NPCIL சட்டத்தை மிஞ்சியதாக வாதாடிக்கொண்டிருக்கிறது.<br />
11.கூடங்குளம் அணு ஆலையின் கட்டுமானச் செலவு குறித்து பல்வேறு முரணான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. அவை இந்த திட்டம் யாருடைய இலாபத்துக்கு செய்யப்படுகின்றன எனும் கேள்வியை எழுப்புகின்றன.<br />
12.ஃபுக்குஷிமாவுக்குப் பிறகு உலக அளவில் அணுசக்தி குறித்த மாற்று அணுகுமுறைகள் உருவாகியுள்ளன. அமெரிக்காவோ ரஷ்யாவோ கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் எந்த புதிய அணு ஆலையையும் உருவாக்கவில்லை. இந்தியாவிலேயே மேற்கு வங்கமும், கேரள மாநிலமும் அணுசக்திக்கு எதிரான முடிவுகளை எடுத்துள்ளன.<br />
13.இந்திய அரசு அணு சக்தி மீது மதிகெட்ட ஈடுபாடுகொண்டுள்ளது. அதன் அணுத் திட்டங்களும் செயல்பாடுகளும் அதீத இரகசியத்தன்மையுள்ளவை. மக்களின் குற்றச்சாட்டுகளை கேட்கவே மறுக்கிறது அரசு. இதெல்லாம் உண்மையில் இந்திய மக்களின் இலாபத்துக்காகவாஅல்லது அமெரிக்க, ரஷ்ய, பிரெஞ்சு நாட்டு கம்பெனிகளின் இலாபங்களுக்கா? நம் நாட்டின் (இன்றைய) நாளைய மக்களின் உயிரைவிடவும் இலாபம் மேலானதா?<br />
இன்னும் சில முக்கியமான காரணங்களும் உள்ளன. கூடங்குளத்தில் பயன்படுத்தப்படவிருப்பது உலகில் முதன்முதலாக உருவாக்கப்பட்டஅணுமின் உற்பத்தி தொழில்நுட்பங்களில் ஒன்றில் உருவான கலன்கள். 1969 வாக்கில் இந்தத் தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாற்பது வருடங்கள் தாண்டிய தொழில்நுட்பத்தை ஏன் நம் அரசு இத்தனை செலவில் இந்தியாவில் நிர்மாணிக்கிறது? அதுவும் ரஷ்யாவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பழசாகிப்போன உபகரணங்களை? அதீத வெப்பம் கொண்டியங்கும் கொதிகலன்களைக் குளிரூட்டவும் மின்சார உற்பத்திக்கு தேவைப்படும் நீருக்காகவும் தாமிரபரணி பேச்சிப்பாறை அணை ஆகிய விவசாய நீராதாரங்களிலிருந்து தண்ணீர் ஆலைக்குத் திருப்பிவிடப்படுகிறது. நீர்வளம் குறைந்துபோகும் நிலை வந்தால் விவசாயத்துக்கல்ல, அணு ஆலைக்கே முதன்மை அளிக்கப்படும். வீட்டில் விளக்கெரியும் ஆனால் அடுப்பெரியாது!</p>
<p>அணுசக்தி நம் நாட்டின் முதன்மையான தேர்வாக இருக்கக் கூடாது. மாற்று மின்சக்தி தொழில்நுட்பங்கள் மிக விரைவாக உருவாகிவரும் இந்தக் காலகட்டத்தில் இது ஒரு முட்டாள்தனமான தேர்வு. அணுசக்தி உற்பத்தி மக்கள் நெருக்கமே இல்லாத இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். அதுவும் இயன்றவரை தவிர்க்கப்படவேண்டும். ஃபுக்குஷிமாவுக்குப் பின் நாம் நமது அணுசக்தி திட்டங்களை சீர்தூக்கி சரி செய்ய வேண்டும். நம்அணுசக்தி ஆலைகளின் பாதுகாப்பு தர நிலைகளை உலகளாவிய தன்னார்வ நிறுவனங்களைக் கொன்டு மதிப்பிட்டு மக்களுக்கு அறிவிக்கவேண்டும். ஒரு வெளிப்படையான அணு சக்தி அணுகுமுறை நமக்கு உடனடியாகத் தேவை.</p>
<p>கூடங்குளத்தை பொறுத்தவரை அங்கே அணு உலை அமைப்பது மாற்றியமைக்கப்பட்டு அதை மாற்று மின் உற்பத்தி நிலையமாகவோ கடலலையிலிருந்து மின்சாரம் உருவாக்கும் திட்டமாகவோ மாற்றப்படவேண்டும். அல்லது வேறு மாற்றுத் திட்டங்களுக்காக அதை பயன்படுத்தவேண்டும். சென்னை தலைமைச் செயலகக் கட்டடம் மருத்துவமனையாக மாறப்போவதில்லையா? அதுபோல்.</p>
<p>கூடங்குளத்தில் நடப்பது வெறும் கடற்கரையோரத்து மீனவர்களுக்கு ஆதரவான போராட்டமல்ல. அது இந்திய அளவில் அணுசக்தி அமைப்புகளின் மெத்தனத்தையும் இரகசியத் தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் எதிர்த்து நடத்தப்படும் போராட்டமே. இதற்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பது மிக மிக அவசியமாகும்.</p>
<p>சிறில் அலெக்ஸ்</p>
<p>0</p>
<p>Reference and Sources:<br />
<a href="http://www.peacejam.org/news/Stand-With-Nobel-Laureates-Against-Nuclear-Power-603.aspx">http://www.peacejam.org/news/Stand-With-Nobel-Laureates-Against-Nuclear-Power-603.aspx</a><br />
<a href="http://www.slideshare.net/icpgamesa/elecindia2002">http://www.slideshare.net/icpgamesa/elecindia2002</a><br />
<a href="http://www.iea.org/">http://www.iea.org/</a><br />
<a href="http://www.kalpakkam.net/2011/09/thirteen-reasons-why-we-do-not-want.html">http://www.kalpakkam.net/2011/09/thirteen-reasons-why-we-do-not-want.html</a><br />
<a href="http://www.kalpakkam.net/2011/07/nuclear-or-broke-indias-obsession-with.html">http://www.kalpakkam.net/2011/07/nuclear-or-broke-indias-obsession-with.html</a><br />
<a href="http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp">http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp</a><br />
<a href="http://www.guardian.co.uk/world/2011/sep/09/fukushima-japan-nuclear-disaster-aftermath">http://www.guardian.co.uk/world/2011/sep/09/fukushima-japan-nuclear-disaster-aftermath</a><br />
<a href="http://www.eai.in/ref/ae/wte/wte.html">http://www.eai.in/ref/ae/wte/wte.html</a><br />
<a href="http://english.aljazeera.net/indepth/features/2011/06/201161664828302638.html">http://english.aljazeera.net/indepth/features/2011/06/201161664828302638.html</a><br />
<a href="http://indiainperil.blogspot.com/2009/05/how-electricity-wastage-is-officially.html">http://indiainperil.blogspot.com/2009/05/how-electricity-wastage-is-officially.html</a></p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=611&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&#038;p=611</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை</title>
		<link>http://cyrilalex.com/?p=608</link>
		<comments>http://cyrilalex.com/?p=608#comments</comments>
		<pubDate>Tue, 20 Sep 2011 15:53:06 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தொழில் நுட்பம்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இயற்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=608</guid>
		<description><![CDATA[கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம். ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1 ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2]]></description>
			<content:encoded><![CDATA[<p>கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம்.</p>
<h2><a title="Permanent Link to ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1" rel="bookmark" href="http://www.tamilpaper.net/?p=4108">ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1</a></h2>
<h2><a title="Permanent Link to ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2" rel="bookmark" href="http://www.tamilpaper.net/?p=4115">ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2</a></h2>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=608&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&#038;p=608</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எவன் இவன்?</title>
		<link>http://cyrilalex.com/?p=604</link>
		<comments>http://cyrilalex.com/?p=604#comments</comments>
		<pubDate>Sat, 18 Jun 2011 17:38:01 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[திரை விமர்சனம்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=604</guid>
		<description><![CDATA[அமெரிக்காவிலிருந்து வரும்போது என் மகனின் கெலைடோஸ்கோப் ஒன்றையும் எடுத்து வந்தோம். வண்ணத் தகர வெளிப்புறம் கொண்டது. கெலைடோஸ்கோப்கள் முதலில் பார்க்கும்போது அற்புதமான அனுபவத்தை தருகின்றன. வடிவங்கள் நம் கண்முன்பே உருமாறி உருமாறி ஆச்சரியமூட்டுகின்றன. உள்ளே நாம் காண்பவை கட்டுக்கோப்பான கணித வடிவங்கள், ஆனாலும் குழப்பமும் அழகும் கொண்டவை. பார்வைக்கும், அறிவுக்கும் அகத்தூண்டல்களைத் தருகிறது ஒரு கெலைடோஸ்கோப். நாட்கள் ஆக ஆக, கெலைடோஸ்கோப்பை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது வண்ண வடிவங்களைத் தாண்டி கெலைடோஸ்கோப்பின் உள்ளே கிடக்கும் பொருட்கள் ஒவ்வொன்றாகத் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவிலிருந்து வரும்போது என் மகனின் கெலைடோஸ்கோப் ஒன்றையும் எடுத்து வந்தோம். வண்ணத் தகர வெளிப்புறம் கொண்டது. கெலைடோஸ்கோப்கள் முதலில் பார்க்கும்போது அற்புதமான அனுபவத்தை தருகின்றன. வடிவங்கள் நம் கண்முன்பே உருமாறி உருமாறி ஆச்சரியமூட்டுகின்றன. உள்ளே நாம் காண்பவை கட்டுக்கோப்பான கணித வடிவங்கள், ஆனாலும் குழப்பமும் அழகும் கொண்டவை. பார்வைக்கும், அறிவுக்கும் அகத்தூண்டல்களைத் தருகிறது ஒரு கெலைடோஸ்கோப்.</p>
<p>நாட்கள் ஆக ஆக, கெலைடோஸ்கோப்பை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது வண்ண வடிவங்களைத் தாண்டி கெலைடோஸ்கோப்பின் உள்ளே கிடக்கும் பொருட்கள் ஒவ்வொன்றாகத் தென்பட ஆரம்பிக்கின்றன. சில கண்ணாடி வலையல் துண்டுகள், சில பாசி மணி முத்துக்கள், இன்னும் கற்பனைக்கேற்றபடி இடப்பட்ட பொருட்கள். இந்தப் பார்வை கிடைக்க கிடைக்க கெலைடோஸ்கோப் தனது ஆச்சர்யமூட்டும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடுகிறது. பாலாவின் அவன் இவன் இப்படி ஒரு பழக்கப்பட்ட கெலைடோஸ்கோப் அனுபவத்தையே தந்தது.</p>
<p>படத்தின் முதல் பகுதி பாலா எடுத்த ஒரு கிரேசி மோகன் நாடகம் போல ஓடிக்கொண்டிருக்கிறது. வழக்கமான பாலாத்தனமான நீளமான காட்சிகள் இந்த படத்தில் அயற்சி அளிக்கின்றன. இரண்டாம் பகுதியில் திடீரென அழையாத விருந்தாளி போல கதை வந்து புகுந்துவிடுகிறது. ஆம் கதை என்று ஒன்று அங்கேதான் ஆரம்பிக்கிறது. அதன் பின்பு பல அழுகைகளும் பற்கடிப்புகளும் தாண்டி கதை ஒரு கோரமான முடிவைச் சென்றடைந்து தன்னைத்தானே சிதைமூட்டிக் கொள்கிறது.</p>
<p>படம் துவங்குகையில் இருந்த உற்சாகம், பாலாவின் பெயர் திரையில் விழுந்தபோது எழுந்த கரகோஷங்கள், விஷாலின் அறிமுகக்காட்சிக்கெழுந்த சலசலப்புக்கள் ஒரு சில நிமிடங்களிலேயே திரையரங்கின் மூலைமுடுக்குகளில் ஒளிந்துகொண்டன. ஏதோ ஒரு கொடூரத்தின் மௌன சாட்சிகளாக பார்வையாளர்கள் அரங்கு நிறைய அமர்ந்திருந்தனர் எனலாம்.</p>
<p>என்ன குறை? முதலில் கதை. படத்தில் கதை இல்லை. அல்லது இப்படிச் சொல்லலாம் படத்தில் போதுமான அளவு கதை இல்லை. பிதாமகன் பாத்திரங்களுக்கு கோமாளி வேஷம் போட்டுவிட்டதைப்போல கதை நாயகர்கள். கதையும் அதே வண்ணத்தில் தீட்டப்பட்டிருக்கிறது. எஸ்.ரா வசனம் எழுதுவதற்குப்பதில் பாலாவுக்கு ஒரு நல்ல கதையை எழுதித் தந்திருக்கலாம்.</p>
<p>இரண்டாவது கெலைடோஸ்கோப் இஃபக்ட். நாம் பார்த்துப் பழகிப்போன பாலாவின் கதாபாத்திரங்கள், சிச்சுவேஷன்கள். தெருச்சண்டைகள், முதலாளி விசுவாசம், எக்செண்ட்ரிசிசம், கொண்டாட்டங்கள் கும்மாளங்கள்.</p>
<p>மூன்றாவது அதிமிகை நடிப்பு. (Excesive Acting) ஒவர் ஆக்டிங்கையெல்லாம் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு தேவையில்லாமல் ஓவராய் நடித்துக் கொல்கிறார்கள். விஷால் உண்மையில் சிறப்பாகச் செய்திருக்கிறார். பல இடங்களில் வியக்கவைக்கும் நடிப்பு ஆனால் எதற்காக? அவர் வழியாக எந்த ஒரு கதையும் சொல்லப்படாதபோது அவரது உழைப்பு மொத்தமும் வீண் என்றே சொல்வேன். ஆர்யாவின் தண்ணீர் தள்ளாட்டம் சகிக்க முடியவில்லை. அண்மையில் தொலைக்காட்சியில் தில்லானா மோகனம்பாள் பார்த்துக்கொண்டிருந்தேன். சிவாஜி ஒரு சபையில் முதன்முதலில் பேசுவதாக நடிப்பார். அத்தனை அற்புதமான நடிப்பு. பயமும், கூச்சமும் கலந்த உடல்மொழி. பேச்சை இடையில் விட்டு பயம் கலந்த சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு தொடர்வார். அற்புதம் அற்புதம். அடுத்த கணமே அவர்மீது கத்தி எறியப்பட்டு கீழே விழுவார் அப்படியே அவரது நடிப்பும் கீழே விழுந்து கத்திக்காயத்துடனேயே உருள் உருளென உருள ஆரம்பித்துவிடும். அவன் இவனும் இப்படியான அற்புதமானதும் அபத்தமானதுமாயான நடிப்பைக் கொண்டிருந்தது. குடித்துவிட்டுத் தள்ளாடிக் கொண்டே பேசும் நடிப்பை தயவு செய்து யாராவது மாற்றுங்கள். அத்தனை எளிதானதா அது?</p>
<p>இன்னொன்றை இங்கே சொல்லவேண்டும். அண்மையில் அழகர்சாமியின் குதிரைக்கு (நான் இன்னும் பார்க்கவில்லை) வந்த விமர்சனங்களையும் அவன் இவன் அனுபவத்தையும் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் எதார்த்த(?) கிராமிய கதைகளைச் சொல்லும் திரைமொழி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்படி பலவகை திரைமொழிகள் உண்டு. கடத்தல்காரன் படங்கள், பழிவாங்குப் படங்கள், ஹீரோ சபதத்தை வெல்லும் படங்கள், இரட்டை வேடப் படங்கள், காதல் படங்கள்(இதில் பலவகைகள்)  எனப் படங்களுக்கென ஒரு ஃபார்முலா உருவாகிவிடுகிறது. அதில் பல்வேறு கதைகளைப் யுக்திகளைப்புகுத்தி புதிய படங்கள் வந்துகொண்டிருந்தன. எழுபது எண்பதுகளில் கல்லூரி நண்பர்களின் கதைகளுக்கென ஒரு திரைமொழி உருவானது. இப்போது எதார்த்த படங்களுக்கான சூத்திரம் கைவசப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் திரைமொழியில் சொல்லப்படும் படங்கள் எல்லாமுமே சிறந்ததாக அமைந்துவிடுவதுமில்லை. கதையோ திரைக்கதையோ சரிவர அமைக்கப்படவில்லையென்றால் வெறும் எதார்த்த பாத்திரங்களோ களனோ அதிர்ச்சியூட்டல்களோ எடுபடுவதில்லை.</p>
<p>சில நேரங்களில் ஒருவரின் மோசமான படைப்பொன்றைக் காண நேர்கையில் இவர் உண்மையிலேயே இவ்வளவுதானோ என சந்தேகம் எழுந்துவிடுகிறது. ஆனால் பாலாவை அப்படி எளிதில் சொல்லிவிட முடியவில்லை. வியத்தகும் பாத்திரங்களைய்ம் கதைகளையும் கதைக் களங்களையும் உருவாக்கி நம் மனசை நிரப்பியவர். ஆனால் அவர் படங்களுக்கென ஒரு ஃபார்முலா உருவாகிவிட்டிருக்கிறது. கெலைடோஸ்கோப்பின் உட்பொருட்கள் ஒவ்வொன்றாய் புலப்பட ஆரம்பித்துவிட்டன. என் பையனின் கெலைடோஸ்கோப் உடைந்தால்தான் நான் இன்னொன்றை வாங்கிக் கொள்வேன். அப்போது மீண்டும் என் கண்கள் ஆச்சர்யங்களைக் காணத் துவங்கலாம்.</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=604&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&#038;p=604</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு கிறிஸ்துமஸ் கதை!</title>
		<link>http://cyrilalex.com/?p=591</link>
		<comments>http://cyrilalex.com/?p=591#comments</comments>
		<pubDate>Thu, 06 Jan 2011 05:19:41 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[இயேசு]]></category>
		<category><![CDATA[கடவுள்]]></category>
		<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[கிறீத்துவம்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=591</guid>
		<description><![CDATA[மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகி கசங்கியிருந்தன. மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை. கடைசியாக ஊரின் ஒதுக்குப்புறமிருந்த விடுதி ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர். சூசைக்கு அந்த விடுதியில் அறைகள் காலியாக இருந்ததைப் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><a href="http://mycatbirdseat.com/wp-content/uploads/2010/12/marry-on-donkey-and-joseph-travel-to-judia.jpg"><img class="aligncenter" title="On a donkey" src="http://mycatbirdseat.com/wp-content/uploads/2010/12/marry-on-donkey-and-joseph-travel-to-judia.jpg" alt="" width="579" height="253" /></a></p>
<p>மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகி கசங்கியிருந்தன. மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.</p>
<p>இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை. கடைசியாக ஊரின் ஒதுக்குப்புறமிருந்த விடுதி ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர். சூசைக்கு அந்த விடுதியில் அறைகள் காலியாக இருந்ததைப் போலத் தோன்றியது. கடுகடுப்பான முகத்துடன் விடுதிக் காப்பாளன் வந்து &#8216;என்ன வேண்டும்&#8217; எனக் கேட்டான். அவன் பெயர் திமோத்தி. சூசை மரியாளின் நிலையை எடுத்துச் சொல்லி &#8216;இன்றிரவே இவளுக்கு குழந்தை பிறக்கும் போலத் தோன்றுகிறது. இங்கே தங்க இடம் கிடைக்குமா?&#8217; என்றார். அவன் கழுதைமேல் படுத்திருந்த பெண்ணை ஏற இறங்க பார்த்தான். இவர்களிடம் காசும் பணமும் ஏதும் இருக்காது என்பதைப் புரிந்து கொண்டான். இன்னும் மாலையானால் ஊருக்குள் இடம்கிடைக்காதவர்கள் இங்கே வரக்கூடும் என்பதுவும் அவனுக்குத் தெரியும். &#8216;விடுதியில் இடமில்லை.&#8217;  என்று பொய் சொன்னான். அவன் மனைவி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் இரக்கப்பட்டு இவர்களுக்கு  விடுதியில் இடம் கொடுக்கச் சொல்வாள் என்று நினைத்தான்.  &#8216;நீங்கள் போய் ஏதேனும் மாட்டுத் தொழுவத்தில் இருக்கலாமே. கொஞ்சம் தள்ளிப் போனால் என் மாட்டுத் தொழுவமே உள்ளது&#8217; என்று வழிகாட்டினான்.</p>
<p>சூசை வேறு செய்வதறியாது மரியாளை அழைத்துக்கொண்டு மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றார். அன்றிரவு திமோத்தியின் விடுதி நிறைந்து வழிந்தது. மீதமானவர்களை தன் வீட்டிலேயும் தங்க வைத்து பணம் சம்பாதித்தான். வியாபார பரபரப்பில் அவன் தன் தொழுவத்தில் தங்கியிருந்தவர்களை நினைக்கவேயில்லை.</p>
<p>ஐந்து நாட்கள் கழிந்து கூட்டம் கொஞ்சமாய் குறைந்திருந்தது. மாலையில் தன் தொழுவத்துக்குச் சென்றான் திமோத்தி. அங்கே ஒரு குழந்தை படுத்திருக்கும் அளவுக்கு படுக்கை ஒன்று செய்யப்பட்டிருந்தது. பலகைகளையும் மரத் துண்டுகளையும்  கொண்டு அந்த படுக்கையின் அடிப்பகுதி உருவாக்கப்பட்டிருந்தது அதன் மேல் வைக்கோல் போடப்பட்டிருந்தது. அந்தப் படுக்கையின் நேர்த்தியை அவன் வியந்துகொண்டிருக்கையில் ஆடு மேய்ப்பர்களின் கூட்டம் ஒன்று தொழுவத்திற்கு வந்தது.</p>
<p>&#8216;என்ன வேண்டும்  உங்களுக்கு?&#8217; என்றான் திமோத்தி. &#8216;இங்கே ஒரு குழந்தை பிறந்திருந்ததே.&#8217; என்றான் மேய்ப்பர் கூட்டத்தின் தலைவன். &#8216;இருக்கலாம். அது உங்களுக்கெப்படித் தெரியும்?&#8217; என்று கேட்டான். மேய்ப்பர் தலைவன் சற்று<a href="http://libertypundits.net/wp-content/uploads/2010/12/nativity.jpg"></a> தயக்கத்துடன் &#8216;ஐயா. அது ஒரு தெய்வீகக் குழந்தை. அது பிறந்த விஷயத்தை தேவ தூதர் எங்களுக்குச் சொன்னார். நாங்கள் ஏற்கனவே வந்து அவரைத் தொழுதுவிட்டுச் சென்றோம்.&#8217; என்றார்.</p>
<p>திமோத்தி சிரித்தான்.&#8217;தெய்வக் குழந்தையா? மாட்டுத் தொழுவத்திலா? என்னையா உளறுகிறீர்கள். நீங்கள் கனவேதும் கண்டீர்களா? தெய்வமாவது தொழுவத்தில் பிறப்பதாவது? எங்கேயாவது இடையர்களுக்கு தேவ தூதன் தோன்<a href="http://www.turnbacktogod.com/wp-content/uploads/2008/11/the-nativity-story-08.jpg"><img class="alignright" title="Nativity" src="http://www.turnbacktogod.com/wp-content/uploads/2008/11/the-nativity-story-08.jpg" alt="" width="248" height="160" /></a>றுவதுண்டா? இங்கே குழந்தை பிறந்தது உண்மைதான் ஆனால் அது ஒரு சாதாரணக் குழந்தைதான். அவர்கள் நேற்றே இங்கிருந்து கிளம்பியிருக்க வேண்டும்.&#8217; என்றான்.</p>
<p>மேய்ப்பர்கள் வந்த வழியே திரும்ப திமோத்தியின் மனதில் சந்தேகம் எழுந்தது. ஒரு வேளை இவர்கள் சொல்வது சரிதானோ? ஏதோ மூன்று ராஜாக்கள் வந்தனர் என்று ஊரில் பேசிக் கொண்டது உண்மையோ என்று எண்ணினான். நம் தொழுவத்தில் இந்த மாட்டுக் குடிசையில் பிறந்த குழந்தை தெய்வக் குழந்தையா? நிச்சயம் இருக்காது. தங்குவதற்க்குக்கூட இடமில்லாமல், பணமில்லாமல் பிறந்த ஏழைக் குழந்தை தெய்வக் குழந்தையா. என்று மறு எண்ணம் தோன்றியது. தெய்வக் குழந்தையானால் தங்கிப் போனதுக்கு காசு தந்துவிட்டுச் சென்றிருக்கலாமே என்று நினத்து சிரித்தான் திமோத்தி.</p>
<p>அவன் திரும்பி நடக்க நினைக்கையில் மீண்டும் அந்த படுக்கையை பார்த்தான். அது இப்போது மினுங்கிக்கொண்டிருந்தது. அருகே சென்றான். படுக்கையிலிருந்த வைக்கோல் புல் ஒன்றை கையில் எடுத்தான். அது தங்கப் புல்லாகியிருந்தது. படுக்கையில் இருந்த அத்தனை புற்களும் தங்கமாகி மின்னிக் கொண்டிருந்தன. அவன் மனது மகிழ்ச்சியில் துள்ளியது. ஒரு கணம் திணறிவிட்டான். ஒன்று விடாமல் எல்லா தங்கப் புற்களையும் அள்ளிக்கொண்டான். கடவுளென்றால் இந்தத் தொழுவத்திலிருக்கும் எல்லா புற்களும் தங்கமாயிருக்க முடியுமே. என்று நினைத்தான் அப்படியே அவையெல்லாம் தங்கமாயின. இன்னும் மகிழ்ந்தான். கொண்டாடினான். சந்தோஷத்தில் துள்ளினான். இவன் துள்ளலைக் கண்டு ஆடுகள் மிரண்டு கத்தின.</p>
<p>குதித்து ஓய்ந்த பொழுதில் அவன் மனம் வருந்தலானான். ஒரு தெய்வக் குழந்தைக்கு தன் வீட்டில் இடம் தராமல் விட்டுவிட்டோமே? இந்த ஆடும் மாடும் கழுதையும் கண்ட தெய்வீகக் காட்சியை தான் காண கொடுத்துவைக்கவில்லையே? தன்னைத் தேடி வந்த தெய்வத்தை திருப்பி அனுப்பிவிட்டோமே என்று அங்கலாய்த்தான். அதுமுதல் அந்தக்  குழந்தையை தேடத் துவங்கினான். தன் கையிலிருந்த தங்கத்தை விற்றுத் தேடினான். பல இடங்களுக்கும் சுற்றித் திர்ந்து தேடினான்.</p>
<p>பல வருடங்கள் கழித்து அவன் கையிலிருந்த கடைசித் தங்கப் புல்லும் தீர்ந்துபோனது. கடவுள் தன் அருகாமையில் வந்திருந்தும் காணமுடியாமல் போனதை எண்ணி வருந்தி கண்ணீர் விட்டழுதான். &#8216;இனியும் தேட சக்தியில்லை. பயனுமில்லை. வீடுபோய் சேர்வோம்&#8217; என்றெண்ணினான். கையிலிருந்த கடைசிக் காசை ஒரு குருட்டு பிச்சைக் காரனின் சட்டியிலிட்டான்.</p>
<p><a href="http://www.hesperianazarene.org/sitebuildercontent/sitebuilderpictures/ThreeCrosses.jpg"><img class="alignleft" title="Crosses" src="http://www.hesperianazarene.org/sitebuildercontent/sitebuilderpictures/ThreeCrosses.jpg" alt="" width="238" height="133" /></a>அப்போது வானம் கறுத்து இடி இடித்து சூழல் மாறியது. காற்று சுழன்றடித்தது. மக்களெல்லாம் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர். தூரத்தில் மலை மீது மூன்று சிலுவைகள் நின்று கொண்டிருப்பதைக் கண்டான் திமோத்தி. மலை நோக்கி நடக்கலானான்.</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=591&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&#038;p=591</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
		</item>
		<item>
		<title>நாஞ்சில் பாராட்டு விழா!</title>
		<link>http://cyrilalex.com/?p=585</link>
		<comments>http://cyrilalex.com/?p=585#comments</comments>
		<pubDate>Thu, 30 Dec 2010 11:20:31 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=585</guid>
		<description><![CDATA[எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தது ஊட்டி இலக்கிய சந்திப்பின் போது. &#8216;உங்கள் முட்டம் படித்தேன்&#8217; என்பது அவரின் முதல் வாக்கியமாயிருந்தது. அவர் எத்தகைய ஆர்வத்துடன் அந்த புத்தகத்தை கையில் எடுத்து படித்திருக்கக் கூடும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த ஆர்வத்தை ஒரு சிறு அளவேனும் நிவர்த்தி செய்ய முடிந்திருந்தால் அது ஒரு பேறுதான் என்று நினைத்திருந்தேன். அவரோ நான் எப்படியோ ஒரு விபத்தைப்போல எழுதி முடித்துவிட்ட அந்த மெலிந்த புத்தகத்தை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தது ஊட்டி இலக்கிய சந்திப்பின் போது. &#8216;உங்கள் முட்டம் படித்தேன்&#8217; என்பது அவரின் முதல் வாக்கியமாயிருந்தது. அவர் எத்தகைய ஆர்வத்துடன் அந்த புத்தகத்தை கையில் எடுத்து படித்திருக்கக் கூடும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த ஆர்வத்தை ஒரு சிறு அளவேனும் நிவர்த்தி செய்ய முடிந்திருந்தால் அது ஒரு பேறுதான் என்று நினைத்திருந்தேன். அவரோ நான் எப்படியோ ஒரு விபத்தைப்போல எழுதி முடித்துவிட்ட அந்த மெலிந்த புத்தகத்தை பலருக்கும் படிக்கச் சொல்லி பரிந்துரைத்திருந்தார் என்பதைக் கேள்விப்பட்டபோது அவரோடு இன்னும் நெருக்கமாக உணர்ந்தேன்.</p>
<p>கோவையில் மீண்டும் சந்தித்தபோது ஒரு நெருங்கிய நண்பரை சந்திப்பது போன்றே இருந்தது. கோவை விழாவில் அவர் விருது வழங்குபவர்களை விளாசிவிட்டு பின்பு என்னிடம் &#8216;நான் பேசி நீங்க கேட்டதில்லையே?&#8217; என்றபோது அவருக்கு பதில் என்ன சொல்வது? நான் படித்தவரை தன் மனதில் பட்டதை எந்த மழுப்பலும் இன்றி கொஞ்சம் தென் தமிழகக் குசும்பை மட்டுமே துணைக்கு சேர்த்துக் கொண்டு எழுதும் ஒரு நேர்மையான எழுத்தாளர் அவர். எல்லோரிடமும் பாரபட்சமின்றி சிரித்துப் பேசிப் பழகும் எளிய மனதுடையவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். எளிய மனத்தோர் பேறுபெற்றோர் இல்லையா?</p>
<p>கோவையில் அவர் பேசிய பேச்சைக் கேட்டபின்பு இவருக்கு இனிமேல் எந்த விருதும் கிடைக்காமல் போகப் போகிறது என்றே தோன்றியது. ஆனால் மறுநாளே சாகித்திய அக்காதாமி விருதை அறிவித்து கௌரவம் தேடிக் கொண்டது.</p>
<p>இலையில் துவங்கிய தமிழ் இலக்கியம் இன்று இணையத்தில் அரங்கேறியிருக்கிறது. சிறந்த இளையதலைமுறை வாசகர் கூட்டம் ஒன்றை இணையம் தமிழ் இலக்கியத்துக்கு உருவாக்கிதந்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது. வரும் திங்கட்கிழமை சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு நடக்கவிருக்கும் பாராட்டு விழாவும் இளைய இலக்கிய வாசகர்களால் நடத்தப்படுகிற ஒன்றே. இதை நடத்துபவர்களின் சராசரி வயது 35கூட இல்லை. இளைய தலைமுறையினரோடு நெருங்கிப் பழகவும் உரையாடவும் எந்த தயக்கமும் இல்லாத மூத்த தலைமுறையினர் மிகச் சிலரே. அவர்களில் சிலரை சந்திக்கவும் உரையாடவுமான வாய்ப்பாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை. விழாவின் விபரங்கள் கீழேயுள்ளன.</p>
<p>நண்பர்கள் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்று என் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.</p>
<p>நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா</p>
<p><strong>நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30</strong>.</p>
<p>வரவேற்புரை : சிறில் அலெக்ஸ் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்</p>
<p>தலைமை : சிறுகதையாசிரியர் ராஜேந்திரசோழன்</p>
<p>நாஞ்சில்நாடனின் ”கான்சாகிப்” புத்தகம்</p>
<p>வெளியிடுபவர் : இயக்குனர் பாலுமகேந்திரா</p>
<p>புத்தகம் பெற்றுக்கொள்பவர் : பாரதி மணி</p>
<p>இடம் : ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு – சென்னை (சோழா</p>
<p>ஹோட்டல் பின்புறம்)</p>
<p>வாழ்த்துரை :</p>
<p>இயக்குனர் பாலா</p>
<p>எழுத்தாளர் ஞாநி</p>
<p>ராஜகோபால் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்</p>
<p>எழுத்தாளர் கண்மணி குணசேகரன்</p>
<p>எழுத்தாளார் சு.வெங்கடேசன்</p>
<p>எழுத்தாளர் பவா செல்லத்துரை</p>
<p>எழுத்தாளர் ஜெயமோகன்</p>
<p>ஏற்புரை – நாஞ்சில்நாடன்</p>
<p>நன்றியுரை – தனசேகர் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.</p>
<p>தொடர்புக்கு : +9194421 10123 vishnupuram.vattam@gmail.com<img class="aligncenter" title="Babjuk Invite" src="http://lh6.ggpht.com/_t6btDkGrddc/TRmslc8LTBI/AAAAAAAAAtY/IGrMB5fUTM8/s512/Nanjil%20invi%20new%20correction.jpg" alt="" width="361" height="512" /></p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=585&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&#038;p=585</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
	</channel>
</rss>
