<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தேன்/cyrilalex.com</title>
	<atom:link href="http://cyrilalex.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://cyrilalex.com</link>
	<description>www.cyrilalex.com</description>
	<lastBuildDate>Sat, 04 Sep 2010 06:25:14 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>டி மெலோ கதைகள் &#8211; 4</title>
		<link>http://cyrilalex.com/?p=555</link>
		<comments>http://cyrilalex.com/?p=555#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:25:14 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[ஆளுமை]]></category>
		<category><![CDATA[கடவுள்]]></category>
		<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[கிறீத்துவம்]]></category>
		<category><![CDATA[மதம்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=555</guid>
		<description><![CDATA[ டி மெலோ கதைகள் &#8211; 3 கழுகுக் குஞ்சு  ஒரு விவசாயி ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தார். கொண்டுவந்து அடைகாக்கும் கோழியின் கீழ் வைத்தார். கழுகுக் குஞ்சு முட்டையை உடைத்து வெளிவந்தது. தன் &#8216;சகோதர&#8217; கோழிகளைப்போலவே அதுவும் வளர ஆரம்பித்தது. தரையில் புழுக்களைத் தின்றது, கொக்கரித்தது, சிறகை அடித்து சிறிது தூரம் பறந்து வீழ்ந்தது. வருடங்கள் கழிந்தன.  ஒரு நாள் வளர்ந்துவிட்ட அந்தக் கழுகுக் குஞ்சு வானத்தில் ஒரு பிரம்மாண்டமான பறவையை பார்த்தது. வியப்பில் அந்தக் கழுகுக் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://cyrilalex.com/?p=552"> டி மெலோ கதைகள் &#8211; 3</a></p>
<p><strong>கழுகுக் குஞ்சு</strong></p>
<p> ஒரு விவசாயி ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தார். கொண்டுவந்து அடைகாக்கும் கோழியின் கீழ் வைத்தார். கழுகுக் குஞ்சு முட்டையை உடைத்து வெளிவந்தது. தன் &#8216;சகோதர&#8217; கோழிகளைப்போலவே அதுவும் வளர ஆரம்பித்தது. தரையில் புழுக்களைத் தின்றது, கொக்கரித்தது, சிறகை அடித்து சிறிது தூரம் பறந்து வீழ்ந்தது.</p>
<p>வருடங்கள் கழிந்தன.</p>
<p> ஒரு நாள் வளர்ந்துவிட்ட அந்தக் கழுகுக் குஞ்சு வானத்தில் ஒரு பிரம்மாண்டமான பறவையை பார்த்தது. வியப்பில் அந்தக் கழுகுக் குஞ்சு கேட்டது, &#8220;அது என்ன?&#8221; என்று.</p>
<p> &#8221;அது கழுகு. பறவைகளுக்கெல்லாம் தலைவன். அது ஆகாயதை சொந்தமாக்கியது. நாம் இங்கே தரையில்தான் வாழவேண்டும்.&#8221; எனக் கிடைத்தது பதில்</p>
<p>அந்தக் கழுகுக் குஞ்சும் கோழியாகவே வாழ்ந்து மடிந்தது.</p>
<p><strong>அடிமை</strong></p>
<p> அரிஸ்டாட்டிலின் சீடர்கள் இருவரில் ஒருவர் அரசனின் அன்பைப் பெற்று வசதியுடன் வாழ்ந்தார்.</p>
<p>இன்னொருவர் கஷ்டப்பட்டு கூழுக்கே வழியில்லாமல் இருந்தார். முன்னவர் இவரைப்பார்த்துக் கேட்டாராம்,”நீ மன்னனை அனுசரித்திருந்தால் கூழ் குடிக்கத் தேவையில்லையே’ என்று. இவர் பதிலளித்தாராம், “நீ கூழ் குடித்து வாழக் கற்றுக்கொண்டால் மன்னனை அனுசரித்திருக்கத் தேவையில்லையே.”</p>
<p><strong>ஆமை</strong></p>
<p> சீனத்து மன்னன் அந்த சன்னியாசி குறித்து கேள்விப்பட்டதிலிருந்து தன் அவையில் அவருக்கு சிறப்பு செய்து அங்கேயே அவரை வைத்துக்கொள்ள விரும்பி ஒரு குழுவை அனுப்பி வைத்தான். அந்தக் குழுவும் நெடுந்தூரம் கடந்து அந்த ஞானியிடம் வந்து சேர்ந்தனர். அவர் ஆற்றின் நடுவிலிருந்த பாறையிலிருந்துகொண்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார். வந்தவர்கள் மன்னனி செய்தியைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஞானி விழுந்து விழுந்து பைத்தியம் போல சிரித்துவிட்டுச் சொன்னாராம்.</p>
<p> “உங்கள் மன்னனின் வழிபாட்டிடத்தில் ஒரு ஆமை ஓடு இருப்பது உண்மையா?”</p>
<p> “ஆம்.”</p>
<p> “அதில் அவன் பொன்னும் வைரமும் முத்தும் பவளமும் கொட்டி வைத்து பூஜை செய்வது வழக்கமில்லையா?”</p>
<p> “ஆம்.”</p>
<p> “அதோ ஆற்றில் நீந்தி வருகிறதே ஒரு ஆமை. அது உன் மன்னனின் ஆமையின் இடத்தில் இருக்க விரும்புமா?”</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=555&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&amp;p=555</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>டி மெலோ கதைகள் &#8211; 3</title>
		<link>http://cyrilalex.com/?p=552</link>
		<comments>http://cyrilalex.com/?p=552#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 06:21:40 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[கடவுள்]]></category>
		<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[கிறீத்துவம்]]></category>
		<category><![CDATA[நிகழ்வு]]></category>
		<category><![CDATA[மதம்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=552</guid>
		<description><![CDATA[டி மெலோ கதைகள் - 2   வைரம்  சன்யாசி ஒரு ஊரின் எல்லையில் தங்க முடிவெடுத்து மரத்தடியில் உட்கார்ந்தார். ஊரிலிருந்து ஒருவன் ஓடி வந்தான். &#8216;வைரம் வைரம் அந்த வைரத்தைக் கொடு&#8217; என்று ஓடி வந்து சன்னியாசியைக் கேட்டான்.  &#8217;எந்த வைரம்?&#8217; என்றார் சன்னியாசி.  &#8217;நேற்று இரவில் என் கனவில் சிவன் வந்தார். வந்து உன் ஊரின் எல்லையில் ஒரு சன்னியாசி வந்து தங்குவான் அவனிடம் சென்று வைரத்தை பெற்றுக்கொள் எனச் சொன்னார்.&#8217; என்றான் அவன்.  சன்னியாசி தன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://cyrilalex.com/?p=550">டி மெலோ கதைகள் - 2  </a></p>
<p><strong>வைரம்</strong></p>
<p> சன்யாசி ஒரு ஊரின் எல்லையில் தங்க முடிவெடுத்து மரத்தடியில் உட்கார்ந்தார். ஊரிலிருந்து ஒருவன் ஓடி வந்தான். &#8216;வைரம் வைரம் அந்த வைரத்தைக் கொடு&#8217; என்று ஓடி வந்து சன்னியாசியைக் கேட்டான்.</p>
<p> &#8217;எந்த வைரம்?&#8217; என்றார் சன்னியாசி.</p>
<p> &#8217;நேற்று இரவில் என் கனவில் சிவன் வந்தார். வந்து உன் ஊரின் எல்லையில் ஒரு சன்னியாசி வந்து தங்குவான் அவனிடம் சென்று வைரத்தை பெற்றுக்கொள் எனச் சொன்னார்.&#8217; என்றான் அவன்.</p>
<p> சன்னியாசி தன் கோணிப்பைக்குள்ளிருந்து ஒரு பெரிய கல்லொன்றை எடுத்துத் தந்துவிட்டு &#8216;இதுதானா பார் நேற்று காட்டில் இதைக் கண்டெடுத்தேன்&#8217; என்றார்.</p>
<p> உலகிலேயே மிகப் பெரிய வைரக் கல் அது. ஒரு மனிதனின் தலை அளவு இருக்கும். அன்று இரவு முழுவதும் அவன் அந்தக் கல்லை வைத்து சிந்தித்துக்கொண்டே இருந்தான்.</p>
<p> அதிகாலையில் எழுந்து அந்த சன்னியாசியிடம் சென்றான். &#8216;உலகிலேயே மிகப்பெரிய இந்த வைரக்கல்லை எனக்கு எடுத்துக் கொடுக்க முடிகிறதே உன்னால். அந்த செல்வத்தை எனக்குத் தருவாயா?&#8221; என்றான்.</p>
<p><strong>நிலவைத் திருட முடியுமா?</strong></p>
<p> அந்த ஜென் குரு ஒரு மலையடிவாரத்தில் மிக வறிய நிலையில் வாழ்ந்திருந்தார். ஒரு நாள் ஒரு திருடன் வீட்டினுள் நுழைந்து அங்கே திருட ஒன்றுமில்லையே என்பதை உணர்ந்த நேரத்தில் குரு உள்ளே வந்தார். &#8220;நீ கஷ்டப்பட்டு என்னைக் காண வந்திருக்கிறாய். உன்னை வெறுங்கையாக திருப்பி அனுப்ப எனக்கு மனமில்லை இதோ என் ஆடைகளையும், என் போர்வையையும் பரிசாக எடுத்துக்கொள்.&#8217; என அவனுக்களித்தார். திருடனும் அதை விருட்டெனப் பறித்துவிட்டு ஓடி மறைந்தான்.</p>
<p> குரு தன் திண்ணையில் அம்மணமாக நிலவைப் பார்த்துக்கொண்டு அமர்ந்தார்,&#8221;பாவம். அவனுக்கு இதைக் கொடுத்திருக்க முடியாமல் போய்விட்டதே?&#8221; என வருந்தினாராம்.</p>
<p><strong>மீனவன்!</strong></p>
<p> ஒரு வியாபாரி கடலோரம் நடந்துசென்றுகொண்டிருந்தான். அங்கே ஒரு மீனவன் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். வியாபாரி அவனிடம் கேட்டான் &#8216;நீ மீன் பிடிக்கப் போகவில்லையா?&#8217; &#8216;காலையிலேயே போயிட்டு வந்துட்டேனே&#8217;</p>
<p>&#8216;இன்னொருமுறை போகலாமே&#8217;</p>
<p>&#8216;போனா?&#8217;</p>
<p>&#8216;போனா இன்னும் அதிகமா பணம் வரும்.&#8217;</p>
<p>&#8216;வந்தா?&#8217;</p>
<p>&#8216;இன்னும் போட்டெல்லாம் வச்சு நிறைய மீன் பிடிச்சு நிறைய சம்பாதிக்கலாம்.&#8217;</p>
<p>&#8216;அப்புறம்.&#8217;</p>
<p>&#8216;அப்புறம் நிம்மதியா ஓய்வெடுக்கலாம்.&#8217;</p>
<p>&#8216;இப்ப அதத்தான செஞ்சிட்டிருக்கேன்.&#8217; என்றானாம் மீனவன்.</p>
<p> <strong><em>டி.மெலோ:</em></strong><em> உங்களுக்கு என்ன வேண்டும் அளவில்லா செல்வமா? இல்லை வாழ்க்கையை அனுபவிக்கும் பக்குவமா?</em></p>
<p><strong>உறங்குவதே மேல்</strong></p>
<p> சாத்தி(சாதி) என்கிற புகழ் பெற்ற பெர்சியப் புலவர் தன்னைப் பற்றி ஒரு கதை சொல்கிறார்:</p>
<p>நான் சிறுவனாய் இருந்தபோது நான் பக்தியான பிள்ளையாக இருந்தேன். ஒருநாள் என் தந்தையுடன் இரவு விழிப்பு செபம் செய்துகொண்டிருந்தேன், மடியில் குரானோடு.</p>
<p>எங்களோடு செபித்துக்கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராகத் தூங்க ஆரம்பித்தார்கள். விரைவில் எல்லோரும் தூங்கிவிட நான் சொன்னேன் &#8220;இவர்களைப் பாருங்கள். பார்த்தால் செத்துவிட்டதைப்போல கிடக்கிறார்கள். ஒருவன்கூட செஇப்பதற்கு இல்லையே&#8221; என்று.</p>
<p>என் தந்தை சொன்னார்,&#8221;மகனே, நீ இவர்களை திட்டுவதை விட தூங்கிவிட்டிருப்பாயேயானால் எனக்கு சந்தோஷமாய் இருந்திருக்கும்&#8221;.</p>
<p><strong> </strong></p>
<p><strong>சரி செய்துவிடலாம்!</strong></p>
<p> ஒருவர் ப்ளம்பிங் வேலைக்கான பட்டப்படிப்பை முடித்திருந்தார். பட்டமளிப்பு முடிந்ததும் கல்லூரியிலிருந்து குற்றால அருவிக்கு சுற்றுலா சென்றார்கள். அவர் குற்றால அருவியை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு சொன்னார் &#8216;கஷ்டம்தான் இருந்தாலும் இத சரி செஞ்சுடலாம்.&#8217;</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=552&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&amp;p=552</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>டி மெலோ கதைகள் &#8211; 2</title>
		<link>http://cyrilalex.com/?p=550</link>
		<comments>http://cyrilalex.com/?p=550#comments</comments>
		<pubDate>Fri, 03 Sep 2010 06:17:01 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[ஆளுமை]]></category>
		<category><![CDATA[கடவுள்]]></category>
		<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[கிறீத்துவம்]]></category>
		<category><![CDATA[மதம்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=550</guid>
		<description><![CDATA[ டி மெலோ கதைகள் &#8211; 1 வாத்து சூப் முல்லா நசுருதீனின் உறவினர் ஒருவர் அவரைக் காண வந்தார். வந்தவர் ஒரு வாத்தை பரிசாகத் தந்தார். வாத்து சமைக்கப்பட்டது. அருமையான விருந்தானது.  விரைவில் பல விருந்தினர்கள் முல்லாவின் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். எல்லோரும் தன்னை வாத்து கொண்டுவந்தவரின் உறவினர் என்றனர். எல்லோருக்கும் அந்த வாத்தின் பொருட்டு விருந்தளிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்தனர்.முல்லாவும் இயன்றவரை பொறுமையாய் எல்லோருக்கும் விருந்தளித்தாராம்.  ஒரு நாள் ஒருவன் வந்து &#8220;நான் உனக்கு வாத்து தந்தவனின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://cyrilalex.com/?p=548"> டி மெலோ கதைகள் &#8211; 1</a></p>
<p><strong>வாத்து சூப்</strong></p>
<p>முல்லா நசுருதீனின் உறவினர் ஒருவர் அவரைக் காண வந்தார். வந்தவர் ஒரு வாத்தை பரிசாகத் தந்தார். வாத்து சமைக்கப்பட்டது. அருமையான விருந்தானது.</p>
<p> விரைவில் பல விருந்தினர்கள் முல்லாவின் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். எல்லோரும் தன்னை வாத்து கொண்டுவந்தவரின் உறவினர் என்றனர். எல்லோருக்கும் அந்த வாத்தின் பொருட்டு விருந்தளிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்தனர்.முல்லாவும் இயன்றவரை பொறுமையாய் எல்லோருக்கும் விருந்தளித்தாராம்.</p>
<p> ஒரு நாள் ஒருவன் வந்து &#8220;நான் உனக்கு வாத்து தந்தவனின் உறவினனின் உறவினனின் நண்பன்.&#8221; என்றானாம். முல்லா அவன் முன்பு கொதிக்கும் வென்னீரை ஒரு சூப் பாத்திரத்தில் கொண்டு தந்தாராம். &#8220;என்ன இது?&#8221; என்றான் வந்தவன்.</p>
<p> &#8221;அவர் கொண்டு வந்த வாத்தின் சூப்பினுடைய சூப்பினுடைய சூப்பினுடைய சூப் இது.&#8221; என்றாராம்.</p>
<p> <strong><em>டி மெலோ: </em></strong><em>உண்மையை உணர்ந்தவனுடைய சீடனுடைய சீடனுடைய சீடனாக இருப்பவனைப் பற்றிம் நாம் கேள்விப்படுவதில்லையா?</em></p>
<p><em>ஒரு முத்தத்தை எப்படி இன்னொருவன் வழியாக பரிமாரிக்கொள்ள முடியும்?</em></p>
<p><em> </em></p>
<p><strong>மழைக்காக வேண்டுபவன்</strong></p>
<p> ஒரு நாள் ஒரு வயோதிகர் பால்கனியில் நின்று புகைபிடித்துக்கொண்டிருந்தார். ஏதோ முடி புகைவதை அறிந்து அவர் மனைவி வெளியில் வந்தாள். நினைத்ததைப் போலவே புகைப்பவரின் தாடியில் தீ பிடித்து எரிந்துகொண்டிருந்தது. அவள் சத்தம்போட்டாள், &#8220;உங்கள் தாடி எரிந்துகொண்டிருக்கிறது.&#8221;</p>
<p> வயோதிகர் பதில் சொன்னார் &#8220;எனக்குத் தெரியும். உனக்குத் தெரியவில்லையா நான் மழைக்காக செபித்துக்கொண்டிருக்கிறேன் என்று?&#8221;</p>
<p> <em>நாம் உண்மைகளை அறிய விரும்புவதில்லை. பொய்களுக்கு மத்தியில் சுகமாக வாழ்ந்துவிடவே நினைக்கிறோம். ஏனெனில் உண்மையை அறிவது சங்கடமானது, கடினமானது. நாம் அற்புதங்களையே விரும்புகிறோம். உண்மைக்கு விலையாக நாம் நம் பாதுகாப்புணர்வை (செக்யூரிட்டி) விலையாகத் தரவேண்டும் என்கிறார் டி. மெலோ. </em></p>
<p><strong> </strong></p>
<p><strong>சீனாவில் நசுருதீன் </strong></p>
<p> நசுருதீன் சீனாவுக்குச் சென்று ஒர் குழுவைக் கூட்டி அவர்களுக்கு ஞானத்தை வழங்கினார். ஞானம் அடைந்த எவருமே திரும்பவந்து அவரது சொற்பொழிவுகளை கேட்க வரவில்லை. எழுந்து அடுத்த நாட்டுக்குச் சென்றார்.</p>
<p><strong><em> </em></strong><strong><em>டி மெலோ: </em></strong><em>குருவின் காலடியிலேயே சீடன் விழுந்து கிடப்பது அந்த குருவுக்கு பெருமையானதல்ல.</em></p>
<p><strong> </strong></p>
<p><strong>தாயத்து</strong></p>
<p> ஒரு தாய் தன் மகன் இரவு வீட்டுக்கு தாமதமாக வருவதைக் கண்டு கவலையுற்றாள். அவனை ஒழுங்கு படுத்த &#8216;இரவில் அவன் வரும் வழியில் பூதம் உள்ளது&#8217; எனச் சொல்லிவைத்தாள். அந்த மகன் வளர்ந்து பெரியவனானபோது அவனுக்கு அந்த பூதங்களின் மேல் மிகவும் பயமாக இருந்ததால் இரவில் எங்கும் செல்ல மறுத்தான். உடனே அந்த தாய் ஒரு தாயத்தைக் கட்டி இது அந்த பூதங்களிலிருந்து உன்னைக் காப்பாற்றும் என்றாள்.</p>
<p><strong> </strong><strong><em>டி. மெலோ: </em></strong><em>பிறழ் பட்ட மதம் தாயத்தை அவனுக்கு வழங்குகிறது. நல்ல மதம் பேய்கள் இல்லை என்ற உண்மையை சொல்லித்தருகிறது. </em></p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=550&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&amp;p=550</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>டி மெலோ கதைகள் &#8211; 1</title>
		<link>http://cyrilalex.com/?p=548</link>
		<comments>http://cyrilalex.com/?p=548#comments</comments>
		<pubDate>Thu, 02 Sep 2010 06:16:24 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[ஆளுமை]]></category>
		<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[கிறீத்துவம்]]></category>
		<category><![CDATA[நிகழ்வு]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=548</guid>
		<description><![CDATA[ஊட்டி சந்திப்பில் பகிர்ந்து கொண்ட சில கதைகள். பயணி  ஒரு பயணி தன் மக்களிடம் திரும்பி வந்தான். அவர்கள் அமேசான் நதியின் வனப்பினை அறிந்துகொள்வதில் ஆர்வமாயிருந்தார்கள். தன் மனதை நிறைத்த வனப் பூக்களையும், வனத்தின் இரவொலிகளையும், காட்டு விலங்கினைக் கண்டபோது கொண்ட பயத்தையும், புரண்டோடும் காட்டாற்றில் நீந்தியதையும் அவனால் ஒரு போதும் முழுமையாக வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாதே?  அவன் சொன்னான்&#8221;நீங்களே போய் பாருங்கள்&#8221; என்று. அவர்களுக்கு  வழிகாட்ட ஒரு வரைபடத்தை வரைந்து அவர்களுக்குத் தந்தான்.  எல்லோரும் அந்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஊட்டி சந்திப்பில் பகிர்ந்து கொண்ட சில கதைகள்.</p>
<p><strong>பயணி</strong></p>
<p> ஒரு பயணி தன் மக்களிடம் திரும்பி வந்தான். அவர்கள் அமேசான் நதியின் வனப்பினை அறிந்துகொள்வதில் ஆர்வமாயிருந்தார்கள். தன் மனதை நிறைத்த வனப் பூக்களையும், வனத்தின் இரவொலிகளையும், காட்டு விலங்கினைக் கண்டபோது கொண்ட பயத்தையும், புரண்டோடும் காட்டாற்றில் நீந்தியதையும் அவனால் ஒரு போதும் முழுமையாக வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாதே?<strong> </strong></p>
<p> அவன் சொன்னான்&#8221;நீங்களே போய் பாருங்கள்&#8221; என்று. அவர்களுக்கு  வழிகாட்ட ஒரு வரைபடத்தை வரைந்து அவர்களுக்குத் தந்தான்.</p>
<p> எல்லோரும் அந்த வரைபடைத்தின் மீது பாய்ந்தார்கள். ஆளுக்கொரு நகலை எடுத்துக்கொண்டார்கள். ஊரின் மத்தியில் அந்த வரைபடம் சட்டம்போட்டு வைக்கப்பட்டது. சிலர் அதை மனப்பாடம் செய்தார்கள். பலர் தங்களை அதில் வித்தகர்களாகக் கருதினார். ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லையா எங்கே அமேசான் வளைகிறதென்றும், விரிகிறதென்றும், விழுகிறதென்றும்?</p>
<p><strong> </strong></p>
<p><strong>ஆற்றுத் தண்ணீரை விற்பவன்.</strong></p>
<p>அந்த குருவின் ஒவ்வொரு சொற்பொழிவும் ஒரு குழப்பமான வாக்கியத்தோடு நிறைவுறும். ஒரு புன்னகையுடன் அவர் சொல்வார் &#8220;நான் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆற்றங்கரையில் நின்றுகொண்டு ஆற்று நீரை விற்றுக்கொண்டிருக்கிறேன்.&#8221;</p>
<p> <strong><em>டி மெலோ: </em></strong><em>நான் ஆற்று நீரை வாங்குவதிலேயே குறியாக இருந்துவிட்டேன், ஆற்றைப் பார்க்க தவறிவிட்டேன். </em></p>
<p><strong> </strong></p>
<p><strong>குருவின் பூனை</strong></p>
<p>குருவின் பூனை அவரது பூஜைக்கு இடைஞ்சலாக இருந்தது. குரு ஒவ்வொரு முறை பூஜை செய்யும்போதும் அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டி வைத்தார். குரு ஒரு நாள் இறந்துபோனார். அவரது சீடர்கள் பூஜை செய்தனர். அப்போதும் அவர்கள் அந்தப் பூனையை அந்த இடத்தில் கட்டி வைத்துவிட்டு பூஜை செய்தனர்.</p>
<p> ஒரு நாள் அந்தப் பூனை இறந்து போனது. சீடர்கள் போய் வேறொரு பூனையை வாங்கிவந்து அந்த இடத்தில் கட்டி வைத்துவிட்டு பூஜையை தொடர்ந்தனர்.</p>
<p><strong> </strong></p>
<p><strong>ஆற்றில் பூதம்</strong></p>
<p>ஒரு குரு தியானத்தில் இருக்கையில் சில சிறுவர்கள் வெளியில் சத்தம்போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை துரத்திவிட அவர்களிடம் &#8220;நம்ம ஊர் ஆற்றில் ஒரு பூதம் தீயை கக்கிக்கொண்டு நிற்கிறது. போய் பாருங்கள்&#8221; என்றார்.</p>
<p> கொஞ்ச நேரத்தில் ஊர் மூழுவதும் செய்தி பரவ ஊரார்கள் கூட்டம் கூட்டமாய் ஆற்றை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அந்த குருவும் ஆற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். அவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார் &#8220;நாந்தான் அந்தக் கதையை உருவாக்கினேன் இருந்தாலும் அது உண்மையாக இருந்துவிட்டால்?&#8221;</p>
<p> <strong><em>டி மெலோ: </em></strong><em>நாம் உருவாக்கி வைத்திருக்கும் நம்பிக்கைகளில் நமக்கு நம்பிக்கை வர சிறந்த வழி அடுத்தவரையும் நாம்பச் செய்வதுதான்.</em></p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=548&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&amp;p=548</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8216;கடலைக் காணாதவனின் அலை குறித்த குறிப்புக்கள்&#8217; &#8211; ஊட்டி சந்திப்பு</title>
		<link>http://cyrilalex.com/?p=544</link>
		<comments>http://cyrilalex.com/?p=544#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 11:58:03 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=544</guid>
		<description><![CDATA[மாபெரும் கடலொன்றிருந்தது. சிலருக்கு அந்தக் கடலில் நீந்தத் தெரிந்திருந்தது. சிலருக்கு அதில் மீன் பிடிக்கத் தெரிந்திருந்தது. சிலர் வலை கொண்டு, சிலர் தூண்டிலிட்டு. இன்னும் சிலர் அந்தக் கடலின் கரையில் நின்று இளைப்பாறிக்கொள்வர், சிலர் விளையாடி மகிழ்வர். ஆழமான, பரந்து விரிந்த, ஆபத்துக்களையும், கடின சவால்களையும், உயிரையே மாய்க்கும் சுழிகளையும் உள்ளோடைகளையும் பாறைகளையும் கொண்ட அந்த கடலில் குளித்து முத்தெடுத்து வந்தவர்கள் வெகுசிலரே. இன்னும் சிலர் அந்தக் கடலைக் குறித்து கேள்வி மட்டும் பட்டுள்ளனர். பலருக்கும் அந்தக் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மாபெரும் கடலொன்றிருந்தது. சிலருக்கு அந்தக் கடலில் நீந்தத் தெரிந்திருந்தது. சிலருக்கு அதில் மீன் பிடிக்கத் தெரிந்திருந்தது. சிலர் வலை கொண்டு, சிலர் தூண்டிலிட்டு. இன்னும் சிலர் அந்தக் கடலின் கரையில் நின்று இளைப்பாறிக்கொள்வர், சிலர் விளையாடி மகிழ்வர். ஆழமான, பரந்து விரிந்த, ஆபத்துக்களையும், கடின சவால்களையும், உயிரையே மாய்க்கும் சுழிகளையும் உள்ளோடைகளையும் பாறைகளையும் கொண்ட அந்த கடலில் குளித்து முத்தெடுத்து வந்தவர்கள் வெகுசிலரே. இன்னும் சிலர் அந்தக் கடலைக் குறித்து கேள்வி மட்டும் பட்டுள்ளனர். பலருக்கும் அந்தக் கடல் குறித்த தகவல் கூடத் தெரியாதாம்.</p>
<p>இலக்கியம் ஒரு கடல்போல எனச் சொல்வதை கொஞ்சம் விரித்தால் மேலுள்ள சித்திரம் கிட்டுகிறதில்லையா?</p>
<p>ஊட்டியில் எழுத்தாளர் ஜெயமோகனும் நண்பர்களும் நடத்திய இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்டபோது இந்த சித்திரம் இன்னும் தெளிவானது. 55பேர் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை பின்புலங்களிலிருந்து வந்தபோதும் இலக்கியம் எனும் ஒற்றைப் புள்ளியில் இணைய முடிந்தது.</p>
<p>எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் ஒவ்வொரு அமர்விலும் பங்கேற்று சிறப்பித்தனர்.</p>
<p>முதல் நாள் நண்பர் ஒருவர் &#8216;நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்&#8217; என்ற பாடலை அழகாகப் பாடினார்.  பின்பு நான் களத்தில் குதித்து டி மெலோவின் கதைகள் சிலவற்றை வாசித்தேன். சந்திப்பின் திட்டமிடலின் துவக்க நாட்களில் இது தத்துவம் குறித்த சந்திப்பு என்பதுபோன்ற தோற்றம் எனக்கு கிடைத்ததால் நானும் உள்ளே மூக்கை நுழைத்துவிட்டிருந்தேன். டி மெலோ கதைகளுக்குப் பின் &#8216;கிறீத்துவ இறையியலின் வன்முறையை அடிப்படையில் கொண்டதா?&#8217; என்ற பொருள்படும் ஒரு திட்டமிடப்படாத விவாதம் நடைபெற்றது. இரசிக்கும்படி இருந்தது.</p>
<p>பின்பு ஜெ இந்திய தத்துவங்களை எப்படி ஒப்பிடுவது என்பது குறித்து பேசினார். <a title="Permanent Link to நான்கு அடிப்படை பேசுபொருட்கள்…" rel="bookmark" href="http://www.jeyamohan.in/?p=7910">நான்கு அடிப்படை பேசுபொருட்கள்…</a> எனும் தலைப்பில். வழக்கம்போல தகவல்களும் கருத்துக்களும் செறிந்ததொரு பேச்சாக அமைந்தது. அந்த உரையை தயாரிக்க அவருக்கு அதிகபட்சம் 20நிமிடங்கள்கூடத் தேவைப்பட்டிருக்காது என்பது என் கணிப்பு. அவர் பத்து நிமிடங்களில் உருவாக்கிய உரைகள் தமிழின் முக்கிய படைப்பாளிகள் மத்தியிலேயே வரவேற்பு பெற்றதை நேரடியாகக் கண்டிருக்கிறேன்.</p>
<p>முதல்நாள் மதியம் கவிதைகளுக்குள் வந்தோம். இந்த முறை தமிழ் கவிதை பரப்பிற்கு ஒரு அறிமுகம் தரும் பொருட்டு கால வரிசையில் கவிதை வாசிப்பு நடத்தலாம் என முடிவெடுத்திருந்தனர். சங்கப்பாடல்களிலிருந்து துவங்கியது அமர்வு. நற்றிணை குறுந்தொகையிலிருந்து பாடல்கள் வாசிக்கப்பட்டன.</p>
<p>கவிதை அமர்வுகளின் நடைமுறை இப்படி இருந்தது. முதலில் கவிதை இரண்டு அல்லது மூன்று முறைகள் வெவ்வேறு நபர்களால் வாசிக்கப்பட்டது. பின்பு அந்தக் கவிதையின் பின்புலம், சூழல், அதன் வகை, அல்லது அதை புரிந்துகொள்ளும் முகமாய் சில சிந்தனைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன, தேவைப்பட்ட இடத்தில் அருஞ்சொற்பொருள் கிடைத்தது. பின்பு கவிதை குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டன. இதில் வெறும் பொருள் விளக்கம் மட்டுமன்றி பல நுண்ணிய இரசனைகளும் தொடர்புள பிற இலக்கியங்களிலிருந்து மேற்கோள்களும் வந்துகொண்டே இருந்தன. இதற்குப்பின் கவிதை மீண்டும் சிலமுறைகள் படிக்கப்பட்டது.</p>
<p>சங்கப்பாடல்கள் நேரடி வாழ்க்கை குறிப்புக்களை உணர்த்துவனவாயும் அதே சமயம் சில நுட்பமான கவிதைக் கூறுகளுடையனவாயும் இருந்தன. அவற்றில் அபரிமிதமாக உரிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை நான் சுட்டிக்காட்டினேன். அந்த அதீத பயன்பாடே தற்கால கவிதைகளில் அவற்றை இல்லாமலே செய்துவிட்டன என்றார் ஜெ.</p>
<p>இரண்டாம் நாள் காலை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் &#8216;கம்பரின் இராமாவதாரம்&#8217; எனும் தலைப்பில் கம்பராமாயணத்திலிருந்து 18 பாடல்களைப் பகிர்ந்தார். மிகவும் சிறப்பானதொரு அனுபவமாய் அமைந்தது இது. இராமாயணக் கதை பலருக்கும் பரிட்சயமானதாயினும் கம்பனின் மொழியில் அது வேறொரு மிஅக் நுட்பமான கதையாகவே தென்பட்டது. இதில் பல பாடல்களும் மிக எளிதாகப் புரிந்துகொள்ளும்படியே இருந்தன. கம்பன் இடங்களை எப்படி விவரிக்கிறான், வேண்டல், மொழிதல், பகர்தல், முழக்கமிடல் போன்ற உரையாடல்களை எப்படி அமைக்கிறான், நிகழும் பெரும் நாடகத்தின் உச்சக் காட்சிகளை எப்படி விவரிக்கின்றான் என்பவற்றுக்கு உதாரணங்களாய் அந்தத் தொகுப்பு அமைந்திருந்தது. இராமாயணம் மாந்தர்களின் வாழ்வைச் சொல்வதால் ஒரு நடகத்தைக் காண்பதுபோலவே அந்த அமர்வு அமர்ந்திருந்தது. நாஞ்சில் நாடன் அவர்களும் கூடவே ஜடாயு எனும் நண்பரும் ஒரு சிறப்பான அமர்வை செய்து முடித்த பின்பு அனைவருக்குமே கம்பனின் மேல் அபார பிரியம் ஏற்பட்டிருந்தது. கம்பராமாயணத்துக்கென்று தனி சந்திப்பொன்றை திட்டமிடத் துவங்கிவிட்டனர் நண்பர்கள்.</p>
<p>அடுத்ததாக வைணவப் பாடல்கள். நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் பாடல்களிலிருந்து சிலவற்றை நண்பர் ஜடாயு பகிர்ந்துகொண்டார். இவற்றினூடாக வைணவ தத்துவ சிந்தனை எப்படி வளர்த்தெடுக்கப்பட்டது என்பதற்கு சில உதாரணங்களைத் தந்தார். எனக்கு மலைப்பாகவே இருந்தது. பல உள்ளுணர்வுகளைத் தரும் ஒரு சிறு சிற்பத்தைப்போல போல ஒரு புகைப்படம் போல, ஒரு ஓவியம் போலவே ஒரு கவிதையும் அமைந்துள்ளது என்பதை உணர முடிந்தது. ஆண்டாள் பாடல்கள் புனித ஜானின் கவிதைகளுக்கும் பழைய ஏற்பாட்டின் சாலமனின் பாடல்களுக்கும் உள்ள இறைவனை காதலனாக (காதலியாக) உருவகப்படுத்தும் மரபில் ஒத்திருந்தன. வைணவப் பாடல்களின் கவி நயத்தையும் தத்துவ உள்ளடக்கத்தையும் மிகச் சிறப்பாக ஜடாயு விவரித்தார்.</p>
<p>அடுத்தது சில சைவப்பாடல்களை ஜெ வாசித்து விளக்கினார். அவற்றில் கவிதை நயத்தை விட நேரடி தத்துவ உள்ளடக்கமே அதிகமாயிருந்ததுபோலத் தோன்றியது. திருமந்திரம், அப்பர் தேவாரம், திருவாசகம், தாயுமானவர், சிவவாக்கியர் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. சித்தர் பாடல்கள் சைவ மரபில் வந்தவையா என்ற விவாதமும் எழுந்தது. அவை உருவ வழிபாட்டுக்கு எதிரானவையாக வந்தன சைவ மரபுப்பாடல்களே என்பதுபோல ஜெ சொன்ன நியாபகம்.</p>
<p>அடுத்ததாக திராவிட இயக்க காலகட்டப் பாடல்கள் சில செல்வப்புவியரசுவால் தொகுக்கப்பட்டிருந்தன. பாரதிதாசனுக்குப் பின்வந்த கவிஞர்களின் கவிதைகள் சில. முடியரசனின் &#8216;நிலவு&#8217;, சுரதாவின் &#8216;சொல்லடா&#8217;, கம்பதாசனின் &#8216;அருணோதயம்&#8217;, தமிழ் ஒளியின் &#8216;மழைக்காலம்&#8217;, கண்ணதாசனின் &#8216;காலக்கணிதம்&#8217;, ச.து.சு. யோகியின் &#8216;ஆசைப்பட்டேன், திருலோக சீதாராமின் &#8216;ஒளியமுதம்&#8217;, சாமி. சிதம்பரனாரின் &#8216;முருகு&#8217;, கவிமணி தேசிக விநாயகனின் &#8216;நினைப்பதின்று! முடிவதொன்று!&#8217;, ம. லெனின் தங்கப்பாவின் &#8216;பகைமை எதற்கு?&#8217; என பத்து கவிதைகள் வாசிக்கப்பட்டன. இவற்றின் எளிமையும், நேரடித் தன்மையும் ஜனநாயகம் உருவாகிய காலகட்டத்தில் உலகளவில் கவிதைகளில் இருந்த போக்குதான் என்று ஜெயமோகன் கூறினார். நம் கறுப்பு வெள்ளை திரைப்பட வசனங்கள் இவற்றின் தொடர்ச்சியாகப் பட்டது எனக்கு.</p>
<p>மூன்றாம் நாள் காலை சந்திப்புக்கு வந்திருந்த கவிஞர்களின் புதுக்கவிதைகள் கவிஞர்களாலேயே வாசிக்கப்பட்டது. கவிஞர்கள் தேவதேவன், இசை, இளங்கோ கண்ணன், மோகனரங்கன்,  இராவணன், வீணாப்போனவன், செல்வப்புவியரசு ஆகியோரின் கவிதைகள் வாசிக்கப்பட்டன. வாரப்பத்திரிகைகளின் &#8216;புதுக் கவிதைகளையே&#8217; அதிகம் வாசித்திருந்த எனக்கு அது ஒரு ஆச்சர்யமான திறப்பாகவே அமைந்திருந்தது. சிலவற்றில் வெறும் படிமங்களே கவிதைகளாயிருந்தன, சிலவற்றில் எளிய ஒரு காட்சியிலிருந்து வாழ்வினை விரிக்கும் யுக்தியிருந்தது, இயற்கை கணிசமான கவிதைகளில் வந்துபோனது. சங்ககாலத்திலிருந்தே பாடப்பட்டு வரும் அதே பறவை அதே நிலா, பூ, காடு, மரம் இந்தக்காலத்திலும் பாடப்படுகிறது ஆயினும் இப்போதும் இயற்கை நம்மை வியக்கச் செய்துகொண்டேயிருக்கிறது. நாம் இயற்கையை இன்னும் பாடி முடிக்கவில்லை என்பதுதானே உண்மை. சம்பவங்களை வித்தியாசமான கோணங்களில் பதித்தன சில, வரலாற்றை வேற்று கோணத்தில் கண்டதொரு கவிதை, செஸ் விளையாட்டை வைத்து பெண்ணியம் சொன்னது ஒன்று. மிகச் சிறப்பாக அமைந்திருந்தது இந்த அமர்வும்.</p>
<p> அரங்குகளில் பார்வையாளர்களில் அதிகம் பேசிக்&#8217;கொன்றி&#8217;ருந்தது நாந்தான் என நினைக்கிறேன். ஒருவர் தனியே சந்தித்து &#8216;போதும்பா&#8217; என்றே சொல்லிவிட்டார். ஏனோ தெரியவில்லை தோன்றுவதை சொல்லாமலிருக்க முடியவில்லை. அப்படிப் பழகிக்கொள்ளவில்லை என்பது ஒரு குறையே. போர் அடித்திருக்க மாட்டேன் என நம்புகிறேன்.</p>
<p>இந்த சந்திப்பில் நண்பர்களை சந்தித்ததும் எழுத்தாளர்களுடன் உரையாடியதையும் அவர்களின் அறிமுகம் கிடைத்ததையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். தமிழகம் முழுதுமிருந்து பல பின்புலங்கலிலிருந்தும் பலரும் இலக்கியத்தில் இத்தனை ஆர்வம் கொண்டு வந்திருந்தது வியக்க வைத்தது. தாய்லாந்த்திலிருந்து ஒருவர் இந்த சந்திப்புக்கென்றே வந்திருந்தார். அவர் அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழர். கனடாவிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த ஒருவரும் பங்குகொண்டார். (அரசியல் காரணங்களுக்காக பல பெயர்களையும் தவிர்திருக்கிறேன்.) &#8216;வசதி வாய்ப்பிருக்கும் நாமெல்லாம் ஏன் சினிமா தொலைக்காட்சி போன்ற பாப்புலர் ஊடகங்களிலேயே நிறைவு பெற்றுவிடுகிறோம்?&#8217; எனக் கேள்வி எழுந்தது. என் ஸ்பீடுக்கு அடுத்த ஆறு மாதங்கள் வாசிக்க புத்தகங்கள் வாங்கிக்கொண்டேன்.</p>
<p> ஜெயமோகன் மலைக்க வைக்கும் ஒரு ஆளுமை. அவரின் பேச்சில் தகவல்களும் அனுபவக் குறிப்புகளும் தத்துவங்களும் வரலாறும் துணுக்குகளும் ஜோக்குகளும் கலவையாக வந்துகொண்டேயிருக்கும். யாரை நோக்கியும் அவருக்குப் புரியும் வகையிலும் அவர் சிலாகிக்கும் வகையிலும் அவரால் பேச முடியும் அப்படி அவருடன் நடைபயணங்களில் எல்லோரும் பேசியும் கேட்டும் கொண்டிருந்தோம். அதுவே ஒரு தனியான சிறப்பம்சம் எனலாம். இதை ஒரு இரசிக மனோபாவத்தில் நான் சொல்லவில்லை. இணையத்துக்கு முன்பு அவர் எழுதிய புத்தகங்களில் 5%கூட நான் படித்ததில்லை என்பதே உண்மை. ஆனால் அவரின் நட்பும் அவரின் நண்பர்களின் நட்பும் எனக்குக் கிடைத்தது இன்பமானதொரு நிகழ்வே. இதற்குமேல் அடக்கமாக என்னால் இதைச் சொல்ல முடியாது.</p>
<p>இரண்டாம் நாள் இரவு கவிஞர் தேவதேவன் ஐயாவுடன் இரண்டு மணிநேரங்கள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தேன். அவரின் கவிதைகள் சிலவற்றை நான் மொழிபெயர்த்ததைக் காட்டினேன். எத்தனை எளிய! மனிதர் எத்தனை அரிய கவிதைகள்! நாஞ்சிலாரும் மிகுந்த கனிவோடு  பழகினார். குறிப்பாக எனது அமர்வு நடைபெறும்போது சிறப்பாக தலையசைத்து அங்கீகரித்தார். ஊர்க்கார பாசம்ணா சும்மாவா?</p>
<p>வார்த்தைகள் கொண்டு ஒருபோதும் ஒரு அனுபவத்தை முழுதாகச் சொல்லமுடிவதில்லை என்பதை உணர்கிறேன். நான் சொல்ல வந்தது என்னென்னவோ சொல்ல முடிந்தது இத்தனையே.</p>
<p>கடலைப் பார்த்தவர்கள், மீன்பிடித்தவர்கள், காற்று வாங்கியவர்கள், கால் நனைத்தவர்கள் முத்தெடுத்தவர்களின் கதைகளைக் கேட்டு மலைத்து நிற்கிறேன். அலைகளின் சப்தம் கேட்கிறது, உப்புநீர் வாசம் அறிகிறேன், சாரல் விழுவதுபோல தோல்களில் நுண்ணிய ஈரம் படர்கிறது. விரைவில் கடல்கண்டு கால்நனைப்பேனாக.</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=544&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&amp;p=544</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவுக் களவாணி ~ Inception</title>
		<link>http://cyrilalex.com/?p=534</link>
		<comments>http://cyrilalex.com/?p=534#comments</comments>
		<pubDate>Tue, 27 Jul 2010 06:34:33 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[திரை விமர்சனம்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=534</guid>
		<description><![CDATA[உலக கார்ப்பரேஷன்கள் பச்சைக் காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. உலகின் பலம்வாய்ந்த அரசாங்கங்கள் இன்று கார்பரேஷன்களின் கைப்பொம்மைகள். நமூரில் சாதி ஓட்டுக்காக செய்யப்படும் அரசியல் சமரசங்கள் பெரிய நாடுகளில் கார்பரேட் ஆதரவுக்காக செய்யப்படுகின்றன. இந்த சர்வாதிகார வியாபாரிகளின் அதிமுக்கிய மூலப்பொருள் &#8216;தகவல்&#8217;. இன்று பல வழிகளில் நம்மைப்பற்றிய தகவல்களை கார்ப்பரேஷன்கள் பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. கருத்துக்கணிப்புக்களில் சாதாரணமாகத் தோன்றும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கிறோம். ஆனால் அதிலிருந்து பலவிதமான தகவல்களை அவர்கள் பிரித்தெடுக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில் வியாபார முடிவுகளை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>உலக கார்ப்பரேஷன்கள் பச்சைக் காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. உலகின் பலம்வாய்ந்த அரசாங்கங்கள் இன்று கார்பரேஷன்களின் கைப்பொம்மைகள். நமூரில் சாதி ஓட்டுக்காக செய்யப்படும் அரசியல் சமரசங்கள் பெரிய நாடுகளில் கார்பரேட் ஆதரவுக்காக செய்யப்படுகின்றன.</p>
<p>இந்த சர்வாதிகார வியாபாரிகளின் அதிமுக்கிய மூலப்பொருள் &#8216;தகவல்&#8217;. இன்று பல வழிகளில் நம்மைப்பற்றிய தகவல்களை கார்ப்பரேஷன்கள் பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. கருத்துக்கணிப்புக்களில் சாதாரணமாகத் தோன்றும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கிறோம். ஆனால் அதிலிருந்து பலவிதமான தகவல்களை அவர்கள் பிரித்தெடுக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில் வியாபார முடிவுகளை எடுக்கிறார்கள். அதே போல நம்மைக் குறித்த தனிப்பட்ட தகவல்களையும் மிக எளிதாக பல வழிகளில் பெற்றுக்கொண்டே இருக்கின்றன தொழில் நிறுவனங்கள். ஒரு தேர்தலில் எந்தப் பகுதியில் எந்தக் கட்சி வெற்றிபெறும் எனும் தகவல் ஒரு பெரிய தொழில் நிறுவனத்துக்குத் தேவைப்படும் மிக முக்கியத் தகவல். அதேபோல ஒரு பகுதியிலிருக்கும் மக்களின் கல்வி, உழைப்பின் தரம், சமூகப் பழக்கங்கள் என பல தகவல்களையும் சேகரித்த பின்னரே அங்கு வியாபாரம் செய்ய முன்வருகிறார்கள். இப்படி இல்லாமல் செய்யும்போது பெங்காளிலிருந்து குஜராத்துக்கு ஓடவேண்டிவரும்.</p>
<p>தகவல் சேகரிப்பின் இன்னொரு முகம் &#8216;இன்டஸ்ட்ரியல் எஸ்பியனேஜ்&#8217; எனப்படும் தகவல் துப்பறிதல். அரசாங்கங்களின் ஒற்றர்களைப்போல தொழில்நிறுவனங்களும் ஒற்றர்களையும், துப்பறியும் நிபுணர்களையும் கொண்டு தன் போட்டியாளரின் நகர்வுகளைத் தெரிந்துகொள்வதும், அவர்களின் திட்டங்களை தோற்கடிப்பதும் நடக்கின்றன. &#8216;மிஸ்டர் பாரத்&#8217; படத்தில் கார்பன் பேப்பர் திருடுவது நியாபகம் வருகிறது.</p>
<p>இந்தப் பின்னணியைக் கொண்டு ஒரு அதிரடி த்ரில்லரை உருவாக்க முடியும். ஏற்கனவே சில படங்கள் வந்துள்ளன. கிரிஸ்டோபர் நோளன் இன்செப்ஷனில் இதை ஒரு சின்ன இழையாகக் கொண்டு ஒரு அற்புதமான அறிவியல் த்ரில்லரை உருவாக்கியுள்ளார்.</p>
<p>உங்கள் ஆழ்மனதில் ஒரு இரகசியம் புதைந்துள்ளது. அதை எப்படித் திருடுவது? அதற்கு உங்கள் கனவுக்குள்ளே நாங்கள்  நுழைந்தாகவேண்டும். கனவில்தான் ஆழ்மனம் வெளிப்படுகிறது. ஒருபடி மேலே போய் உங்களுக்கெனெ ஒரு கனவை நாங்களே வடிவமைத்துத் தருகிறோம். கனவில் உங்களுக்கு மிகப் பரிச்சயமான இடங்களும் பொருட்களும் தோன்றி உங்களுக்கு பாதுகாப்புணர்வைத் தருகின்றன. அங்கே ஒரு இரகசியமான இடத்தில் ஒரு பாதுகாப்புப் பெட்டகமொன்றை வடிவமைக்கிறோம். உங்கள் ஆழ்மனது அதை ஒரு பாதுகாப்பான இடமாக உணரும்போது அதில் உங்களின் மிகப்பத்திரமான இரகசியங்களை போட்டுவைத்துவிடுகிறது. உங்கள் கனவை நாங்களதானே வடிவமைத்தோம்? ஆகவே எங்களிடம் அந்தப் பாதுகாப்புப் பெட்டகத்தின் திறவுகோல் உள்ளது. இப்படித்தான் திருடுகிறோம் உங்கள் ஆழ்மனதின் இரகசியங்களை.</p>
<p>படத்தின் துவக்கத்தில் இந்த கனவுக் களவினை சொல்லிவிடுகிறார்கள். உரையாடல்கள் வழியே சொல்லப்பட்டாலும் இந்தப் பகுதியில் சுவாரஸ்யம் குறையவே இல்லை. இந்தக் கனவுக் களவினை நம்புவதா வேண்டாமா எனக் கேள்விகள் எழும் முன்னரே இரண்டாம் பகுதிக்குள் நம்மை கடத்திவிடுகிறார்கள்.</p>
<p>சரி! உங்கள் ஆழ்மனதிலிருந்து திருடுவது மிக எளிது.(நிஜமாவா?) ஆனால் அங்கே ஒரு கருத்தை விதைக்க முடியுமா? அதுதான் இரண்டாம் பகுதி. இன்செப்ஷன் என்பதற்கு துவங்கிவைத்தல் என்று பொருள். ஒரு கருத்தை, கோட்பாட்டை நம் ஆழ்மனது பக்கம் பக்கமான விவரணைகளாக உள்வாங்கிக் கொள்வதில்லை. ஒரு ஒற்றைவரி செய்தியாகத்தான் அது ஆழ்மனதில் ஊன்றியிருக்கிறது என்பது விளக்கப்படுகிறது. அந்தப் பக்கம் பக்கமான விவரணைகள் நம் நினைவில் இருக்கலாமே ஒழிய ஆழ்மனதில் அல்ல. அப்படி ஒற்றைவரியாய் விதைக்கப்பட்டதொரு கருத்திலிருந்து நாம் எடுக்கும் முடிவுகள் விளைகின்றன.</p>
<p>இறந்துபோன தன் தந்தை தனக்கு விட்டுச் செல்லும் ஒரு மாபெரும் தொழில் நிறுவனத்தை உடைத்து சிறியதாக்க மகனைத் தூண்டவேண்டும். அதற்கு அந்த மகன் தன் தந்தையைப் போல செயல்படக் கூடாது என்ற சிறிய கருத்தை அவனின் ஆழ்மனதில் உருவாக்கித் துவங்கிவைக்க வேண்டும். இதைச் செய்துமுடிக்க கனவுக் களவாணியான நம் நாயகனும் அவனது சிறு குழுவும் என்னென்ன செய்கிறார்கள் என்பதுவே இரண்டாம் பகுதி. (இந்தப் பயல்கள் ரெண்டுபேருக்கும் வயதே ஆகாதா?)</p>
<p>படம் பல இடங்களிலும் கனவுக்கும் நினைவுக்குமாய் பார்வையாளர்களைக் குழப்பாமல் தாவிச்செல்கின்றது. ஆனால் படத்தின் சில கதாபாத்திரங்களுக்கு கனவுலகமும் நினைவுலகமும் வேறுபடுத்த முடியாததாய் உள்ளது. கனவுலகில் நுழைந்த ஒருவர் அங்கிருந்து மீள முடியாமல் போனால்? அங்கேயே வாழ்ந்து வயதாகிச் சாகவேண்டியதுதான். அப்படிக் கனவுலகில் சாகும்போது அவர் நிஜ உலகுக்கு வந்துவிடலாம். ஆமாம்! கனவுலகிலிருந்து மீள ஒன்று நீங்கள் கனவில் கொல்லப்படவேண்டும் அல்லது கீழே விழவேண்டும்.</p>
<p>இப்படி மாறி மாறி கனவுக்கும் நினைவுக்கும் தவி வருபவர்கள் தாங்கள் எந்த உலகில் இருக்கிறோம் என எப்படித் தெரிந்துகொள்வது? அதற்கு ஒவ்வொருவரும் தனக்கு ஒவ்வொரு பொருளைக் கைகொள்ளவேண்டும். &#8216;டோட்டம்&#8217; எனப்படுகிறது அப்பொருள்.  பழங்குடியினரின் காவல் தெய்வங்களை டோட்டம் என அழைக்கிறார்கள். அந்தப் பொருள் நிஜ உலகில் ஒருமாதிரியும் கனவுலகில் வேறுமாதிரியும் செயல்படும். உதாரணமாய் கதாநாயகன் ஒரு கைப்பம்பரத்தை வைத்துள்ளான். கனவுலகில் அதைச் சுற்றிவிட்டால் நிற்காமல் சுழன்றுகொண்டேயிருக்கும். நிஜவுலகில் அது சுழன்று வீழ்ந்துவிடும்.</p>
<p>இப்படி பல சுவாரஸ்யமான தகவல்களோடு தர்க்கபூர்வமாக படம் எடுக்கப்பட்டுள்ளது. நம்மால் இந்தத் தகவல்கள் அனைத்தையும் உள்வாங்க முடிவதில்லை என்பதால் மீண்டும் மீண்டும் படம் பார்க்கத் தூண்டப்படுகிறீர்கள். படத்தின் களத்தைப்போலவே இந்தத் தகவல்களும் மிக ரசிக்கும்படியும், வியக்கும்படியும் உள்ளன. திரைக்கதை மிக நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. சற்று பிறழ்ந்தாலும் பார்வையாளர்களைக் கைவிட்டுவிட நேரிடும். அத்தனை கவனத்துடன் பார்வையாளர்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த விதமே படத்தின் தரத்தைச் சொல்லிவிடுகிறது.</p>
<p>இன்செப்ஷன் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போய் &#8216;வடக்கு வாசல்&#8217; இதழின் இலக்கிய மலர் 2008 இதழில் இருந்த சில சிறுகதைகளை படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய பூனை கதையும் அதில் வந்திருந்தது. அந்த இதழில் இந்திரா பார்த்த சாரதி ஐயா &#8216;பிரிவு&#8217; எனும் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கதைக்கும் இன்செப்ஷனுக்கும் ஒரு நேரடியான ஒப்புமை இருந்ததைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. கதையில் ஒரு வயதானவர் தன் மனைவியோடு மானசீகமாக வாழ்கிறார். அவள் அவரோடு வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நம்புகிறார். அந்தக் கனவை கலைக்க தன் மகள் விரும்பியபடி மனநல மருத்துவத்தை அணுக மறுத்துவிடுகிறார்.</p>
<p>அதேபோல இயல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசுகையில் ஒரு ஐடியா/கருத்து எப்படி சிறு தகவல்களாக, மேற்கோள்களின் வழியில் அல்லது சிறு நிகழ்வுகளின் விவரிப்புவழியாக ஒரு சமூகத்தின் ஆழ்மனதில் விதைக்கப்படுகிறது என்று பேசியது நினைவுக்கு வந்தது. அட எங்க ஊர்லேயும் இருக்காங்கல்ல கிரிஸ்டோஃபர் நோளன்கள்!</p>
<p>படத்தின் முடிவில் சிறுகதையின் திருப்பம்போன்றதொரு முடிச்சை வைக்கிறார் நோளன். நம் ஆழ்மனதில் கனவுகளையும் நினைவுகளையும் குறித்த சில கேள்விகளை விதைத்துவிடுகிறது இன்செப்ஷன்.</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=534&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&amp;p=534</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
		<item>
		<title>பத்துத்தலைவலி!</title>
		<link>http://cyrilalex.com/?p=525</link>
		<comments>http://cyrilalex.com/?p=525#comments</comments>
		<pubDate>Mon, 19 Jul 2010 11:16:43 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[திரை விமர்சனம்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=525</guid>
		<description><![CDATA[இந்த வார இறுதியில் ராவணன் படம் பார்க்கப் போயிருந்தோம். படம் முடிந்ததும் &#8216;வள வளண்ணு சொல்லாம ஒரே வார்த்தையில் சொல்லுங்க, படம் எப்படி?&#8217; என்றார் நண்பர். &#8216;பத்துத்தலைவலி!&#8217; என்றேன் விளையாட்டாக. இரு வாரங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டரை மணி நேரம் ஐந்து எழுத்துலக நண்பர்களுடன் இலக்கில்லா உரையாடல்கள். உரையாடலின்போது அங்கிருந்த நம் நண்பர் உத்தம எழுத்தாளர் (ஒருவர் உத்தமராக இருப்பது மோசமானதா என்ன? அப்படியே அழைப்போமாக.) &#8220;ஒருவர் ஒரு கருத்தை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div><a name="msg_8456a349b517ff1d"></a>இந்த வார இறுதியில் ராவணன் படம் பார்க்கப் போயிருந்தோம். படம் முடிந்ததும் &#8216;வள வளண்ணு சொல்லாம ஒரே வார்த்தையில் சொல்லுங்க, படம் எப்படி?&#8217; என்றார் நண்பர். &#8216;பத்துத்தலைவலி!&#8217; என்றேன் விளையாட்டாக.</div>
<div>இரு வாரங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டரை மணி நேரம் ஐந்து எழுத்துலக நண்பர்களுடன் இலக்கில்லா உரையாடல்கள். உரையாடலின்போது அங்கிருந்த நம் நண்பர் உத்தம எழுத்தாளர் (ஒருவர் உத்தமராக இருப்பது மோசமானதா என்ன? அப்படியே அழைப்போமாக.) &#8220;ஒருவர் ஒரு கருத்தை அல்லது கோட்பாட்டை நிராகரிக்க அதற்கான காரணங்களைச் சொல்லவேண்டும், ஆனால் ஒரு கலைப்படைப்பை நிராகரிக்க அல்லது அங்கீகரிக்க அதற்கான காரணங்கள் தேவையில்லை. &#8216;ஏனோ எனக்குப் பிடிக்கல&#8217;<br />
அல்லது &#8216;ஏனோ எனக்கு பிடிச்சிருக்கு&#8217; என்பது ஒரு கலைப்படைப்பை விமரிசிக்கப் போதுமானது&#8221; என்றார். ராவணன் அப்படித்தான் பலருக்கும் காரணம் சொல்லத் தெரியாத ஒரு கலைப்படைப்பாக இருக்கிறது. &#8216;படத்தில் ஏதோ மிஸ்ஸிங். என்னண்ணு தெரியல&#8217; என்றார் என் மைத்துனர்.</div>
<p>படம் மூன்று தளங்களில் நகர்வதாக நான் புரிந்துகொண்டுள்ளேன். ஒன்று லோக்கல் தாதா அல்லது தீவிரவாதி அல்லது நக்சலைட் அல்லது &#8230;. (யாருயா அவர்?) தன் தங்கையின் வாழ்வைக் குலைத்த போலிஸ் ஆஃபிசரின் மனைவியை கடத்திக்கொண்டு வருவதும் அவளை மீட்கவும் நடக்கும் ஒரு சாதாரண ஆக்ஷன் +பழிவாங்கும் (ஐ மிஸ் பழிவாங்கும் கதை சோ மச்!)  கதையின் தளம்.</p>
<p>இரண்டு அந்தக் காட்டுதாதாவுக்கும் கடத்தப்பட்ட ஆஃபிசரின் மனைவிக்குமிடையேயான ஒரு விவரிக்க முடியாத உறவு. (நமெக்கெல்லாம் ஒருதலைக் காதலென்றால் ராவணனுக்கு?)</p>
<p>மூன்றாவதாக ராவணன் எனும் பெயரைக் கொண்டிருப்பதாலும் கதையின் கரு மற்றும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கும் விதமும் இராமாயண காப்பியத்தை ஒத்திருப்பதால் அதற்கும் திரைப்படத்துக்குமான ஒப்பீடு.</p>
<p>இந்த மூன்று தளங்களையும் சேர்த்து படம் இயங்குவதால் பார்வையாளர்களால் கதையோடு ஈடுபாட முடியாமல் போய்விடுகிறது என்றே நினைக்கிறேன். பலரும் இராமாயணத்தினோடான ஒப்பீட்டில் இறங்கிவிட, இராவணனுக்கும் சீதாவுக்குமான புதிய உறவு வந்து பூசையில் நுழைந்துவிடுகிறது. இராவணன் என்ற டைட்டிலோடு வந்த படமானதால் இதை தவிர்ப்பது மிகவும் கடினமானது.</p>
<p>ஆக படத்தின் மிகப்பெரிய குறைபாடு அதன் தலைப்பாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். கர்ணனின் கதையை சொன்ன &#8216;தளபதி&#8217;யைப் போல, வெறும் முதல் இரண்டு தளங்களிலும் மட்டுமே இயங்கும் கதையை இயக்குனர் தந்துவிட்டு இராமாயண ஒப்பீட்டை நுண்ரசனையாளர்களுக்கு விட்டிருந்திருக்கலாம். அதற்கு வெறும் டைட்டிலை மாத்தினாலே போதுமாயிருந்திருக்கும். மற்றபடி கதையிலோ பாடல் வரிகளிலோ எந்த மாற்றமும் தேவையாயிருந்திருக்காது. அவை அப்படியே இருந்திருக்கலாம். இது மூன்றில் ஒரு குழப்பத்தை சாதாரண ரசிகர்களிடமிருந்து நீக்கியிருக்கலாம்.</p>
<p>இராமாயணக் கதையை பின்பற்றி மட்டுமே இந்தக் கதை எடுக்கப்பட்டிருந்தாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதற்கு சில மாற்றங்களைச் செய்யலாம். இராமாயணத்தில் மிக முக்கியமான பாத்திரம் லக்ஷ்மணன். அந்தப் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கலாம். லக்ஷ்மண ரேகை, மாயமான், ஜடாயு, பாலம், அனுமன் இலங்கைக்குத் தீயிடுவது,  போன்ற மிக பாப்புலரான விஷயங்கள் விடப்பட்டுள்ளன.  இவற்றை அந்தக் கதையின் சூழலில் சொல்வது எளிது. மாய மானை<br />
ராவண் பாத்திரம் போலிசின் கவனத்தை திருப்ப ஏதோ செய்வதாகக் கொண்டுவரலாம், அப்போது லக்ஷ்மணன் (இன்னொரு போலிஸ் அதிகாரி) ஒரு பாதுகாப்பு எல்லைக்குள்ளேயே நாயகியை இருக்கச் சொல்லிவிட்டுச் செல்லலாம். இராவணனை சந்திக்கும் கார்த்திக்(அனுமன்) ஒரு கயிற்றுச் சுருள் போன்ற இருக்கையொன்றில் அம்ர்ந்திருக்கலாம். சுவரஸ்யமாக இருந்திருக்கும். இப்படியாக கதை இராமாயணக் கதையை மட்டுமே ஒட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் மக்களால் இன்னும் சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என நம்புகிறேன். (என்ன &#8216;அது ஒரு இந்துத்துவப் பிரதி&#8217; என நான்குபேர் திட்டியிருப்பார்களாயிருக்கும்.) இதில் இராவணன் பாத்திரம் காதலில் விழுவதை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். காதல் இல்லாமல் படம் எடுப்பது கொலைக்குற்றமா என்ன?</p>
<p>வீராவின் காதலை படித்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது என்று படத்திலேயே சொல்லிவிடுகிறார்கள். 12 படித்த தம்பிக்குத் தெரிகிறது படிக்காத அண்ணனுக்குத் தெரியவில்லை. இதே குழப்பம்தான் படம்பார்ப்பவர்களுக்கும். அதைப் புரிந்துகொள்ள ஒரு நுண்ணிய ரசனை தேவைப்படுகிறது போலும். எனக்கெல்லாம் இது பிடிபடவே இல்லை. &#8216;பொறாமை&#8217; அது இது என்று ஏதேதோ தத்துவார்த்த வெளிகளில் அதை நிகழ்த்தப்பார்க்கிறார்கள்.  பிடிபடவில்லை. அதுவும் &#8216;தங்கையின் அகால மரணத்தின் வடு வாடாத நாயகன் இப்படி வழிவாரா?&#8217; என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. எததனை தத்துவார்த்தமாயிருந்தாலும் வழிகிறது வழிகிறதுதானே?</p>
<p>முதல் பாதியில் இராமாணத்தை ஒப்பிடும் குறுநிகழ்ச்சிகளை, பாத்திரங்களை இன்னும் சேர்த்திருக்கலாம். இதற்காகவே காத்திருந்த பக்கத்து சீட் பாட்டி கார்த்திக் பறப்பதைக் கண்டதும் &#8216;டேய் அனுமாரு&#8217; என்று கத்தியேவிட்டர்.</p>
<p>படமாக்கப்பட்ட விதத்தில் இராவணன் பல உலகப்படங்களையும் மிஞ்சிவிட்டது என்றே சொல்லவேண்டும். அத்தனை டெக்னிக்கல் நேர்த்தி. இது ஒரு அழகியல் படமேயன்றி யதார்த்த படம் அல்ல. ஒரு காட்சியில் அது எத்தனை யதார்த்தமாய் உளது என்பதைவிட  எத்தனை அழகாய் தோன்றுகிறது என்பதே முக்கியம் பெற்றிருக்கிறது. த மிஷன் எனும் தென்னமெரிக்க அருவி+காடுகளில் எடுக்கப்பட்ட படத்தை நினைவூட்டியது ராவணனின் படமாக்கல். கதாபாத்திரங்கள் கூட அழகியல் நோக்கோடேயே படைக்கப்பட்டிருக்கின்றன. த மிஷன் ஒரு யதார்த்தம் சொல்லும் அழகிய படம் என்பதையும் குறிப்பிட வேண்டும். உள்ளூரிலேயே படப்பிடிப்பை நிகழ்த்தி இங்கிருக்கும் அழகை திரையில் காட்டியிருப்பது பாராட்டத்தகுந்தது.</p>
<p>மணியுடனான சந்திப்பில் (தன்னை மணி என்று மட்டுமே அறிமுகம் செய்துகொண்டார்) அவரிடம் நண்பர் ஷாஜி நேட்டிவிட்டி குறித்து கேள்வி ஒன்றை கேட்டார். மணி அது இந்தியாவில் செய்வது எளிது என்றார். திருடா திருடாவின் வட இந்திய ஆடை உடுத்திய நெல்லைத்தமிழச்சி குறித்து நான் சொன்னபோது திருடா திருடா ஒரு &#8220;ஃபன்&#8221;/பொழுதுபோக்கு படம்தான் என்றார். உண்மைதான். அதுபோலவே ராவணனும் ஒரு மிகைப்படைப்பே.</p>
<p>இராமகாவியத்தை தற்காலக் கதையாக்கிச் சொல்வதற்கு ஏற்ற கதைக்களன் ஒன்றை உருவாக்கியதற்கு பாராட்டப்படவேண்டிய படைப்பாகவே ராவணன் உள்ளது. அதை மட்டுமே முழுமையாகச் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது ராவணன் எனும் டைட்டிலை நீக்கிவிட்டு திரன், வீரன், சூரன், &#8220;உலக<br />
நாயகன்&#8221; (டைட்டிலுக்கா பஞ்சம்) என ஏதேனும் ஒன்றோடு படம் வெளிவந்திருக்கலாம். அப்போது ஒரு வித்தியாசமான படமாக அமைந்திருக்கும். குழப்பங்கள் குறைந்திருக்கும். சீதை ராவணனோடே தங்கியிருந்தாலும்<br />
பிரச்சனையிருந்திருக்காது. (மணி வீட்டின் முன்பு இன்னொர் குண்டு விழுந்திருக்கலாம்.)</p>
<p>என்னதான் அலசினாலும் ஆராய்ந்தாலும் &#8216;படத்தில் புதியது ஏதொவொன்றை சொல்லவருகிறார்கள் நமக்குத்தான் பிடிபடமாட்டேன் என்கிறது&#8217; எனும் தோற்றம் இருந்துகொண்டேயிருக்கிறது. இதை யோசித்துக்கொண்டிருந்தால் பத்துத்தலைவலி வந்து சேரலாம் என்பதால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன் டண் டண் டண்டண்<br />
டணக்கா.</p>
<p><strong>பின் குறிப்பு 1:</strong> அமெரிக்காவில் பல பகுதிகளில் தமிழ் சினிமாக்களை தரம் குறைந்த, சவுன்ட் சிஸ்டங்கள் சரியில்லாத திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். சென்னை திரையரங்கில் படம் பார்த்தது சிறப்பான<br />
அனுபவமாய் அமைந்தது. உலகத்தரம்தான் போங்கள்.</p>
<p><strong>பின் குறிப்பு 2:</strong>எனக்கு மிகப் பிடித்த கதாபாத்திரம் பத்து தலைகள் கொண்ட இராவணன். கல்லூரிநாட்களில் &#8216;இராவணான் என் நாயகன்&#8217; என ஒரு கார்ட்டூன் புத்தகம் போடத் திட்டம் ஒன்று வைத்திருந்தேன். தேர்தல் நேரத்தில் ஒரு கார்ட்டூன் போட்டோம். பத்துத் தலை இராவணன் ஓட்டுப்போட வ்ந்துள்ளார். தேர்தல் அதிகாரி தொலைபேசியில் யாரிடமோ கேட்கிறார்,&#8221;சார் தலைக்கொரு ஓட்டா? இல்ல ஆளுக்கொரு ஓட்டா&#8221; என்று.</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=525&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&amp;p=525</wfw:commentRss>
		<slash:comments>21</slash:comments>
		</item>
		<item>
		<title>சென்னை</title>
		<link>http://cyrilalex.com/?p=521</link>
		<comments>http://cyrilalex.com/?p=521#comments</comments>
		<pubDate>Thu, 08 Jul 2010 04:19:25 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அலசல்]]></category>
		<category><![CDATA[தகவல்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=521</guid>
		<description><![CDATA[செம ட்ராஃபிக். முகப்பேரில் இருந்து பள்ளிக்கரணை அலுவலகம் 22கி.மீ வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆகிறது. வாகனங்கள் எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் ஒரு கீறலாவது உள்ளது. புத்தம் புதிய கார்களும் விலக்கில்லை. அவுட்டர் ரிங் ரோட்டில் முகப்பேரில் இருந்து தாம்பரத்துக்கு 20 நிமிடங்களில் வர முடிகிறது. ஆனால் மாலையில் கனரக யமன்கள் சுத்திக் கொண்டிருகின்றனர். மக்கள் higwayகளிலும் ராங் சைடில் வண்டி ஓட்டி வருகின்றனர். பளிச்சென்று &#8216;தலைப்பு விளக்கம்&#8217; (head லைட்டை இப்படித்தன் அரசின் தகவல் பலகை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>செம ட்ராஃபிக். முகப்பேரில் இருந்து பள்ளிக்கரணை அலுவலகம் 22கி.மீ வந்து<br />
சேர ஒன்றரை மணி நேரம் ஆகிறது. வாகனங்கள் எல்லாவற்றிலும் குறைந்தபட்சம்<br />
ஒரு கீறலாவது உள்ளது. புத்தம் புதிய கார்களும் விலக்கில்லை.</p>
<p>அவுட்டர் ரிங் ரோட்டில் முகப்பேரில் இருந்து தாம்பரத்துக்கு 20<br />
நிமிடங்களில் வர முடிகிறது. ஆனால் மாலையில் கனரக யமன்கள் சுத்திக்<br />
கொண்டிருகின்றனர். மக்கள் higwayகளிலும் ராங் சைடில் வண்டி ஓட்டி<br />
வருகின்றனர். பளிச்சென்று &#8216;தலைப்பு விளக்கம்&#8217; (head லைட்டை இப்படித்தன்<br />
அரசின் தகவல் பலகை ஒன்று குறிப்பிடுகிறது) போட்டால் எங்கே வேண்டுமானாலும்<br />
ஒட்டலாம் என்பது நம் டிராவல்ஸ் ஓட்டுநர்களின் நம்பிக்கை போலும்.</p>
<p>மற்றபடி சாலை மிகவும் வசதியாக உள்ளது. சுங்கம் இருவளி பயன்பாட்டுக்கு ரூ.<br />
45. தினசரி பயன்பாட்டுக்கு மிக அதிகம்.</p>
<p>விலைவாசியும் கதாநாயகர்களின் மீசையைப் போலவே உயர்ந்து நின்று பயம்<br />
காட்டுகிறது. ஒரு மாதம் குறைந்த பட்ச பெட்ரோல் செலவு ரூ. 5000.<br />
முகப்பேரில் 900ச. அடி வீட்டு வாடகை 12ஆயிரம். ஃபோன் + இன்டர்நெட்<br />
செலவுகள் மொத்தம் 3000 தாண்டிவிடும். 1கிலோ வவ்வால் மீன் ரூ. 130. கிலோ<br />
அரிசி 40+. 300 ரூபாய்க்கு பழங்கள் வாங்கினால் இரண்டு நாட்களுக்குக் கூட<br />
வராது. ஒருவேளை நான் மட்டும்தான் 100 ரூபாய்க்கு இன்னும் மதிப்புள்ளதாக<br />
நினைக்கிறேனோ என்னவோ. பத்தாயிரம் பத்தாயிரமாக ஏ.டி.எம்மில் எடுக்க<br />
வேண்டியுள்ளது.</p>
<p>ஒரு கார்பென்டரின் அரை நாள் கூலி ரூ 350.</p>
<p>வீட்டுக்குத் தேவையான சாமான்கள் சட்டிகளோடு செட்டிலாக ஆன செலவு இரண்டரை<br />
லட்சத்துக்கும் மேல், கார் + அட்வான்ஸ் + பள்ளி செலவு என இன்றைக்கு ஒரு<br />
சாதாரண இரண்டு படுக்கை அறை அடுக்கு மாடி வீட்டில் செட்டில் ஆக செலவு<br />
மொத்தம் 8லட்சத்துக்கருகில். வாங்கும் காருக்கும் செல்லும் பள்ளிக்கும்<br />
ஏற்ப நீட்டலாம் குறைக்கலாம்.</p>
<p>என்னதான் விலைவாசி எகிறினாலும் எல்லா கடைகளிலும் கூட்டம் கூட்டம் அதி<br />
கூட்டம்.</p>
<p>சென்னை பண்பலையில் சில நல்ல ஜாக்கிகள் இருக்கிறார்கள். ஆனால் வெறும்<br />
பொழுதுபோக்கு அம்சங்களே உள்ளன. உருப்படியான விஷயங்களைக்கூட கேலியாகவே<br />
பேசிக்கொண்டிருக்கின்றனர்.</p>
<p>தொலைக்காட்சியில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. மெதுவாக உயர் தர தொலைக்<br />
காட்சி சிக்னல்கள் வர ஆரம்பித்துள்ளன. நான் ஏர்டெல் டி.டி.கெச்ல்<br />
எம்பெக்4 நுட்பத்தில் பார்க்கிறேன். என்ன இருந்தாலும் அதே சேம் ஓல்ட்<br />
நிகழ்ச்சிகள்தான். நீயா நானா பிடித்திருக்கிறது. அங்கே நடக்கும்<br />
விவாதங்கள் சிலசமயங்களில் சலிப்பூட்டலாம் இருப்பினும் நம்மை சிந்திக்க<br />
வைக்கின்றன தலைப்புக்கள். இன்னும் சீராக தொ. கா பார்க்க ஆரம்பிக்கவில்லை.</p>
<p>குழந்தைகளுக்கென்று தமிழில் நிகழ்ச்சிகளை தயாரிக்காமல் மொழிபெயர்ப்பு<br />
நிகழ்ச்சிகளே அதிகம் ஒளிபரப்புகிறார்கள். அவை சலிப்பூட்டுகின்றன. நம்<br />
குழந்தைகளுக்கு தமிழில் நிகழ்ச்சிகள் தயாரிக்க ஆட்கள் இல்லையா? சேம் சேம்<br />
பப்பி சேஎம். செம்மொலியான டமில் மொலியாம் என ஏன் அவன் பாடமாட்டன்?</p>
<p>சென்னை மேம்பாலங்கள் போக்குவரத்தை சிறிது மேம்மடுத்தியுள்ளன என்று<br />
சொல்லலாம். இல்லையேல் இருக்கும் இத்தனை வாகனங்களும் ஒரு இடமும் போய் சேர<br />
முடியாது.</p>
<p>விவேக் பட்டியலிட்டவர்களை விட அதிகமான பேர் ரோட்டை தோண்டிவைத்துள்ளனர்.<br />
தோண்டிய ரோட்டை மூடிவிடுவதோடு சரி வேலையோடு வேலையாக ரோட்டில் மீண்டும்<br />
தார் போட்டுவிட்டால் என்ன?</p>
<p>பல கடைகளும் நேர்த்தியாக உள்ளன. சிப்பந்திகள் சீரான உடையில் உள்ளனர்.</p>
<p>ஆங்காங்கே  பூங்காக்கள் பல நிறுவப்பட்டுள்ளன. பளிச்சென்று இவை<br />
காணப்படுகின்றன. பலரும் வாக்கிங் போக இவற்றை பயன்படுத்துகிறார்கள். நல்ல<br />
விஷயம்.</p>
<p>பல மால்கள் வந்துள்ளன.</p>
<p>பழைய திரையரங்குகள் பலவும் புதுப்பிக்கப்பட்டு புது படங்கள்<br />
வெளியிடப்படுகின்றன குறிப்பாக வில்லிவாக்கம் போன்ற முன்பு தூரமானவையாக<br />
கருதப்பட்ட இடங்களில்.</p>
<p>ஐ.டி யில் எல்லோரையும் பென்ட் எடுக்கிறார்கள். 9மணி நேரம் கட்டாயம் வேலை<br />
செய்ய வேண்டும் + குறைந்த பட்சம் 2மணி நேரமாவது பயணம் ஆக 11 மணி நேரம்<br />
காலி.</p>
<p>எல்லாம் குறையாகவே சொல்லிட்டேனோ? இதுக்கெல்லாம் மத்தியில இன்பம் நிச்சயம்<br />
இருக்குது. குறிப்பா வாழ்க்கை உயிரோட்டமுள்ளதா இருக்குது. சோதனைகளை,<br />
சவால்களை சந்திக்காத வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என<br />
உணர்ந்திருக்கிறேன். இந்த புது மாப்பிள்ள முறுக்கு தேனிலவு தாண்டியும்<br />
நீடிக்கும் என நம்புகிறேன்.</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=521&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&amp;p=521</wfw:commentRss>
		<slash:comments>21</slash:comments>
		</item>
		<item>
		<title>குளிர்காலக் கவிதைகள்</title>
		<link>http://cyrilalex.com/?p=510</link>
		<comments>http://cyrilalex.com/?p=510#comments</comments>
		<pubDate>Fri, 08 Jan 2010 17:38:49 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[வகைப்படுத்தாதவை]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=510</guid>
		<description><![CDATA[அலுவலத்துக்கு வெளியே எடுத்த படம். அலுவலத்துக்கு வரும் வளியில் தோன்றிய கவிதைகள். காலநிலை நொடிக்கு மூன்று கார்கள் செல்லும் இந்தச் சாலையோரத்தில் இரண்டடி பனிக்குவியலில் கால்தடங்கள். நடுங்கியபடியே அங்கே நடந்து சென்றவர் யார்? வேலி தாண்டி ஓடி வந்த மெக்சிக்கரா? வீடற்ற கறுப்பரா? வாய்ப்புகளை மறுத்து விட்ட வெள்ளைக்காரரா? அந்த வெள்ளைத் தாளில் தெரிவது ஏழ்மையின் காலெழுத்துதானா? இல்லை இன்னும் ஓட்டுநர் உரிமம் வாங்காத இந்திய மென்பொருளாளரின் இயலாமையா? சற்று நேரத்தில் அதுவும் அழிந்து போகும் என்கிறது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://cyrilalex.com/wp-content/uploads/2010/01/Snow.jpg" target="_blank" title="Snow"><img src="http://cyrilalex.com/wp-content/uploads/2010/01/Snow.jpg" alt="Snow" width="150" height="200" class="attachment wp-att-511" /></a></p>
<p>அலுவலத்துக்கு வெளியே எடுத்த படம்.</p>
<p>அலுவலத்துக்கு வரும் வளியில் தோன்றிய கவிதைகள்.</p>
<p><strong>காலநிலை</strong></p>
<p>நொடிக்கு மூன்று கார்கள் செல்லும்<br />
இந்தச் சாலையோரத்தில்<br />
இரண்டடி பனிக்குவியலில்<br />
கால்தடங்கள்.</p>
<p>நடுங்கியபடியே அங்கே<br />
நடந்து சென்றவர் யார்?</p>
<p>வேலி தாண்டி ஓடி வந்த மெக்சிக்கரா?<br />
வீடற்ற கறுப்பரா?<br />
வாய்ப்புகளை மறுத்து விட்ட வெள்ளைக்காரரா?</p>
<p>அந்த வெள்ளைத் தாளில் தெரிவது<br />
ஏழ்மையின் காலெழுத்துதானா?</p>
<p>இல்லை இன்னும் ஓட்டுநர் உரிமம்<br />
வாங்காத இந்திய மென்பொருளாளரின்<br />
இயலாமையா?</p>
<p>சற்று நேரத்தில்<br />
அதுவும் அழிந்து போகும்<br />
என்கிறது வானொலி.</p>
<p>-o0o-</p>
<p><strong>பனி வீழ்ச்சி!</strong></p>
<p>என்ன பாரம் தாங்காமல்<br />
வந்து வீழ்ந்து கிடக்கிறது<br />
மேகம்?</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=510&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&amp;p=510</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
		<item>
		<title>கனி’வான’மொழி!</title>
		<link>http://cyrilalex.com/?p=502</link>
		<comments>http://cyrilalex.com/?p=502#comments</comments>
		<pubDate>Thu, 24 Dec 2009 20:33:52 +0000</pubDate>
		<dc:creator>சிறில் அலெக்ஸ்</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[இயேசு]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[பாடல்]]></category>

		<guid isPermaLink="false">http://cyrilalex.com/?p=502</guid>
		<description><![CDATA[ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி ’மார்கழியின் மடியில்’ எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் Silent Nightன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே. மார்கழியின் மடியிலே மாடடையும் குடிலிலே மானுடத்தின் மீட்பனாய் அன்னை மரியின் அணைப்பினிலே இதழில் புன்னகை பூத்திருக்க நிலவின் கதிர்போல கண்வளராய் அழகே. மார்கழியின் மடியிலே வானின் வெள்ளி அழைக்குதந்த அழைத்து வந்த ஞானியர் உன்னை வணங்கி நின்றார் காலமே உறைந்ததை மறந்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி ’மார்கழியின் மடியில்’ எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் Silent Nightன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே.</p>
<p>மார்கழியின் மடியிலே<br />
மாடடையும் குடிலிலே<br />
மானுடத்தின் மீட்பனாய்<br />
அன்னை மரியின் அணைப்பினிலே<br />
இதழில் புன்னகை பூத்திருக்க<br />
நிலவின் கதிர்போல<br />
கண்வளராய் அழகே.</p>
<p>மார்கழியின் மடியிலே<br />
வானின் வெள்ளி<br />
<del datetime="2009-12-25T12:45:58+00:00">அழைக்குதந்த</del> அழைத்து வந்த<br />
ஞானியர் உன்னை வணங்கி நின்றார்<br />
காலமே உறைந்ததை மறந்து நின்றார்<br />
வேதமே மெய்ப்பொருளே<br />
கண்வளராய் அழகே.</p>
<p>கால காலமாக<br />
தடங்கள் தேடினோமே<br />
கனவு மெய்ப்படவே<br />
கண்ணே வந்தாயோ?</p>
<p>மார்கழியின் மடியிலே<br />
வானவர்கள் பண்ணிசைக்க<br />
அன்பில் மானுடம் நெகிழ்ந்திடவே<br />
வான்மழையாய் வந்த இறையருளே<br />
வான்சுடரே எழிலே<br />
கண்வளராய் அழகே.</p>
<p>பாடலைக் <a href="http://www.manavai.com/songs/maarhazhimadiyil/4.mp3">கேட்க.</a></p>
<p><img src="http://www.manavai.com/songs/maarhazhimadiyil/12.JPG" alt="Cover" width="300"/></p>
<p><strong></p>
<p>பின் குறிப்பு: ஜெயமோகனின் கிறிஸ்துமஸ் கவிதை <a href="http://www.jeyamohan.in/?p=5985">’கடவுளின் மைந்தன்’ </a></p>
<p></strong></p>
<p>               &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;o00o&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<img src="http://cyrilalex.com/?ak_action=api_record_view&id=502&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cyrilalex.com/?feed=rss2&amp;p=502</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
<enclosure url="http://www.manavai.com/songs/maarhazhimadiyil/4.mp3" length="5720064" type="audio/mpeg" />
		</item>
	</channel>
</rss>
